Latest Updates
-
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க.. -
கேது-சந்திரன் உருவாக்கும் கிரகண யோகம் 2026: இந்த 3 ராசிக்காரங்க கோடிகளை குவிக்கப்போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
இந்த ஒரு மூலிகை டீயை தொடர்ந்து 14 நாட்கள் குடித்தால் சிறுநீரக கல் கரையுமாம் - கூறும் ஆயுர்வேத டாக்டர்!
உங்க பர்ஸில் இது இருந்தா உடனே தூக்கிப் போடுங்க.. ஏன்னா இது பணத்தை சேரவிடாதாம்...
வாஸ்துப்படி ஒருவரது பர்ஸில் சில பொருட்கள் இருப்பது அசுபமாக கருதப்படுகிறது. இப்பொருட்கள் பர்ஸில் இருந்தால், என்ன செய்தாலும் பணம் நீடிக்காது.
இவ்வுலகில் பிரச்சனையின்றி மகிழ்ச்சியாக வாழ்வதற்கு பணம் மிகவும் முக்கியம். இந்த பணத்தை சம்பாதிக்க நாம் ஒவ்வொருவரும் கடினமாக உழைத்துக் கொண்டிருக்கிறோம். அப்படி சம்பாதிக்கும் பணம் எப்போதும் நாம் பயன்படுத்தும் பர்ஸில் நிலைத்திருக்க வேண்டும் என்று தான் விரும்புவோம். ஏனெனில் பணம் இருந்தால் நாம் விரும்பியதை வாங்கி மகிழலாம். உலகில் உள்ள ஒவ்வொருவருமே தங்களின் வாழ்க்கை செல்வம் நிறைந்து இருக்க வேண்டும் என்று தான் விரும்புவோம்.

ஆனால் சிலர் சம்பாதிக்கும் பணம் அவர்களின் பர்ஸில் நிலைக்காது செலவாகும். வாஸ்துப்படி ஒருவரது பர்ஸில் சில பொருட்கள் இருப்பது அசுபமாக கருதப்படுகிறது. இப்பொருட்கள் பர்ஸில் இருந்தால், என்ன செய்தாலும் பணம் நீடிக்காது. அதோடு எப்போதும் பணப் பற்றாக்குறையை சந்திக்க நேரிடும். சிலரது பர்ஸில் பணத்தைத் தவிர வேறு சில பொருட்களும் இருக்கும். வாஸ்துப்படி பர்ஸில் தேவையற்ற பொருட்கள் இருந்தால், அது எப்போதும் பணப் பிரச்சனையை உண்டாக்கும். இப்போது வாஸ்து படி எந்தெந்த பொருட்களை பர்ஸில் வைக்கக்கூடாது என்பதைக் காண்போம்.

பழைய பில்
பெரும்பாலானோர் தங்களின் பர்ஸில் கடைகளில் கொடுக்கப்படும் பில்களை பத்திரப்படுத்தி வைப்பார்கள். ஆனால் வாஸ்து சாஸ்திரத்தின் படி, பர்ஸில் பழைய பில்களை சேமித்து வைப்பது அசுபமாக கருதப்படுகிறது. ஒருவர் தங்கள் பர்ஸில் நீண்ட நாட்களாக பழைய பில்களை வைத்திருந்தால், வாஸ்துப்படி பண இழப்பை உண்டாக்கும்.

கடவுளின் போட்டோ
பலர் கடவுளின் போட்டோவை தங்களுடன் வைத்திருப்பதை சுபமாக கருதலாம். ஆனால் கடவுளின் போட்டோவை பர்ஸில் வைத்திருக்காதீர்கள். அவ்வாறு வைத்திருந்தால், கடன் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.

இறந்தவர்களின் போட்டோக்கள்
இறந்தவர்களின் போட்டோக்களை எப்போதும் பர்ஸில் வைத்திருக்கக்கூடாது. ஆனால் பலர் இறந்தவர்களுடனான ஆழமான தொடர்பின் காரணமாக தங்களுடன் அவர்கள் எப்போதும் இருக்க வேண்டுமென்று தங்கள் பர்ஸில் வைத்திருப்பார்கள். ஆனால் இப்படி வைத்திருப்பது நல்லதல்ல. வாஸ்துப்படி, பர்ஸ் லட்சுமி தேவி குடியிருக்கும் இடமாக கருதப்படுகிறது. எனவே அவ்விடத்தில் இறந்தவர்களின் போட்டோவை வைப்பது வாஸ்து குறைபாடாகி, பணப் பிரச்சனையை ஏற்படுத்தும்.

சாவி
பலர் தங்கள் வீட்டு அல்லது வண்டி சாவியை தங்கள் பர்ஸில் வைத்திருப்பார்கள். ஆனால் அவ்வாறு செய்வது மோசமானதாக கருதப்படுகிறது. வாஸ்துப்படி, பர்ஸில் எந்த வகையான உலோகப் பொருளையும் வைக்கக்கூடாது. அவ்வாறு வைத்திருப்பது எதிர்மறை ஆற்றலை ஈர்த்து பண இழப்பிற்கு வழிவகுக்கும். எனவே இத்தவறை செய்யாதீர்கள்.

கிழிந்த நோட்டுகள்
பர்ஸில் எப்போதும் கிழிந்த நோட்டுகளையோ, அழுக்கான காகிதத்தையோ வைத்திருக்கக்கூடாது. பர்ஸை ஒருவர் எப்போதுமே சுத்தமாக வைத்திருக்க வேண்டும். ஏனெனில் அது லட்சுமி தேவி குடியிருக்கும் இடம். உங்கள் பர்ஸில் பணம் அதிகம் சேர வேண்டுமானால், ஸ்ரீ யந்திரத்தை பர்ஸில் வைத்துக் கொள்ளலாம். இது லட்சுமி தேவியின் வடிவமாகும். இது அதிக பணத்தை ஈர்க்கும் மற்றும் செழிப்பு மற்றும் அதிர்ஷ்டத்தை கொண்டு வரும்.



Click it and Unblock the Notifications











