Just In
- 3 hrs ago 18 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- 4 hrs ago Garlic Peels: பூண்டின் தோலில் இவ்வளவு நன்மைகளா? என்னென்ன-ன்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..
- 4 hrs ago Hair Care: பளபளப்பான மற்றும் வலிமையான முடி வேணுமா? கற்பூரத்தை இப்படி யூஸ் பண்ணுங்க... சர சரனு வளரும்...!
- 5 hrs ago 3 முள்ளங்கியும், 1 தக்காளியும் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு செமயா இருக்கும்..
Don't Miss
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ஜூலை மாதத்தில் பிறந்தவர்களின் உண்மையான குணம் என்ன தெரியுமா? இந்த விஷயத்தில் அவர்களை நம்பாதீங்க...!
மனிதராக பிறந்த அனைவருக்குமே சில தீய குணங்கள் இருக்கும், அந்த வகையில் ஜூலை மாதத்தில் பிறந்தவர்களுக்கும் சில தீய குணங்களும் இருக்கும்.
நம்முடைய பிறந்த நாளுக்கான ராசி எப்படி நம் விதியை நிர்ணயிப்பதில் முக்கியப்பங்கு வகிக்கிறதோ அதேபோல நாம் பிறந்த மாதம் நம் ஆளுமையின் மீது அதிக ஆதிக்கம் செலுத்துகிறது. அதன்படி அறிவு மற்றும் நகைச்சுவை ஜூலை மாதத்தில் பிறந்த மக்களின் மிக அற்புதமான இரண்டு குணங்களாகும். இது மட்டுமின்றி அவர்கள் உண்மையில் சிறந்த நண்பராக இருப்பார்கள் மேலும் அனைவராலும் விரும்பப்படுபவராக இருப்பார்கள்.
மனிதராக பிறந்த அனைவருக்குமே சில தீய குணங்கள் இருக்கும், அந்த வகையில் ஜூலை மாதத்தில் பிறந்தவர்களுக்கும் சில தீய குணங்களும் இருக்கும். இந்த பதிவில் ஜூலை மாதத்தில் பிறந்தவர்களிடம் இருக்கும் நல்ல மற்றும் தீய குணங்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.
நிறைவான வாழ்வை வாழ்வார்கள்
வாழ்க்கை உண்மையில் என்னவென்று அவர்களுக்குத் தெரியும், மகிழ்ச்சி என்பது அவர்களால் ஒருபோதும் விட முடியாத ஒன்று. அவர்கள் மிகவும் உற்சாகமான வாழ்க்கையை வாழ்கிறார்கள் ஒவ்வொரு நாளையும் மகிழ்ச்சியான நாளாக கழிக்க அவர்கள் விரும்புகிறார்கள். இவர்களை சுற்றி எப்பொழுதும் நேர்மறை ஆற்றல் நிறைந்திருக்கும்.
வசீகரமானவர்கள்
வசீகரம் இவர்களிடம் இயற்கையாகவே நிறைந்திருக்கும், இவர்களின் வசீகரம் மற்றும் நகைச்சுவை உணர்வு இவர்களை சுற்றி எப்பொழுதும் ஒரு கூட்டத்தை வைத்திருக்கும். இவர்களை வெறுப்பவர்கள் கூட இவர்களின் அருகில் இருக்கும்போது வெறுப்பை வெளிப்படுத்த முடியாது.
மற்றவர்களின் உணர்வுகளை பற்றி கவலைப்படுபவர்கள்
மற்றவர்கள் கவலையில் இருப்பதை பார்க்க இவர்கள் விரும்பமாட்டார்கள். மற்றவர்களின் உணர்வுகள் குறித்து எப்போதும் சிந்தித்து கொண்டிருப்பார்கள். இது நண்பர்களிடையே உங்களுக்கு அதிக அன்பை பெற்றுத்தரும். மனரீதியான மற்றும் உணர்ச்சிரீதியான ஆதரவாக இவர்களுக்கு எப்பொழுதும் நண்பர்களின் ஆதரவு இருக்கும்.
MOST READ: விந்தணுக்கள் பெண்கள் உடலுக்குள் எவ்வளவு காலம் உயிர்வாழும்? விந்தணுக்களின் ஆயுளை அதிகரிப்பது எப்படி?
முடிவெடுக்கும் திறன்
அனைவருக்குமே வாழக்கையில் பிரச்சினைகள் இருக்கும். அப்படி பிரச்சினைகள் வரும்போது இவர்களின் ஆலோசனையை கேளுங்கள். முடிவெடுப்பது அவர்களுக்கு எளிதில் வரும் ஒன்று, மேலும் சில கடினமான முடிவுகளை நல்ல நேரத்தில் எடுக்க அவர்கள் உங்களுக்கு உதவுவார்கள்.
தேவையில்லாத பேச்சுகள்
தேவையில்லாமல் பேசுவது அவர்கள் வெறுக்கும் ஒன்று. அவர்கள் முதுகிற்கு பின்னால் பேசும் நபர்கள் அல்ல. அவர்கள் வதந்திகள் மீது வலுவான வெறுப்பைக் கொண்டுள்ளனர். புத்திசாலித்தனமான பேச்சு மற்றும் நகைச்சுவையான பேச்சு இவர்கள் விரும்பும் ஒன்றாகும். விஷமத்தனமான பேச்சு இவர்கள் அடியோடு வெறுக்கும் ஒன்றாகும்.
எளிதில் உடையக்கூடியவர்கள்
அவர்கள் எல்லாவற்றையும் தங்கள் இதயத்திற்கு நேரடியாக எடுத்துக்கொள்கிறார்கள். சிறிய விஷயங்கள் கூட அவர்களை மோசமாக தொந்தரவு செய்யக்கூடும், மேலும் அவற்றிலிருந்து மீள வாழ்நாள் முழுவதும் ஆகலாம். இவர்கள் மீது குற்றம் சுமத்தினால் எளிதில் உடைந்து விடுவார்கள், அதிலிருந்து வெளியே வர அதிக காலம் எடுத்துக் கொள்வார்கள்.
MOST READ: காமசூத்ராவில் ஆண்கள் அவசியம் தெரிஞ்சிக்க வேண்டிய பெண்களைப் பற்றிய ரகசியங்கள் என்னென்ன தெரியுமா?
குடும்பத்தின் மீது காதல்
அவர்கள் தங்கள் உறவுகளை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறார்கள், குறிப்பாக குடும்பம் என்று வரும்போது. அவர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் மிக நெருக்கமான தொடர்பைக் கொண்டுள்ளனர், மேலும் அவர்களுக்கு ஒரு கண்மூடித்தனமான இடத்தையும் வைத்திருக்கிறார்கள். குடும்பமும், காதலும் இவர்களுக்கு மிகவும் முக்கியமானது.
மனநிலை மாற்றங்கள்
இவர்களின் மனநிலை என்பது இவர்கள் இருக்கும் இடம் மற்றும் சூழலுக்கு ஏற்றவாறு தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும். இதனால் இவர்களின் மனம் எப்போது எந்த பக்கம் நிற்கும் என்ன செய்யுமென்று சுற்றியிருப்பவர்களால் தீர்மானிக்க முடியாது. அதேசமயம் இவர்கள் தொடர்ந்து தங்கள் கருத்துக்களை மாற்றிக்கொண்டே இருப்பார்கள்.
தற்பெருமை
இவர்கள் ஆடம்பரத்தையும், பவரையும் விரும்புவார்கள். பொதுவாக இவர்கள் தங்களின் உண்மையான நிலையை விட பெரியவர்களாக அனைவரிடமும் காட்டிக்கொள்வார்கள். அனைவராலும் விரும்பப்படுவதற்கு இது முக்கியமென்று நினைப்பார்கள். இவர்கள் உண்மையில் அனைத்தையும் மன்னித்து விடுவார்கள் ஆனால் இவர்களின் ஈகோ நீண்ட காலம் இவர்களை பிடிவாதத்துடன் வைத்திருக்கும்.