Just In
- 9 min ago தினமும் 10 பவுன் தங்கத்தை தூசியாக உமிழும் அதிசய எரிமலை... இந்த எரிமலையா இல்ல தங்கச்சுரங்கமானே தெரிலயே...!
- 39 min ago இந்த அறிகுறிகள் காலை வேளையில் தெரியுதா? அப்ப கல்லீரல் ஆபத்தில் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்..
- 1 hr ago குரு பகவானால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
- 2 hrs ago மனித இரத்தத்தை விரும்பி சுவைக்கும் ஆபத்தான பாக்டீரியா: ஆய்வில் தெரியவந்துள்ள அதிர்ச்சியளிக்கும் செய்தி...!
Don't Miss
- Technology இப்படியொரு புரொஜெக்டர் யாரும் பார்த்ததில்லை.. 32GB மெமரி.. 1080P ரெசல்யூஷன்.. எந்த மாடல்? என்ன விலை?
- Movies தேனிலவுக்கு சென்றபோதுதான் அந்த விஷயமே புரிந்ததாம்.. ஐஸ்வர்யா ராய் என்ன இப்படி சொல்லிட்டாங்க?
- News இதுக்கு எதுக்கு தட்கலில் டிக்கெட் புக் பண்ண வேண்டும்? ஏசி 2ம் வகுப்பு பெட்டியிலேயே இதுதான் நிலைமை
- Automobiles ஹெல்மெட் போடாமல் பைக்கில் போன விஜய் சேதுபதி! ஓட்டு போட வந்த இடத்தில் மானமே போச்சு!
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Finance பருவநிலை மாற்றத்தால் உலகமே வறுமையில் வாடப் போகிறது – எச்சரிக்கும் ஆய்வறிக்கை
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
மறந்தும் இந்த பொருட்களை கட்டிலுக்கு கீழே வெச்சுடாதீங்க... இல்லன்னா கஷ்டப்படுவீங்க...
படுக்கையின் கீழ் ஒருசில பொருட்களை எக்காரணம் கொண்டும் வைத்திருக்கக்கூடாது. ஒருவேளை வைத்திருந்தால், வாழ்க்கையில் மோசமான விளைவை ஏற்படுத்தும்.
உலகில் உள்ள ஒவ்வொரு விஷயமும் மனித வாழ்க்கையுடன் தொடர்புடையது. அதுவும் நாம் வாழும் வீட்டின் சமையலறை முதல் வீட்டில் வைத்திருக்கும் பொருட்கள் வரை, ஒவ்வொன்றும் நம் வாழ்வில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. ஆகவே தான் நாம் குடியிருக்கும் வீடு சரியான வாஸ்துப்படி இருக்க வேண்டும் என்று கூறுவார்கள். வாஸ்து குறைபாட்டுடன் வீடு இருந்தால், அதனால் பல பிரச்சனைகளை வாழ்வில் சந்திக்க வேண்டியிருக்கும்.
ஒருவரது வீட்டில் படுக்கை மிகவும் முக்கியமானது மற்றும் அவசியமான ஒன்றும் கூட. வாஸ்துப்படி ஒருவர் தங்களின் படுக்கையை சரியாக பராமரிக்க வேண்டியது மிகவும் முக்கியம். அதேப் போல் படுக்கையின் கீழ் ஒருசில பொருட்களை எக்காரணம் கொண்டும் வைத்திருக்கக்கூடாது. ஒருவேளை வைத்திருந்தால், அது வாழ்க்கையில் மோசமான விளைவை ஏற்படுத்தும். இப்போது படுக்கையின் கீழ் இருக்கக்கூடாத சில பொருட்களைக் காண்போம்.
இரும்பால் ஆன பொருட்கள்
பலர் படுக்கைக்கு அடியில் ஒரு இரும்பு பொருளை வைத்திருப்போம். ஆனால் அவ்வாறு வைத்திருப்பது வாழ்வில் மோசமான விளைவை ஏற்படுத்தும். வாஸ்து சாஸ்திரத்தின் படி, படுக்கைக்கு அடியில் நீங்கள் பயன்படுத்தாத பொருட்களை அல்லது குப்பை பொருட்களை வைக்கக்கூடாது. ஒருவேளை பிற்காலத்தில் நீங்கள் பயன்படுத்து பொருட்களாக இருந்தாலும், அவற்றை படுக்கைக்கு அடியில் வைக்காமல், வேறு எங்காவது வைத்துக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால் குடும்பத்தில் எப்போதும் பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
கண்ணாடி
வாஸ்து சாஸ்திரத்தின் படி, கண்ணாடியை தலைக்கு பின்புறத்திலோ அல்லது படுக்கைக்கு அடியிலோ வைக்கக்கூடாது. ஒரு வேளை வைத்தால், திருமணமான தம்பதிகளிடையே சண்டையை ஏற்படுத்தி, உறவில் விரிசலை ஏற்படுத்திவிடும்.
துடைப்பம்
எக்காரணம் கொண்டும் கட்டிலுக்கு அடியில் துடைப்பத்தை வைக்கக்கூடாது. இல்லாவிட்டால், அது கணவன் மனைவி இடையே அடிக்கடி சண்டையை வரவழைக்கும். மேலும் படுக்கைக்கு அடியில் துடைப்பத்தை வைப்பதால் பல பிரச்சனையை சந்திக்கக்கூடும். இதை தொடர்ந்து செய்வதன் மூலம், நிதி நெருக்கடிகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
காலணிகள்
வாஸ்துப்படி, படுக்கைக்கு அருகில் அல்லது தலைக்கு அருகில் காலணிகளை வைத்துக் கொண்டு தூங்கக்கூடாது. இல்லாவிட்டால், அது உங்கள் வாழ்க்கையில் எதிர்மறை ஆற்றலை அதிகரித்து, பல பிரச்சனைகளை சந்திக்க வைக்கும்.
மின்சார பொருட்கள்
பயன்படுத்தாத மின்சார பொருட்கள் படுக்கைக்கு அடியில் வைக்கக்கூடாது என்று கூறப்படுகிறது. இவ்வாறு செய்வதால் பண பற்றாக்குறையை சந்திக்க நேரிடும். அதோடு தூக்கமின்மை பிரச்சனையும் ஏற்படும் என்று கூறப்படுகிறது. எனவே எந்த ஒரு மின்சார பொருட்களையும் படுக்கைக்கு அடியில் மட்டுமின்றி, படுக்கை அறையில் எங்கும் வைத்திருக்காதீர்கள்.