Just In
- 22 min ago பானை போன்று வீங்கியிருக்கும் தொப்பையை குறைக்கணுமா? அப்ப இந்த 2 விதையை நீரில் கொதிக்க வெச்சு குடிங்க..
- 1 hr ago கோடையில் இரவு தூங்கும் முன் இதை முகத்தில் தடவுங்கள்.. உங்கள் சருமம் அழகாகவும் பளப்பளப்பாகவும் இருக்கும்..!
- 3 hrs ago கேரளாவின் அடையாளங்களில் ஒன்றான இந்த குட்டி மாட்டின் பால்தான் உலகிலேயே சத்தான பாலாம் தெரியுமா?
- 4 hrs ago கத்திரிக்காயை இந்த மாதிரி ஒருமுறை பொரியல் செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க...
Don't Miss
- News டிஎன்பிஎஸ்சி அதிரடி.. குரூப் 1 டூ குரூப் 4 வரை முக்கிய தேர்வு தேதிகள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Finance கடன் வாங்கி சம்பளம் கொடுத்த பைஜூஸ் சிஇஓ.. நாளுக்கு நாள் மோசம்..!
- Movies மீண்டும் அந்த இயக்குநருடன் இணையும் சிவகார்த்திகேயன்?.. மெகா ஹிட் பார்சலோ
- Automobiles மதுரை, திருச்சி சேலம் ஸ்டேஷன்களில் ரூ20க்கு ஃபுல் மீல்ஸ்! முன்பதிவில்லாத பெட்டி அருகே விற்பனை செய்ய உத்தரவு!
- Technology ஆளுக்கு 1 ஆர்டர்.. ரூ.10,999 போதும்.. 50எம்பி கேமரா.. புதிய Realme 5ஜி போன்கள் அறிமுகம்.. எந்த மாடல்?
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
இந்த பொருட்களை வீட்ல வெச்சுருக்காதீங்க... இல்லன்னா வீட்ல எப்பவும் கெட்டது தான் நடக்கும்...
வாஸ்து சாஸ்திரத்தின் படி, எல்லாவற்றிற்கும் அதன் சொந்த ஆற்றல் உள்ளது. அதாவது, ஒவ்வொன்றும் நல்ல மற்றும் கெட்ட விளைவுகளைக் கொண்டுள்ளது. பல நேரங்களில் நம் வீட்டில் இதுப்போன்ற பல விஷயங்கள் உள்ளன.
வாஸ்து சாஸ்திரத்தின் படி, எல்லாவற்றிற்கும் அதன் சொந்த ஆற்றல் உள்ளது. அதாவது, ஒவ்வொன்றும் நல்ல மற்றும் கெட்ட விளைவுகளைக் கொண்டுள்ளது. பல நேரங்களில் நம் வீட்டில் இதுப்போன்ற பல விஷயங்கள் உள்ளன. அதில் சில வீட்டில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தக்கூடியவை. ஆனால் அவற்றின் மீது நாம் மிக குறைந்த அளவிலேயே கவனம் செலுத்துவோம். சொல்லப்போனால், ஒருவரது வீட்டில் பல முக்கியமான விஷயங்கள் நடைபெறாமல் போவதற்கு காரணமாகவும் இவை விளங்குகின்றன.
உண்மையில் வாஸ்து சாஸ்திரத்தின் படி, இந்த விஷயங்கள் அனைத்தும் தான் வீட்டிற்கு துரதிர்ஷ்டத்தையும், நல்ல அதிர்ஷ்டத்தையும் தருகின்றன. ஆனால் பெண்கள் வீட்டில் உள்ள பொருட்களின் மீது எவ்வித சேதமும் ஏற்படாமல் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் நம் வீட்டில் உள்ள பல பொருட்கள் எதிர்மறை ஆற்றலை விட்டுச் செல்லக்கூடியவை. இப்போது அந்த பொருட்கள் எவையென்பதைக் காண்போம். அந்த பொருட்கள் உங்கள் வீட்டில் இருந்தால், உடனே அவற்றை அப்புறப்படுத்துங்கள்.
இம்மாதிரியான போட்டோக்களை அகற்றவும்
வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டில் கப்பல் மூழ்குவது போன்ற போட்டோக்களை வைக்கக்கூடாது. ஏனெனில், இது எதிர்மறை ஆற்றலை வீட்டில் வழங்கும். எனவே எதிர்மறை ஆற்றலை வரவேற்கும்படியான போட்டோக்களை வீட்டிலோ, அலுவலகத்திலோ வைக்காதீர்கள். இதுப்போன்ற போட்டோக்களைப் பார்க்கும் போது, அது எதிர்மறை எண்ணங்களை மனதில் உண்டாக்கும்.
மருந்துகள்
தற்போதைய மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கையில், ஒவ்வொருவரின் வீட்டிலும் சில மருந்துகள் கட்டாயம் இருக்கும். ஆனால் சில நேரங்களில் நாம் பயன்படுத்தாத மருந்துகளைக் கூட நாம் வீட்டில் சேகரித்து வைத்திருப்போம். வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டில் பயனற்ற மருந்து இருக்கக்கூடாது. ஏனெனில், அது வீட்டில் நோயை அழைக்கிறது.
உடைந்த பொருட்கள்
வாஸ்து சாஸ்திரத்தின் படி, முகம் சிதைந்த அல்லது உடைந்த நிலையிலான சிலைகள், உடைந்த கண்ணாடி பொருட்கள் என எதையும் வைத்திருக்கக்கூடாது. ஏனெனில் இது அபசகுனமாக கருதப்படுகிறது. மேலும் இந்த மாதிரியான பொருட்களை வீட்டில் வைத்திருந்தால், அது குடும்பத்தில் சண்டையை அதிகரிக்கும்.
அழுக்கு நிறைந்த வீடு
வாஸ்து சாஸ்திரத்தின் படி, அழுக்கு/குப்பை நிறைந்த வீட்டில் லட்சுமி தங்குவதில்லை. நாம் எவ்வளவுக்கு எவ்வளவு வீட்டை சுத்தமாக வைத்திருக்கிறோமோ, அவ்வளவு நேர்மறை ஆற்றல் வீட்டில் நிறைந்திருக்கும் என்பது நம்பிக்கை. லட்சுமி தேவிக்கு சுத்தம் தான் பிடிக்கும். எந்த வீட்டில் குப்பை அதிகம் இருக்கிறதோ, அங்கு லட்சுமி தேவியும் இருக்கமாட்டாள், நேர்மறை ஆற்றலும் இருக்காது.
இருள் நிறைந்த வீடு
வாஸ்து சாஸ்திரத்தின் படி, மாலை வேளையில் வீட்டிற்கு விளக்கேற்ற வேண்டும். ஒருபோதும் வீட்டை இருள் நிறைந்து வைத்திருக்கக்கூடாது. ஒருவரது வீட்டில் எவ்வளவு வெளிச்சம் இருக்கிறதோ, அவ்வளவு நேர்மறை ஆற்றல் நிறைந்திருக்கும்.