Just In
- 1 hr ago
சுவையான... முட்டைக்கோஸ் வடை
- 2 hrs ago
உங்க கணவன் அல்லது மனைவிகிட்ட இந்த அறிகுறிகள் இருந்தா நீங்க ஜாக்கிரதையா இருக்கணுமாம்...ஏன் தெரியுமா?
- 3 hrs ago
இரவு தூங்கும் முன் ஒரு டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர் சாப்பிடுவதால் பெறும் நன்மைகள்!
- 4 hrs ago
உங்க சிறுநீரகம் எந்த பாதிப்பும் இல்லாம சூப்பரா இயங்க...நீங்க இந்த உணவுகள சாப்பிட்டா போதுமாம்...!
Don't Miss
- News
முதலமைச்சர் நடத்திய திடீர் ஆய்வு! வியர்த்து விறுவிறுத்துப் போனஅதிகாரிகள்! 20 நிமிடம் பரபரப்பு!
- Sports
"முக்கிய வீரரே இல்லை".. டாஸில் லக்னோ அணி எடுத்த ரிஸ்க்.. ஆர்சிபிக்கு இதுதான் சரியான நேரம்!!
- Finance
எலான் மஸ்க்-கிற்கு குழிபறிக்கும் பில் கேட்ஸ்.. தேடி தேடி முதலீடு..!
- Movies
‘பிசாசு 2’ திகில் காட்சிகள் எக்கச்சக்கம் … நல்ல செய்தி சொன்ன மிஸ்கின்!
- Automobiles
டாடாவிற்கு போட்டியாக களமிறங்கிய கியா... இவி6 காருக்கு க்ராஷ் டெஸ்டில் 5 ஸ்டார் ரேட்டிங்
- Technology
16எம்பி ரியர் கேமரா, 5000 எம்ஏஎச் பேட்டரியுடன் மோட்டோ இ32எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அகோரிகள் ஏன் பிணங்களுடனும், பிணங்களுக்கு நடுவிலும் உடலுறவு வைத்துக் கொள்கிறார்கள் தெரியுமா?
உலகத்தில் அனைத்து மதத்தினரும் தங்கள் கடவுள்களை வழிபட தனித்துவமான வழிகளை பின்பற்றுகின்றனர். இந்தியாவை பொறுத்தவரை பல்வேறு விதமான வழிபாட்டு முறைகள் இருந்தாலும் அகோரிகளின் கடவுள் வழிபாட்டு முறை என்பது பல மர்மங்களும், ரகசியங்களும் நிறைந்ததாக உள்ளது. அகோரிகளின் வழிபாட்டு முறைகள் சாதாரண மக்களுக்கு பயத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.
இறந்த உடல்களை சாப்பிடுவது, மண்டை ஓடுகள் மற்றும் எலும்புகளை அணிகலன்களாக அணிந்து கொள்வது, இறந்த உடல்களுடன் உடலுறவு வைத்துக்கொள்வது என இவர்களின் வழிபாட்டு முறைகள் ஒவ்வொன்றிற்கும் பின்னால் இவர்களுக்கென்று தனிக்காரணம் உள்ளது. இந்த பதிவில் அகோரிகளைப் பற்றிய சில வினோதமான தகவல்களை பார்க்கலாம்.

அகோரிகள் சிவனை வழிபடுவார்கள்
அகோரிகள் சிவபெருமானையும், அவரது பெண் உருவமான காலி மற்றும் மரணத்தின் கடவுளை வணங்குபவர்கள். மற்ற சாதுக்களைப் போல் அல்லாமல் இவர்கள் தாங்கள் வணங்கும் தெய்வத்தை இறைச்சி, மது மற்றும் உடலுறவு மூலம் திருப்திப்படுத்தலாம் என்று நம்புகிறார்கள். அனைத்திலும் கடவுள் இருப்பதாக இவர்கள் நம்புகிறார்கள் அதனால் மனிதக் கழிவுகள், இறந்த உடல்கள் என அனைத்தையும் இவர்கள் சாப்பிடுகிறார்கள். இவர்கள் புனிதமான மற்றும் தூய்மைற்ற விஷயங்கள் இரண்டையும் ஒன்றிணைக்க முயற்சிக்கிறார்கள்.

பிணங்களுடன் உறவு
அகோரிகளின் மிகவும் மோசமான நடைமுறைகளில் ஒன்று நெக்ரோபிலியா ஆகும். காளி தெய்வம் உடலுறவில் திருப்தி கோருகையில் அவர்களைப் பொறுத்தவரை, அவர்கள் உடலுறவு கொள்ள ஒரு பொருத்தமான சடலத்தைக் கண்டுபிடிப்பார்கள். அகோரிகள் இதைப்பற்றி கூறுகையில் வெளி உலகத்திற்கு மூர்க்கத்தனமாகத் தோன்றும் விஷயங்களை நாங்கள் செய்வதற்கான காரணம் உண்மையில் எளிது. அசுத்தமானவற்றில் தூய்மையைக் கண்டுபிடிக்க, ஒரு சடலத்துடன் உடலுறவின் போது அல்லது ஒரு மனித மூளையைச் சாப்பிடும்போது கூட ஒரு அகோரி கடவுள் மீது கவனம் செலுத்தினால், அவர் சரியான வழியில் இருக்கிறார். அவர் கடவுளுடன் விரைவில் இணைய முடியும்.

இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்தி
அகோரிகள் சூனியம் மற்றும் இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்தியை நம்புகிறார்கள், மேலும் பெரும்பாலும் நெக்ரோபிலியாவில் ஈடுபடும் சடங்கை இதில் காணலாம். இறந்தவர்களுக்கு நடுவே உடலுறவு செய்வது இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகளுக்கு வழிவகுக்கும் என்பதை இந்த சடங்கு விளக்குகிறது. எனவே, இந்த சடங்கை செய்ய அகோரிகள் ஒரு கல்லறையில் இரவு ஒன்றுகூடுகின்றனர். அகோரிகள் இறந்த பெண்கள் சடலங்களின் மீது சாம்பல் பூசுகிறார்கள், அதற்குப்பின் மந்திரங்கள் முழங்க, இசைக்கருவிகள் ஒலிக்க இந்த சடங்கு நடக்கிறது. அகோரி பெண்கள் தங்களின் மாதவிடாய் காலத்தின் போது இந்த சடங்கை செய்கிறார்கள்.
MOST READ: இந்த 15 நாடுகளில் ஒருவருக்கு கூட கொரோனா தொற்று இல்லையாம்... எப்படி இதை சாதித்தார்கள் தெரியுமா?

மிருகங்களுடன் உணவைப் பகிர்ந்து கொள்வது
அகோரிகள் ஒருபோதும் மனக்கசப்பையும் வெறுப்பையும் தங்கள் இதயத்தில் வைத்திருப்பதில்லை, ஏனென்றால் வெறுப்பவர்கள் ஒருபோதும் தியானிக்க முடியாது என்று அவர்கள் நம்புகிறார்கள். ஒரே கிண்ணத்தில் இருந்து நாய்கள் மற்றும் மாடுகளுடன் உணவைப் பகிர்வது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்று அவர்கள் கூறுகிறார்கள். இந்த எதிர்மறை எண்ணங்களை அகற்றுவதன் மூலம், அவர்கள் சிவபெருமானுடன் ஒருவராக மாறுவதற்கான அவர்களின் இறுதி நோக்கத்தில் கவனம் செலுத்த முடியும் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.

அகோரிகளின் ஆடை
அவர்கள் தங்கள் உடலில் இடுப்பில் ஒரு சிறிய சணல் ஆடையை மட்டும்தான் அணிகிறார்கள். சில நேரங்களில் நிர்வாணமாகவும், சில சமயங்களில் இறந்த உடல்களை எரித்த சாம்பலை உடல் முழுவதும் பூசிக்கொள்கிறார்கள். சாம்பல் என்பது வாழ்க்கையின் 5 அத்தியாவசிய கூறுகளால் ஆனது என்று அறியப்படுகிறது, இது ஒரு அகோரியை நோய் மற்றும் கொசுக்களிலிருந்து பாதுகாக்கும் என்று நம்பப்படுகிறது. முதன்மையாக சிவபெருமானின் உடல் தோற்றத்தைப் பின்பற்றுவதற்காக செய்யப்படுகிறது.

மண்டை ஓடுகள்
மனித மண்டை ஓடு அல்லது கபாலத்தை வைத்திருப்பது உண்மையில் அகோரிகளின் முதன்மையான அறிகுறியாகும். அவை தண்ணீரில் மிதந்து வரும் இறந்த உடல்களில் இருந்து எடுக்கப்பட வேண்டும். அதனை மது அருந்தும் பாத்திரமாகவோ, உணவருந்தும் பாத்திரமாகவோ அல்லது தானம் பெறும் பாத்திரமாகவோ அதனை பயன்படுத்துவார்கள்.
MOST READ: காமசூத்ரா கூறியுள்ள இந்த முத்த வகைகள் உங்களின் செக்ஸ் வாழ்க்கையை சூப்பராக மாற்றுமாம் தெரியுமா?

மந்திர சக்திகள்
தூய்மையான மற்றும் தூய்மையற்ற, தூய்மையான மற்றும் அசுத்தமான மற்றும் புனிதமான மற்றும் தூய்மையற்றவற்றுக்கு இடையிலான விதிகளை மீறுவதன் மூலம் குணப்படுத்தும் மந்திர சக்திகளை பெறலாம் என்று அகோரிகள் நம்புகிறார்கள். இரவில் எல்லோரும் நிம்மதியாக தூங்கும்போது மைதானத்தில் நிம்மதியாக தியானிக்க அவர்கள் விரும்புகிறார்கள்.

சாபம்
நிர்வாணத்திற்கான இறுதி பாதை மற்றும் ஆன்மாவின் விடுதலையும் அவதூறு என்று அவர்கள் நம்புகிறார்கள். வெளிப்படையான காரணமின்றி அவர்கள் பெரும்பாலும் அவதூறுகளைப் பயன்படுத்துவதையும் சத்தமாக சபிப்பதையும் காண இதுவே காரணம். அகோரிகள் அறிவொளியை அடைய இதுதான் ஒரே வழி. இதில் மேலும் விசித்திரம் என்னவென்றால் இவர்கள் சாபம் கூட ஆசீர்வாதமாகத்தான் கருதப்படும்.

மண்டை ஓடுகளை நகையாக அணிவது
அகோரிகளில் பெரும்பாலானோர் மண்டை ஓடுகளை நகைகளாக அணிவதும், அவற்றில் விளையாடுவதையும் வழக்கமாக கொண்டிருக்கின்றனர். அவர்களின் வாழ்க்கையில் மண்டை ஓடுகள் என்பது மிகவும் முக்கியமானதாகும். அவர்களில் சிலர் தகனம் செய்யப்பட்டவர்களின் தொடை எலும்பை நடைபயிற்சி குச்சியைப் போல பயன்படுத்துவதாகவும் அறியப்படுகிறது. அவர்கள் ஒருபோதும் தலைமுடியை வெட்டவோ, கழுவவோ மாட்டார்கள்
MOST READ: இந்த அறிகுறிகள் இருந்தால் நீங்கள் தவறான ஒருவரை திருமணம் செய்துள்ளீர்கள் என்று அர்த்தமாம்... உஷார்!

புகைப்பழக்கம்
மரிஜுவானாவை புகைப்பதை அகோரிகள் நம்புகிறார், ஏனென்றால் அவர்கள் வழக்கமாகச் செய்யும் கடுமையான தியான நடைமுறைகளில் கவனம் செலுத்த இது உதவுகிறது என்று அவர்கள் நினைக்கிறார்கள். உண்மையில் அவர்கள் எல்லா நேரத்திலும் மரிஜுவானாவின் தாக்கத்தில் இருப்பார்கள், ஆனால் எப்போதும் அமைதியாகவே தோற்றமளிப்பார்கள். இவை ஏற்படுத்தும் பிரமைகள் ‘உயர்ந்த ஆன்மீக அனுபவங்களாக' எடுத்துக் கொள்ளப்படுகின்றன.