Latest Updates
-
ஜூன் 18-ல் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்கு பணம் மற்றும் தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும். -
அடுத்தமுறை சிக்கன் வாங்குனா.. இப்படி மசாலா அரைச்சு குழம்பு வையுங்க.. இட்லிக்கு டக்கரா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 14 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பணமழை கொட்டப்போகுதாம் -
ஜூன் 15-ல் உருவாகும் புதாதித்ய யோகத்தால் ராஜவாழ்க்கை வாழப்போகும் 3 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
நாட்டுக்கோழி வாங்குனா கர்நாடகா ஸ்டைலில் இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - சுருக்குனு வேற லெவலில் இருக்கும் -
இந்த வாரம் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா? இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் காத்திருக்காம் -
200 பேர் மட்டுமே வாழும் இந்தியாவின் தனித்துவமான 8 கிராமங்கள் - இந்த கிராமங்களுக்கு போறதே ரொம்ப கஷ்டமாம் -
1 கப் அவல் இருந்தா ஈவ்னிங் டைம்ல இந்த பக்கோடாவை செஞ்சு பாருங்க - மொறுமொறுனு சூப்பரா இருக்கும் -
சாணக்கிய நீதி படி இந்த 6 குணங்களில் ஒன்று உங்களுக்கு இருந்தாலும் உங்களுக்கு ஆயுள் ரொம்ப கம்மியாம் - ஜாக்கிரதை -
உருளைக்கிழங்கை இந்த மாதிரி கல்யாண வீட்டு ஸ்டைல் பால் கறி செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
உங்க பர்ஸில் இது இருந்தா உடனே தூக்கிப் போடுங்க.. ஏன்னா இது பணத்தை சேரவிடாதாம்...
வாஸ்துப்படி ஒருவரது பர்ஸில் சில பொருட்கள் இருப்பது அசுபமாக கருதப்படுகிறது. இப்பொருட்கள் பர்ஸில் இருந்தால், என்ன செய்தாலும் பணம் நீடிக்காது.
இவ்வுலகில் பிரச்சனையின்றி மகிழ்ச்சியாக வாழ்வதற்கு பணம் மிகவும் முக்கியம். இந்த பணத்தை சம்பாதிக்க நாம் ஒவ்வொருவரும் கடினமாக உழைத்துக் கொண்டிருக்கிறோம். அப்படி சம்பாதிக்கும் பணம் எப்போதும் நாம் பயன்படுத்தும் பர்ஸில் நிலைத்திருக்க வேண்டும் என்று தான் விரும்புவோம். ஏனெனில் பணம் இருந்தால் நாம் விரும்பியதை வாங்கி மகிழலாம். உலகில் உள்ள ஒவ்வொருவருமே தங்களின் வாழ்க்கை செல்வம் நிறைந்து இருக்க வேண்டும் என்று தான் விரும்புவோம்.

ஆனால் சிலர் சம்பாதிக்கும் பணம் அவர்களின் பர்ஸில் நிலைக்காது செலவாகும். வாஸ்துப்படி ஒருவரது பர்ஸில் சில பொருட்கள் இருப்பது அசுபமாக கருதப்படுகிறது. இப்பொருட்கள் பர்ஸில் இருந்தால், என்ன செய்தாலும் பணம் நீடிக்காது. அதோடு எப்போதும் பணப் பற்றாக்குறையை சந்திக்க நேரிடும். சிலரது பர்ஸில் பணத்தைத் தவிர வேறு சில பொருட்களும் இருக்கும். வாஸ்துப்படி பர்ஸில் தேவையற்ற பொருட்கள் இருந்தால், அது எப்போதும் பணப் பிரச்சனையை உண்டாக்கும். இப்போது வாஸ்து படி எந்தெந்த பொருட்களை பர்ஸில் வைக்கக்கூடாது என்பதைக் காண்போம்.

பழைய பில்
பெரும்பாலானோர் தங்களின் பர்ஸில் கடைகளில் கொடுக்கப்படும் பில்களை பத்திரப்படுத்தி வைப்பார்கள். ஆனால் வாஸ்து சாஸ்திரத்தின் படி, பர்ஸில் பழைய பில்களை சேமித்து வைப்பது அசுபமாக கருதப்படுகிறது. ஒருவர் தங்கள் பர்ஸில் நீண்ட நாட்களாக பழைய பில்களை வைத்திருந்தால், வாஸ்துப்படி பண இழப்பை உண்டாக்கும்.

கடவுளின் போட்டோ
பலர் கடவுளின் போட்டோவை தங்களுடன் வைத்திருப்பதை சுபமாக கருதலாம். ஆனால் கடவுளின் போட்டோவை பர்ஸில் வைத்திருக்காதீர்கள். அவ்வாறு வைத்திருந்தால், கடன் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.

இறந்தவர்களின் போட்டோக்கள்
இறந்தவர்களின் போட்டோக்களை எப்போதும் பர்ஸில் வைத்திருக்கக்கூடாது. ஆனால் பலர் இறந்தவர்களுடனான ஆழமான தொடர்பின் காரணமாக தங்களுடன் அவர்கள் எப்போதும் இருக்க வேண்டுமென்று தங்கள் பர்ஸில் வைத்திருப்பார்கள். ஆனால் இப்படி வைத்திருப்பது நல்லதல்ல. வாஸ்துப்படி, பர்ஸ் லட்சுமி தேவி குடியிருக்கும் இடமாக கருதப்படுகிறது. எனவே அவ்விடத்தில் இறந்தவர்களின் போட்டோவை வைப்பது வாஸ்து குறைபாடாகி, பணப் பிரச்சனையை ஏற்படுத்தும்.

சாவி
பலர் தங்கள் வீட்டு அல்லது வண்டி சாவியை தங்கள் பர்ஸில் வைத்திருப்பார்கள். ஆனால் அவ்வாறு செய்வது மோசமானதாக கருதப்படுகிறது. வாஸ்துப்படி, பர்ஸில் எந்த வகையான உலோகப் பொருளையும் வைக்கக்கூடாது. அவ்வாறு வைத்திருப்பது எதிர்மறை ஆற்றலை ஈர்த்து பண இழப்பிற்கு வழிவகுக்கும். எனவே இத்தவறை செய்யாதீர்கள்.

கிழிந்த நோட்டுகள்
பர்ஸில் எப்போதும் கிழிந்த நோட்டுகளையோ, அழுக்கான காகிதத்தையோ வைத்திருக்கக்கூடாது. பர்ஸை ஒருவர் எப்போதுமே சுத்தமாக வைத்திருக்க வேண்டும். ஏனெனில் அது லட்சுமி தேவி குடியிருக்கும் இடம். உங்கள் பர்ஸில் பணம் அதிகம் சேர வேண்டுமானால், ஸ்ரீ யந்திரத்தை பர்ஸில் வைத்துக் கொள்ளலாம். இது லட்சுமி தேவியின் வடிவமாகும். இது அதிக பணத்தை ஈர்க்கும் மற்றும் செழிப்பு மற்றும் அதிர்ஷ்டத்தை கொண்டு வரும்.



Click it and Unblock the Notifications