Just In
- 21 min ago சர்க்கரை நோயாளிகள் சிக்கன் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா? எப்படி சாப்பிடணும் தெரியுமா?
- 38 min ago புடவை கட்டினால் புற்றுநோய் வருகிறதாம்.. ஆய்வுகள் கூறும் அதிர்ச்சி தகவல்..!
- 2 hrs ago வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- 3 hrs ago போலந்து மக்களால் கடவுளாக கொண்டாடப்படும் இந்திய அரசர்... அப்படி அந்த மக்களுக்கு அவர் என்ன செய்தார் தெரியுமா?
Don't Miss
- News முஸ்லிம்களுக்கு ஓபிசி ஸ்டேடஸ் கொடுத்தது காங்கிரஸ்.. மோடி பேச்சு.. கூட்டணியிலுள்ள தேவகவுடா ஷாக்
- Finance ஐசிஐசிஐ வங்கி கஸ்டமரா நீங்க.. மொபைல் ஆப்-ல் கோளாறு.. கிரெடிட் கார்டு தரவுகள் திருடுபோகும் அச்சம்!!
- Automobiles புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Movies அந்த பயம் தான் காரணமா?.. அமரன் முதல் கங்குவா வரை.. ரிலீஸ் தேதியை முடிவு பண்ண முடியலையே!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
புதன் சுக்கிர சேர்க்கையால் இந்த 6 ராசிக்காரங்களுக்கு அமோகமா இருக்கப் போகுது.. உங்க ராசி இதுல இருக்கா?
ரிஷப ராசியில் சுக்கிரனும் புதனும் இணைந்திருப்பதால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அற்புதமான பலன்கள் கிடைக்கப் போகின்றன என்பதை இப்போது காண்போம்.
ஜோதிடத்தில் புதனுக்கும், சுக்கிரனுக்கும் தனி இடம் உண்டு. இந்த இரண்டு கிரகங்களும் அவ்வப்போது சில ராசிகளில் ஒன்றிணைந்து பயணிக்கும். தற்போது புதன் மற்றும் சுக்கிரன் ரிஷப ராசியில் உள்ளனர். ஒரே ராசியில் புதனும், சுக்கிரனும் சேர்ந்து பயணிப்பதால் சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். ஜோதிடத்தில், சுக்கிரன் பொருள் மகிழ்ச்சி, திருமண மகிழ்ச்சி, ஆடம்பரம், புகழ், கலை, திறமை, அழகு, காதல், காமம் ஆகியவற்றிற்கு காரணமாக கிரகமாக கூறப்படுகிறது.
ஜோதிடத்தில், புதன் புத்தி, லாஜிக், தகவல் தொடர்பு, கணிதம் மற்றும் நண்பன் போன்றவற்றிற்கு காரணமான கிரகமாக கூறப்படுகிறது. நவகிரகங்களில் சூரியனும், சுக்கிரனும் புதனின் நண்பர்கள். அதே வேளையில் சந்திரனும், செவ்வாயும் புதனின் எதிரிகள். ரிஷப ராசியில் சுக்கிரனும் புதனும் இணைந்திருப்பதால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அற்புதமான பலன்கள் கிடைக்கப் போகின்றன என்பதை இப்போது காண்போம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கான வலுவான வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் நிதி நிலை இக்காலத்தில் சிறப்பாக இருக்கும். பணிபுரிபவர்கள் பணியிடத்தில் நல்ல புகழைப் பெறுவார்கள்.
ரிஷபம்
ரிஷபத்தில் புதன் சுக்கிர சேர்க்கையால், இந்த ராசிக்காரர்களின் பொருளாதார பக்கம் வலுவாக இருக்கும். திருமண வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் நல்ல தரமான நேரத்தை செலவிடுவீர்கள். ஆன்மீக நடவடிக்கைகளில் அதிகம் ஈடுபடுவீர்கள். உங்களின் அனைத்து வேலைகளிலும் வெற்றி கிடைக்கும். புதிய வேலை மற்றும் வியாபாரத்தை தொடங்குவதற்கு இது சாதகமான நேரம்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் புதன் சுக்கிர சேர்க்கையால் புதிய வேலை வாய்ப்புக்களைப் பெறுவார்கள். பணிபுரிபவர்களுக்கு சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. வியாபாரிகளுக்கு இக்காலத்தில் நல்ல லாபம் கிடைக்கும். முக்கியமாக இக்காலத்தில் அனைத்து காரியங்களிலும் வெற்றி கிடைக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு புதன் சுக்கிர சேர்க்கையால் நற்பலன்கள் கிடைக்கும். வருமானம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. உங்களின் கௌரவம் அதிகரிக்கும். பணியிடத்தில் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. வெளிநாடு செல்ல விருப்பம் கொண்டிருந்தால், அதற்கான வாய்ப்புகள் இக்காலத்தில் உருவாகும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த புதன் சுக்கிர சேர்க்கை காலம் சாதகமாக இருக்கும். இக்காலத்தில் அதிக லாபத்தின் காரணமாக நிதி நிலைமை வலுவாக இருக்கும். பணியிடத்தில் கௌரவம் மற்றும் பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. அதோடு உங்களின் பணியும் பணியிடத்தில் பாராட்டைப் பெறும்.குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த புதன் சுக்கிர சேர்க்கை காலம் ஒரு வரப்பிரசாதமாக அமையும். இந்த ராசிக்காரர்களுக்கு இக்காலத்தில் புதன் மற்றும் சுக்கிரனின் சிறப்பு ஆசி கிடைக்கும். பணம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். கல்வி துறையுடன் தொடர்புடையவர்களுக்கு இக்காலம் சாதகமாக இருக்கும். வேலையில் வெற்றி பெற இந்த ராசிக்காரர்கள் கடினமாக உழைக்க வேண்டியிருக்காது. திருமணமானவர்களுக்கு திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக இருக்கும்.