Just In
- 3 hrs ago 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- 5 hrs ago தளர்ந்து போன சருமத்தை இறுக்கமாக்கி ஜொலிக்கிற மாதிரி மாத்த ஆசைப்படுறீங்களா? இந்த இயற்கை பொருட்களை யூஸ் பண்ணுங்க
- 6 hrs ago திருமணம் ஆக இருக்கும் இளம்பெண்கள் இந்த ஜூஸை குடியுங்கள்.. முகம் பொலிவுறும்..!
- 6 hrs ago சப்பாத்திக்கு ஒருடைம் உருளைக்கிழங்கு வெச்சு இப்படி கிரேவி செஞ்சு பாருங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
Don't Miss
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
காலையில எழுந்ததும் இதெல்லாம் பாத்துடாதீங்க... இல்லன்னா அந்த நாளே மோசமா இருக்குமாம்...
பொதுவாக ஒருவரது தினம் மோசமாக இருந்தால், அனைவரது வாயில் இருந்தும் முதலில் வருவது 'இன்று யார் முகத்தில் முழித்தோமோ என்று தெரியவில்லை' என்பதாகவே இருக்கும்.
பொதுவாக ஒருவரது தினம் மோசமாக இருந்தால், அனைவரது வாயில் இருந்தும் முதலில் வருவது 'இன்று யார் முகத்தில் முழித்தோமோ என்று தெரியவில்லை' என்பதாகவே இருக்கும். நாம் அனைவருமே காலையில் எழுந்ததும் இன்றைய தினம் சிறப்பாக இருக்க வேண்டுமென்ற எண்ணத்தோடு தான் எழுவோம். இதனாலேயே பலர் காலையில் எழுந்ததும் கடவுளைத் தொழுது கொண்டே எழுவார்கள். இது ஒரு நல்ல விஷயம் தான். ஆனால் இப்படி கடவுளின் நாமத்தை உச்சரித்தவாறு எழும் போது, ஒருசிலவற்றைக் காண்பதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், அவை உங்களின் தினத்தையே பாழாக்கிவிடும்.
இக்கட்டுரையில் ஒருவர் காலையில் எழும் போது எதையெல்லாம் முதலில் பார்க்கக்கூடாது என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளது. வாஸ்துப்படி இந்த விஷயங்களை காலையில் எழுந்ததும் பார்த்தால், அவை அன்றைய தினத்தை மோசமான நாளாக ஆக்கும். இப்போது அவை என்னவென்பதைக் காண்போம் வாருங்கள்.
கண்ணாடியைப் பார்க்காதீர்கள்
ஒருவர் காலையில் எழுந்ததும் கண்ணாடியைப் பார்க்கக்கூடாது. அவ்வாறு காண்பது கெட்டதாக கருதப்படுகிறது. வாஸ்து சாஸ்திரத்தின் படி, காலையில் கண்ணாடியைப் பார்த்தால், இரவின் எதிர்மறை சக்தி தானாக உள்ளிழுக்கப்படும். ஆகவே கண்ணாடியைக் கண்டால், நாள் முழுவதும் எண்ணங்களில் எதிர்மறை ஆற்றல் நிறைந்து, எந்த வேலையும் செய்ய முடியாமல் அவதிப்படக்கூடும்.
அழுக்கு பாத்திரங்கள்
வாஸ்துப்படி, இரவு தூங்கும் முன் சமையலறையை சுத்தம் செய்து விட்டு, அழுக்கு பாத்திரங்கள் இருந்தால் அவற்றைக் கழுவிய பின்னரே தூங்க வேண்டும். ஏனெனில் அழுக்கு பாத்திரங்கள் வீட்டில் எதிர்மறை ஆற்றலை அதிகரிக்கும். இரவு நேரத்தில் அழுக்குப் பாத்திரங்களைப் போட்டு விட்டு, மறுநாள் காலையில் எழுந்ததும் அந்த அழுக்கு பாத்திரங்களைப் பார்த்தால், அது அன்றைய நாளையே கெடுத்துவிடும். குறிப்பாக அழுக்கு பாத்திரங்களை காலையில் எழுந்ததும் பார்த்தால், அன்றைய தினம் முழுவதும் டென்சனாகவே இருக்கும். ஆகவே எப்போதும் இரவு தூங்கும் முன் சமையலறையை சுத்தம் செய்து விட்டு தூங்குங்கள். இதனால் மறுநாள் உங்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும்.
நிழலைப் பார்க்காதீர்கள்
காலையில் எழுந்ததும் உங்களின் நிழலையோ அல்லது வேறு ஏதேனும் ஒன்றின் நிழலையோ பார்க்கக்கூடாது என்று கூறுவார்கள். ஏனெனில் காலையில் எழுந்ததும் நிழலைப் பார்த்தால், அன்றைய தினம் முழுவதும் டென்சனாகவும், அச்சத்துடனும், கோபத்துடனும் இருப்பீர்கள். ஆகவே இதைத் தவிர்த்திடுங்கள்.
மூடிய கடிகாரம்
வாஸ்து சாஸ்திரத்தின் படி, மூடிய கடிகாரத்தை காலையில் எழுந்ததும் காண்பது கெட்டதாக கருதப்படுகிறத. காலையில் எழுந்ததும் ஒருவர் மூடிய கடிகாரத்தைக் கண்டால், அன்றைய தினமே பாழாகும். இது தவிர, ஊசி, நூல் போன்றவற்றை பார்ப்பதையும் தவிர்க்க வேண்டும்.
காலையில் எழுந்ததும் எதையெல்லாம் பார்க்கலாம்?
வாஸ்து சாஸ்திரத்தின் படி, ஒருவர் காலையில் எழுந்ததும் கைகளைத் தேய்த்து உள்ளங்கைகளைப் பார்ப்பது நல்லதாக கருதப்படுகிறது. அதுவும் உள்ளங்கைகளைப் பார்க்கும் போது காயத்ரி மந்திரம் அல்லது வேறு ஏதேனும் மந்திரங்களைச் சொல்வது இன்னும் நல்லது. காலையில் எழுந்து கண்களைத் திறந்து பார்க்கும் போது, முதலில் கடவுளின் போட்டோ, மயிலின் கண்கள் அல்லது மலர்கள் போன்றவற்றைக் காண்டால், அன்றைய தினம் சிறப்பாக இருக்கும். எனவே இவற்றை தினமும் காலையில் பார்க்க முயற்சி செய்யுங்கள். இதனால் நாள் முழுவதும் நேர்மறை எண்ணங்களுடன் தினத்தை சிறப்பாக செலவிட முடியும்.