For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தீபாவளி 2019: சகோதர சகோதரியின் பாசம் சொல்லும் எம துவிதியை கொண்டாடுவது எப்படி தெரியுமா?

தீபாவளி பண்டிகை தமிழ்நாட்டில் ஒருநாள் திருவிழாவாக முடிந்து விடுகிறது. ஆனால் வட இந்தியாவில் ஐந்து நாட்கள் கொண்டாடுகின்றனர். ஐப்பசி மாதம் வளர்பிறை துவிதியை எம துவிதாவாக வட மாநிலத்தவர் கொண்டாடுகிறார்கள்.

|

தீபாவளியை ஒட்டி வரும் எம துவிதியை மற்றும் எம தீபம் ஏற்றும் திரயோதசி ஆகிய தினங்கள் தனக்கு உகந்தவை ஆதலால், தீபாவளிப் பண்டிகை கையை எமதர்மன் விரும்புவதாக புராணங்கள் கூறுகின்றன. தீபாவளி பண்டிகை தமிழ்நாட்டில் ஒருநாள் திருவிழாவாக முடிந்து விடுகிறது. ஆனால் வட இந்தியாவில் ஐந்து நாட்கள் கொண்டாடுகின்றனர். கோவத்ஸ துவாதசி, தன திரயோதசி, தன்வந்திரி ஜெயந்தி, எம தீபம், நரக சதுர்த்தசி தீபாவளி, கேதார கௌரி விரதம், அமாவாசை, கோவர்தன பூஜை, யம துவிதியை என ஐந்து நாட்களும் அற்புதமாக கொண்டாடுகின்றனர். இதில் சகோதர பாசத்திற்காக கொண்டாடுவதே எம துவிதியை.

தீபாவளி பண்டிகை தினத்தின் முதல்நாளும், தீபாவளி பண்டிகை முடிந்து துவிதியை நாளிலும் எமனுக்கு நன்றி செலுத்தும் விதமாக கொண்டாடுகின்றனர். எமன் தர்மராஜன். நீதிமான். நாம் எம தீபம் ஏற்றுவதன் மூலம் எமனை மகிழ்விக்கிறோம். அதே போல எம துவிதியை நாளில் அண்ணன் தம்பிகளை அழைத்து விருந்து கொடுக்கும் சகோதரிகளை வாழ்த்துகிறார் எமன் என்பது ஐதீகம். சகோதரர்களுக்கு அகால மரணங்கள், விபத்துகள் ஏற்படுவதில்லை என்பது ஐதீகம்.

Deepavali Significance of Yama Dwitiya

வட இந்தியாவில், தீபாவளித் திருநாள் ஐந்து நாள் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. தீபாவளிக்கு முதல்நாளில் யமதீபம் ஏற்றி வழிபடுகின்றனர். தனத்திரயோதசி நாளில் மகாலட்சுமி வீட்டிற்கு வருகிறார் என்பது ஐதீகம். லட்சுமி குபோர பூஜை செய்கின்றனர். கோத்ரி ராத்ரி, தன்வந்திரி ஜெயந்தி கொண்டாடுகின்றனர். நரக சதுர்த்தசி தீபாவளி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. வட இந்தியாவில் தீபாவளி சர்வ அமாவாசை நாளில் கொண்டாடுகின்றனர். கேதார கௌரி விரதம் இருப்பவர்கள் லட்சுமி பூஜை செய்கின்றனர். பிரதமை நாளில் கோவர்த்தன பூஜை செய்கின்றனர். மூன்றாம் நாள் எமத்துவிதியை கொண்டாடுவது வட இந்தியாவில் சிறப்பு சகோதரர்களை அழைத்து விருந்து போட்டு புத்தாடைகள் கொடுத்து அவர்களுக்கு பொட்டு வைத்து ஆசி வழங்குகின்றனர் ஒருவருக்கொருவர் பரிசுகளை பரிமாறிக்கொள்கின்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Deepavali Significance of Yama Dwitiya

Bhai Dooj or Yama Dwitiya is observed on the second day of Aaippasi month in Shukla Paksha. It is a festival of faith, respect, and love between sisters and their brothers. Read on...
Story first published: Tuesday, October 22, 2019, 13:38 [IST]
Desktop Bottom Promotion