Just In
- 21 min ago 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- 1 hr ago ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. சும்மா அள்ளும்...
- 2 hrs ago ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- 3 hrs ago இந்த 5 ராசிகளில் பிறந்த பெண்கள் வீட்டையும், நாட்டையும் ஆள்வதற்கு பிறந்தவர்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
Don't Miss
- Movies Baakiyalakshmi: சரியாயிடுச்சு.. மீண்டும் இணைந்த செழியன் -ஜெனி.. சாதித்த பாக்கியா!
- News உங்கள் தொகுதி வேட்பாளர்களின் சொத்துக்கள், கடன்கள், குற்ற வழக்குகளை பற்றி முழுமையாக எப்படி அறிவது?
- Sports "3 வருடத்தில் ஐபிஎல் தொடரே இருக்காது".. ஆனால் நடந்தது இதுதான்.. அஸ்வின் அதிரடி
- Finance கௌதம் அதானி கையில் பணம் விளையாடுது.. ரூ.6,661 கோடி புதிய முதலீடு..!!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
தீபாவளி 2019: சகோதர சகோதரியின் பாசம் சொல்லும் எம துவிதியை கொண்டாடுவது எப்படி தெரியுமா?
தீபாவளி பண்டிகை தமிழ்நாட்டில் ஒருநாள் திருவிழாவாக முடிந்து விடுகிறது. ஆனால் வட இந்தியாவில் ஐந்து நாட்கள் கொண்டாடுகின்றனர். ஐப்பசி மாதம் வளர்பிறை துவிதியை எம துவிதாவாக வட மாநிலத்தவர் கொண்டாடுகிறார்கள்.
தீபாவளியை ஒட்டி வரும் எம துவிதியை மற்றும் எம தீபம் ஏற்றும் திரயோதசி ஆகிய தினங்கள் தனக்கு உகந்தவை ஆதலால், தீபாவளிப் பண்டிகை கையை எமதர்மன் விரும்புவதாக புராணங்கள் கூறுகின்றன. தீபாவளி பண்டிகை தமிழ்நாட்டில் ஒருநாள் திருவிழாவாக முடிந்து விடுகிறது. ஆனால் வட இந்தியாவில் ஐந்து நாட்கள் கொண்டாடுகின்றனர். கோவத்ஸ துவாதசி, தன திரயோதசி, தன்வந்திரி ஜெயந்தி, எம தீபம், நரக சதுர்த்தசி தீபாவளி, கேதார கௌரி விரதம், அமாவாசை, கோவர்தன பூஜை, யம துவிதியை என ஐந்து நாட்களும் அற்புதமாக கொண்டாடுகின்றனர். இதில் சகோதர பாசத்திற்காக கொண்டாடுவதே எம துவிதியை.
தீபாவளி பண்டிகை தினத்தின் முதல்நாளும், தீபாவளி பண்டிகை முடிந்து துவிதியை நாளிலும் எமனுக்கு நன்றி செலுத்தும் விதமாக கொண்டாடுகின்றனர். எமன் தர்மராஜன். நீதிமான். நாம் எம தீபம் ஏற்றுவதன் மூலம் எமனை மகிழ்விக்கிறோம். அதே போல எம துவிதியை நாளில் அண்ணன் தம்பிகளை அழைத்து விருந்து கொடுக்கும் சகோதரிகளை வாழ்த்துகிறார் எமன் என்பது ஐதீகம். சகோதரர்களுக்கு அகால மரணங்கள், விபத்துகள் ஏற்படுவதில்லை என்பது ஐதீகம்.
வட இந்தியாவில், தீபாவளித் திருநாள் ஐந்து நாள் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. தீபாவளிக்கு முதல்நாளில் யமதீபம் ஏற்றி வழிபடுகின்றனர். தனத்திரயோதசி நாளில் மகாலட்சுமி வீட்டிற்கு வருகிறார் என்பது ஐதீகம். லட்சுமி குபோர பூஜை செய்கின்றனர். கோத்ரி ராத்ரி, தன்வந்திரி ஜெயந்தி கொண்டாடுகின்றனர். நரக சதுர்த்தசி தீபாவளி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. வட இந்தியாவில் தீபாவளி சர்வ அமாவாசை நாளில் கொண்டாடுகின்றனர். கேதார கௌரி விரதம் இருப்பவர்கள் லட்சுமி பூஜை செய்கின்றனர். பிரதமை நாளில் கோவர்த்தன பூஜை செய்கின்றனர். மூன்றாம் நாள் எமத்துவிதியை கொண்டாடுவது வட இந்தியாவில் சிறப்பு சகோதரர்களை அழைத்து விருந்து போட்டு புத்தாடைகள் கொடுத்து அவர்களுக்கு பொட்டு வைத்து ஆசி வழங்குகின்றனர் ஒருவருக்கொருவர் பரிசுகளை பரிமாறிக்கொள்கின்றனர்.