Just In
- 18 min ago இந்த பழங்களை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்கக் கூடாதாம்... ஏன் தெரியுமா?
- 2 hrs ago நீங்க ஏ.சி. போட போறீங்களா? இந்த 3 விஷயங்களை செய்ய மறந்துடாதீங்க...!
- 3 hrs ago சித்ரா பெளர்ணமி.. திருவண்ணாமலையில் குவியும் பக்தர்கள்.. கிரிவலம் செல்ல நல்ல நேரம் எது?
- 3 hrs ago அனுமன் ஜெயந்தியன்று உருவாகும் அரிய யோகங்கள்: இன்று இந்த 3 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப் போகுது..
Don't Miss
- News சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருக்கிறார்.. ஏற்புடையது இல்லை.. மோடியை நேரடியாக அட்டாக் செய்த எடப்பாடி
- Movies சூப்பர் ஸ்டாருடன் ஜோடி சேரும் ஐஸ்வர்யா ராஜேஷ்.. காட்டில் செம மழைதான் போங்க
- Finance முகேஷ் அம்பானி ஸ்ட்ரிக்ட் ஆர்டர்..!! 'இங்க' தான் ஆனந்த் அம்பானி - ராதிகா திருமணம்..!
- Automobiles இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
- Technology பிளிப்கார்ட் பிச்சிக்குது.. வெறும் ரூ.13,999 போதும்.. OIS கேமரா.. 6000mAh பேட்டரி.. 1TB மெமரி.. எந்த மாடல்?
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
இன்னும் 3 மாதத்தில் சனியால் இந்த ராசிக்காரங்களுக்கு கஷ்ட காலம் ஆரம்பிக்கப் போகுது.. உங்க ராசி இதுல இருக்கா?
சனி பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு 2022 ஏப்ரல் 29 ஆம் தேதி இடம் மாறப் போகிறார். இதனால் ஏழரை சனியின் தாக்கம் பின்வரும் 3 ராசிகளில் இருக்கும்.
என்ன தான் ஜோதிடத்தின் மீது நம்பிக்கை இல்லாவிட்டாலும், பலருக்கு நமது ராசிக்கான பலன்களைத் தெரிந்து கொள்வதில் ஒருவித ஆர்வம் இருக்கும். ஜோதிடத்தில் 9 கிரகங்கள் மற்றும் 12 ராசிகள் குறித்து கூறப்பட்டுள்ளன. இந்த கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ராசிக்கு அவ்வப்போது மாறிக் கொண்டே இருக்கும். ஒவ்வொரு கிரகங்களும் ஒவ்வொரு ராசியுடன் தொடர்பு கொண்டது என்பதால் கிரகங்களின் இடமாற்றம் ஒவ்வொரு ராசியிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். கிரக இடமாற்றங்கள் சிலருக்கு நல்லதாகவும், சிலருக்கு மோசமாகவும் இருக்கலாம்.
அந்த வகையில் 2022 ஆம் ஆண்டில் பல முக்கிய கிரகங்கள் இடம் மாறுகின்றன. அதில் ஒன்று தான் சனி. ஜோதிடத்தில் சனி பகவான் ஒருவரது செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிப்பவராக கருதப்படுகிறார். சனி ஒரு ராசியில் 2 1/2 ஆண்டுகள் இருந்து, பின் இடம் மாறும். அப்படி சனி பகவான் ராசியை மாற்றும் போது தான் ஏழரை சனி அல்லது சனியின் தையா தொடங்குகிறது.
2022-ல் சனி பெயர்ச்சி
2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சனி பகவான் மகர ராசியில் பயணித்து வருகிறார். இதனால் மகர ராசியில் ஏழரை சனியின் இரண்டாம் கட்டமும், கும்ப ராசியில் முதல் கட்டமும், தனுசு ராசியில் 3 ஆம் கட்டமும் நடக்கிறது. ஆனால் சனி பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு 2022 ஏப்ரல் 29 ஆம் தேதி இடம் மாறப் போகிறார். இதனால் ஏழரை சனியின் தாக்கம் பின்வரும் 3 ராசிகளில் இருக்கும். இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார், எந்த மாதிரியான பலன்களைப் பெறப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.
ஏழரை சனி
ஏழரை சனியில் மூன்று கட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு கட்டமும் இரண்டரை ஆண்டுகள் நீடித்திருக்கும். முதல் கட்டத்தில் மனப் பிரச்சனைகளும்,இரண்டாம் கட்டத்தில் உடல், மன மற்றும் நிதி பிரச்சனைகளும் காணப்படுகின்றன. மூன்றாம் கட்டத்தில் சனியினால் சந்திக்கும் துன்பங்கள் குறைய தொடங்குகின்றன. ஏனெனில் மூன்றாம் கட்டத்தில் சனி ஒருவருக்கு தனது தவறை சரிசெய்யும் வாய்ப்பை வழங்குகிறார்.
கும்ப ராசிக்கு சிரமங்கள் அதிகரிக்கும்
2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு சனி இடம் பெயர்ந்தவுடன், கும்ப ராசியில் ஏழரை சனியின் இரண்டாம் கட்டம் தொடங்குகிறது. ஆகவே கும்ப ராசிக்காரர்கள் பல சிரமங்களை சந்திக்க நேரிடும். இத்தகைய சூழ்நிலையில் நல்ல செயல்களை செய்ய முயலுங்கள். தான, தர்மங்களை செய்யுங்கள். இதனால் சனி தொடர்பான தொல்லைகள் குறையும்.
ஏழரை சனியின் முதல் மற்றும் மூன்றாம் கட்டம்
கும்ப ராசிக்கு சனி பகவான் இடம் மாறுவதால், மகர ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியின் கடைசி கட்டமும், மீன ராசிக்காரர்களுக்கு முதல் கட்டமும் தொடங்குகிறது. இதனால் மகர ராசிக்காரர்கள் இதுவரை சனி பகவானின் சோதனையால் சந்தித்த துன்பங்கள் குறைந்து, சற்று நற்பலன்களைப் பெறுவார்கள். மீன ராசிக்காரர்கள் மனப் பிரச்சனையால் அவஸ்தைப்படுவார்கள்.
ஏழரை சனியில் இருந்து விடுபடும் தனுசு
தனுசு ராசிக்காரர்கள் ஏழரை சனியில் இருந்து விடுபடுகிறார்கள். ஏழரை சனி முடியும் போது சனி பகவான் அந்த ராசிக்காரர்களுக்கு எதையாவது கொடுத்துவிட்டு செல்வார் என்று சொல்வார்கள். ஏனெனில் அந்த நபர் சனி பகவான் கொடுத்த அனைத்து கஷ்டங்களையும் அனுபவித்து, தனது செயல்களுக்கு பரிகாரங்களை செய்துவிட்டார். இத்தகைய சூழ்நிலையில் தனுசு ராசிக்காரர்கள் சில நன்மைகளைப் பெறுவார்கள்.
அஷ்டம, அர்தாஷ்டம சனி
அஷ்டம, அர்தாஷ்டம சனியின் தாக்கம் இரண்டரை வருடங்கள் ஆகும். 2022 ஏப்ரல் 29 ஆம் தேதி நடக்கும் சனி பெயர்ச்சியால், கடகம் மற்றும் விருச்சிக ராசிக்காரர்களுக்கு அஷ்டம, அர்தாஷ்டம சனி ஆரம்பமாகிறது. அதே வேளையில் மிதுனம் மற்றும் துலாம் ராசிக்காரர்கள் அஷ்டம, அர்தாஷ்டம சனியில் இருந்து விடுபடுவார்கள்.