Just In
- 1 hr ago உங்க பற்கள் வலிமையாகவும், கிருமிகள் இல்லாததாகவும் இருக்கணுமா? இதில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- 2 hrs ago மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- 3 hrs ago Kulfi: 4 பிரட்டும், 1 பால் பாக்கெட்டும் வெச்சு ஈஸியா குல்பி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
- 4 hrs ago சர்க்கரை நோயாளிகள் சிக்கன் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா? எப்படி சாப்பிடணும் தெரியுமா?
Don't Miss
- News திண்டுக்கல்-பொள்ளாச்சி பஸ் பெயர் பலகையையில் என்ன "ஓடிச்சி" பாருங்க.. தலைசுற்றிப்போன மக்கள்
- Sports IPL Classics - 2010 சீசன் அரையிறுதியில் CSK வென்றது எப்படி? பலம் வாய்ந்த டெக்கான் அணியுடம் மோதிய கதை
- Movies Actor Karthi: ஜூன் மாதத்தில் துவங்கும் சர்தார் 2 படத்தின் சூட்டிங்.. கதை என்ன தெரியுமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
மனிதர்களை உயிரோடு புதைத்து அதை திருவிழாவாக கொண்டாடும் வினோத கிராமம்... காரணம் என்ன தெரியுமா?
உலகெங்கிலும் உள்ள பல கலாச்சாரங்கள் நம்மை அதிர்ச்சியில் உறையவைக்கும் சில வினோதமான பழக்கவழக்கங்களையும் சடங்குகளையும் பின்பற்றுகின்றன.
உலகெங்கிலும் உள்ள பல கலாச்சாரங்கள் நம்மை அதிர்ச்சியில் உறையவைக்கும் சில வினோதமான பழக்கவழக்கங்களையும் சடங்குகளையும் பின்பற்றுகின்றன. விலங்குகளை பலியிடுவது முதல் பட்டினி கிடப்பது வரை விவேகமுள்ள எவரையும் முற்றிலும் அதிர்ச்சியடையச் செய்யும் இத்தகைய பல நடைமுறைகளை மக்கள் பின்பற்றுகிறார்கள்.
இந்த சடங்குகளில் பெரும்பாலானவை மிகவும் பழமை வாய்ந்தவை. கியூபாவில் உள்ள சாண்டியாகோ டி லாஸ் வேகாஸில் வசிப்பவர்கள் பின்பற்றி வரும் மிகவும் வினோதமான மற்றும் பயமுறுத்தும் சடங்கைப் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
வினோதமான இறுதி சடங்கு
உலகெங்கிலும் பல மரண சடங்குகள் பின்பற்றப்படுவதால், இந்த குறிப்பிட்ட சடங்கு நிச்சயமாக உங்களுக்கு பல தூக்கமில்லாத இரவுகளைத் தரும். மக்களை உயிருடன் அடக்கம் செய்யும் சடங்கு இது. மக்களை உயிருடன் புதைக்கும் இந்த வினோதமான நடைமுறை குறித்த கூடுதல் விவரங்களை மேற்கொண்டு பார்க்கலாம்.
பழங்கால பாரம்பரியம்
கியூபாவில் உள்ள சாண்டியாகோ டி லாஸ் வேகாஸ் மக்கள் தங்கள் கல்லறைகளில் மக்களை உயிருடன் அடக்கம் செய்யும் ஒரு பழமையான மனிதாபிமானமற்ற பாரம்பரியத்தை பின்பற்றி வருகின்றனர். இந்த பாரம்பரியம் பெரும் கொண்டாட்டத்தை உள்ளடக்கியது, இதில் வேடிக்கையானது என்னவெனில் இங்கு மக்கள் அதை மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடுகிறார்கள்.
சடங்கின் வரலாறு
கியூபா தலைநகரிலிருந்து தெற்கே சுமார் 12 மைல் தொலைவில் சாண்டியாகோ டி லாஸ் வேகாஸில் இந்த கொண்டாட்டம் நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 5 ஆம் தேதி, கடந்த 30 ஆண்டுகளாக நடைபெறுகிறது, மேலும் இது பச்செஞ்சோவின் அடக்கம் என்று அழைக்கப்படுகிறது.
MOST READ: உங்க காதலில் இந்த அறிகுறிகள் இருந்தால் நீங்க ஒரு ஆபத்தான காதலில் சிக்கியிருக்கீங்கனு அர்த்தமாம்...!
எப்படித் தொடங்கியது?
வரலாற்றாசிரியர்களின் கூற்றுப்படி, இந்த பாரம்பரியம் ஒவ்வொரு ஆண்டும் கியூபாவில் ஒரு பண்டிகையாக பின்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது ‘ஆல்கஹால் திருவிழா' என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு வசிப்பவர்கள் தாங்கள் இந்த திருவிழாவை மிக நீண்ட காலமாக பின்பற்றி வருவதாகவும், இது ஒவ்வொரு ஆண்டும் பின்பற்றப்பட வேண்டிய ஒரு மரபாக மாறிவிட்டதாகவும் கூறியுள்ளனர்.
திருவிழா
மக்கள் முதலில் அதிக எண்ணிக்கையில் கூடி பேரணிகளை ஏற்பாடு செய்கிறார்கள், அங்கு அவர்கள் மற்றவர்களை சவப்பெட்டிகளில் கொண்டு சென்று புதைக்க கல்லறைகளுக்கு அழைத்துச் செல்கிறார்கள். இதில் முக்கியமானது இந்த நடைமுறையைப் பின்பற்றும்போது இந்த மக்கள் உயிருடன் இருப்பதாகக் கூறப்படுகிறது.
கல்லறையில் என்ன நடக்கிறது?
தூக்கி வருபவர்கள் சவப்பெட்டியை கல்லறையில் வைத்து அந்த நபரின் மரணம் குறித்து துக்கப்படுகிறார்கள். துக்கத்தைத் தொடர்ந்து ஒரு விதவை அவரது / அவள் பெயரை மிகவும் சத்தமாக கத்திவிட்டு அந்த நபரின் மரணத்திற்கு இரங்கல் தெரிவிக்கிறார்.
MOST READ: நீங்கள் காதலிக்கும்போது இந்த காரணங்களுக்காக அவங்கள ரிஜெக்ட் பண்ணாதீங்க... நஷ்டம் உங்களுக்குத்தான்..!
கொண்டாட்டங்களின் தொடக்கம்
கியூபா மக்களின் கூற்றுப்படி, ‘மறுபிறவி என்பது வாழ்க்கையில் மிக அழகான விஷயம்' என்ற நம்பிக்கைக்காக இந்த திருவிழா கொண்டாடப்படுகிறது. சவப்பெட்டியில் இருப்பவரை சுற்றியுள்ள அனைவரும் மது அருந்துகிறார்கள், நடனமாடுகிறார்கள், பலவகையான உணவுகளை சாப்பிடுகிறார்கள். கல்லறையில் வைக்கப்பட்டு இறந்த நபரைப் போல நடத்தப்பட்ட ஒரு நபரின் புதிய பிறப்பைக் கொண்டாட இது அவர்களை அனுமதிக்கிறது. பார்ப்பதற்கு விசித்திரமாக இருந்தாலும் இது அந்த மாகாண மக்களின் முக்கிய கொண்டாட்டமாக இருக்கிறது. இன்றும் இது கொண்டாடப்பட்டு வருகிறது.