Just In
- 1 hr ago Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- 6 hrs ago 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- 6 hrs ago 40 வருடங்கள் கழித்து கருவுற்றால் இந்த விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்!
- 7 hrs ago தழும்புகள் உங்க சருமத்தை அசிங்கமா காட்டுகிறதா? இந்த எளிய வீட்டு வைத்தியங்களை யூஸ் பண்ணுங்க..சீக்கிரம் மறையும்!
Don't Miss
- News போலி பத்திரம்.. ஆன்லைனிலேயே பத்திர மோசடியை கண்டுபிடிக்கலாமா? இதை கவனியுங்க.. தமிழக அரசு சபாஷ்
- Automobiles சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Movies Actress Sujitha: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாயகி.. சூப்பர்ல!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
புதாதித்ய யோகத்தால் செப்டம்பர் 17 முதல் இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டமானதா இருக்கப் போகுது...
செப்டம்பர் 17 ஆம் தேதி புதன் மற்றும் சூரியனின் சேர்க்கை கன்னி ராசியில் நிகழ்கிறது. இதன் விளைவாக புதாத்திய யோகம் உருவாகிறது. இந்த யோகம் ஒரு சுப யோகம் என்பதால் பல ராசிக்காரர்களுக்கு நற்பலன்கள் கிடைக்கும்.
ஜோதிடத்தில் கிரக மாற்றங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை. ஏனெனில் கிரகங்கள் மனித வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. சில சமயங்களில் கிரகங்களின் சேர்க்கைகள் யோகங்களை உருவாக்குகின்றன. இந்நிலையில் செப்டம்பர் 10 ஆம் தேதி புதன் கன்னி ராசியில் வக்ரமாகிறார். அக்டோபர் 02 ஆம் தேதி கன்னியில் வக்ர நிவர்த்தி அடைகிறார். இதற்கிடையில் 2022 செப்டம்பர் 17 ஆம் தேதி சூரியன் சிம்ம ராசியில் இருந்து புதன் ஆளும் கன்னி ராசிக்கு செல்கிறார்.
இதனால் செப்டம்பர் 17 ஆம் தேதி புதன் மற்றும் சூரியனின் சேர்க்கை கன்னி ராசியில் நிகழ்கிறது. இதன் விளைவாக புதாத்திய யோகம் உருவாகிறது. இந்த யோகம் ஒரு சுப யோகம் என்பதால் பல ராசிக்காரர்களுக்கு நற்பலன்கள் கிடைக்கும். இப்போது 2022 செப்டம்பர் மாத புதாத்திய யோகத்தால் எந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கப் போகிறது என்பதைக் காண்போம்.
மேஷம்
புதாத்திய யோகத்தால் மேஷ ராசிக்காரர்களுக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும். எங்காவது முதலீடு செய்ய நினைத்தால், அதை இந்த 15 நாட்களுக்குள் செய்துவிடுங்கள். இதனால் நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரிகளுக்கு பொற்காலமாக இருக்கும். அரசு வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும். மாணவர்களுக்கு இக்காலம் சாதகமாக இருக்கும். முக்கியமாக பணிபுரிபவர்களின் வருமானம் உயர வாய்ப்புள்ளது.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு புதாத்திய யோக காலம் அற்புதமாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல பலன்கள் கிடைக்கும். எந்த துறையில் பணிபுரிந்தாலும், அதில் வெற்றி கிடைக்கும். வியாபாரிகளுக்கு லாபம் கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்க வாய்ப்புள்ளது.
கடகம்
புதாத்திய யோகமானது கடக ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். வேலை மற்றும் வியாபாரத்தில் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். அனைத்து துறைகளிலும் வெற்றி பெறுவீர்கள். முதலீடு செய்ய நினைத்தால், அதற்கு இக்காலம் சிறந்தது. இந்த காலகட்டத்தில் வருமானம் அதிகரிக்கும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரிகளுக்கு லாபம் கிடைக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு புதாத்திய யோக காலம் சூப்பராக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு வேலையில் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. சிக்கிய பணம் இக்காலத்தில் உங்களுக்கு கிடைக்கும். செல்வம் மற்றும் முன்னேற்றத்திற்கான பாதைகள் திறக்கும். பணத்தை முதலீடு செய்ய இது சிறந்த காலம். மாணவர்களுக்கு சாதகமான காலமாக இருக்கும்.