Just In
- 2 hrs ago நீங்க போடுற டீ அமிர்தம் மாதிரி இருக்கணுமா? அப்ப டீ போடுறப்ப இந்த தவறுகளை தெரியாம கூட பண்ணிராதீங்க...!
- 3 hrs ago குழந்தையின்மைக்கு இந்த பிரச்சனைகள் எல்லாம் காரணமாக இருக்கலாம்.. கவனியுங்கள்..!
- 4 hrs ago புதன் மீன ராசிக்கு நேராக செல்வதால் இந்த 5 ராசிக்காரர்களின் வாழக்கையில் அதிர்ஷ்டம் கொட்டப்போகுதாம்...!
- 4 hrs ago உங்கள் தலைமுடி வலுவாக வளரனுமா? அப்போ இதை சாப்பிடுங்கள்..!
Don't Miss
- Technology குறிவைத்து தாக்கும் BrahMos ஏவுகணை.. இந்தியாவிடம் இருந்து பிலிப்பைன்ஸ் வாங்கிய ஆயுதம்.. எவ்வளவு தெரியுமா?
- News கெஜ்ரிவாலை மரணத்தை நோக்கி தள்ளுகிறார்கள்! பாஜக மீது ஆம் ஆத்மி பாய்ச்சல்! அதிரும் தலைநகர் டெல்லி
- Finance ரூ.4,000 கோடிக்கு ஐபிஓ.. ரெடியான ஓலா நிறுவனம்..!
- Sports என்ன வீடியோ கேம் விளையாடுறாங்க.. 11 சிக்ஸ், 13 ஃபோர்ஸ்.. 5 ஓவர்களில் சதம்.. வரலாறு படைத்த ஐதராபாத்!
- Movies Thalaivar171: டைட்டில் ரிலீசுக்கு இன்னும் இரு தினம்.. மீண்டும் கடிகாரத்தை கையிலெடுத்த சன் பிக்சர்ஸ்!
- Automobiles ஓலா ஷோரூம் இல்லாத ஊரே இல்ல போல!! இன்னும் சில வருஷத்தில் தெருவுக்கு ஒண்ணும் வந்துவிடும்!
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
புதன்கிழமைகளில் மறந்தும் இந்த விஷயங்களை செஞ்சுடாதீங்க... இல்லன்னா பண கஷ்டத்தை சந்திப்பீங்க...
புதன்கிழமைகளில் ஒருசில விஷயங்களை தெரியாமல் கூட செய்யக்கூடாது. இல்லாவிட்டால், அது வீட்டில் பண பிரச்சனை மற்றும் உணவு பற்றாக்குறையை ஏற்படுத்தும். அதோடு வாழ்க்கையில் பெரும் சிரமங்களை சந்திக்க நேரிடும்.
வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கடவுளுக்கு உரியது. அந்தந்த கிழமைக்குரிய கடவுளை வழிபடுவதன் மூலம் ஆசியைப் பெறலாம். அந்த வகையில் புதன்கிழமை முதன்மை கடவுளான விநாயகருக்கு உரியது. இந்நாளில் விநாயகரை வழிபடுவதன் மூலம் அவரின் பரிபூரண அருள் கிடைப்பதோடு, கிரகங்களில் புதனால் சந்திக்கும் பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.
மேலும் புதன் கிழமைகளில் மனதார விநாயகரை வழிபட்டு வந்தால், வாழ்க்கையில் உள்ள அனைத்து தடைகளும் நீங்கும் என்பது ஐதீகம். அதே வேளையில் புதன்கிழமைகளில் ஒருசில விஷயங்களை தெரியாமல் கூட செய்யக்கூடாது. இல்லாவிட்டால், அது வீட்டில் பண பிரச்சனை மற்றும் உணவு பற்றாக்குறையை ஏற்படுத்தும். அதோடு வாழ்க்கையில் பெரும் சிரமங்களை சந்திக்க நேரிடும். இப்போது புதன்கிழமைகளில் ஒருவர் மறந்தும் செய்யக்கூடாத சில விஷயங்கள் எவையென்பதைக் காண்போம்.
கருப்பு நிற ஆடைகளை அணியக்கூடாது
கருப்பு நிற ஆடைகளை புதன்கிழமைகளில் அணியக்கூடாது என்று மத நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. அதே வேளையில் திருமணமான பெண்கள் புதன்கிழமைகளில் கருப்பு நிற ஆடைகளுடன், கருப்பு நிற ஆபரணங்களை அணியக்கூடாது. இவ்வாறு செய்வதன் மூலம் திருமண வாழ்க்கையில் பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
பரிவர்த்தனைகளை தவிர்க்கவும்
புதன்கிழமைகளில் யாருக்கும் கடன் கொடுக்கக்கூடாது. அதே வேளையில், புதன்கிழமைகளில் யாரிடமும் கடன் வாங்கக்கூடாது. புதன்கிழமைகளில் இம்மாதிரியான பண பரிவர்த்தனைகள் செய்வது நிதி சிக்கல்களுக்கு வழிவகுக்கும். அதோடு பண இழப்பும் ஏற்படலாம்.
எந்த பெண்ணையும் அவமதிக்காதீர்
பெண்களை எப்போதும் மரியாதையுடன் நடத்த வேண்டும். அதுவும் புதன்கிழமைகளில் எந்த பெண்ணையும் தவறுதலாக கூட அவமதிக்கக்கூடாது என்பதில் கவனமாக இருங்கள். ஒரு பெண் புதன்கிழமையன்று அவமானப்படுத்தப்பட்டால், அந்நபருக்கு கடவுளின் ஆசீர்வாதம் கிடைக்காது. மேலும் லட்சுமி தேவியின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.
மேற்கு திசையில் பயணிக்காதீர்
புதன்கிழமைகளில் மேற்கு திசைகளில் பயணம் செய்வதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் புதன்கிழமைகளில் இந்த திசைகளில் பயணித்தால், எதிலும் தோல்வி கிடைப்பதோடு, பெரிய இழப்பை சந்திக்க நேரிடும் என்ற நம்பிக்கை ஒன்று உள்ளது.
பிறர் மனம் புண்படும்படி பேசாதீர்
கிரகங்களில் புதன் புத்தி, விவேகம், பேச்சு மற்றும் தொடர்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறது. ஆகவே புதன்கிழமையன்று யாருடைய மனமும் புண்படும்படி பேசாதீர்கள். ஒருவேளை இவ்வாறு செய்தால், அந்நபரின் வீட்டில் மகிழ்ச்சியும் வளமும் இருக்காது. அதோடு பண பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.