Just In
- 4 min ago கத்திரிக்காயை இந்த மாதிரி ஒருமுறை பொரியல் செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க...
- 39 min ago ஹிட்லரின் நாஜி முகாமில் நடத்தப்பட்ட திகிலூட்டும் சோதனைகள் என்னென்ன தெரியுமா? முக்கியமா இரட்டை குழந்தைகள் மீது!
- 2 hrs ago Constipation: மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து உடனே விடுபடணுமா? இந்த பானங்களை தினமும் குடிங்க..
- 3 hrs ago 300 ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட முகலாயர்கள் அவங்க ஆட்சியில் இந்தியாவின் எந்தெந்த விஷயங்களை மாற்றினார்கள் தெரியுமா?
Don't Miss
- Finance வெயிலுக்கு ஏத்த பிஸ்னஸ்.. சும்மா சொல்லக்கூடாது முகேஷ் அம்பானி வேற லெவல்..! .
- News "உயர் ஜாதியினரிடம்" 41% ஆனால்.. முஸ்லிம்களிடம் 8% சொத்துக்கள்தான் உள்ளன: டேட்டா சொல்லும் உண்மை
- Technology அள்ளி தரும் BSNL.. வெறும் ரூ.299 போதும்.. தினமும் 3GB டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. எத்தனை நாள் வேலிடிட்டி?
- Movies ஒரே டிப்ரெஷன்.. வாழ்க்கையே போச்சு.. தப்பான முடிவை எடுக்க பார்த்த நடிகை.. சட்டென திறந்த கதவு!
- Automobiles சாதாரணமா பஸ்ஸில் பயணம் செய்தது இவ்ளோ பெரிய ஆளா... முகத்தை நல்லா உத்து பார்த்ததும் ஷாக் ஆன மக்கள்...
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
பெண்கள் ஏன் காலில் கருப்புக் கயிறு அணிகிறார்கள் தெரியுமா? அதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா?
காலில் கருப்பு நூல் கட்டும் பாரம்பரியம் நமது பண்டைய வரலாற்றில் இருந்து வருகிறது. சாஸ்திரங்களின்படி, கருப்பு நூல் அணிவதால் பல நன்மைகள் உள்ளன.
காலில் கருப்பு நூல் கட்டும் பாரம்பரியம் நமது பண்டைய வரலாற்றில் இருந்து வருகிறது. சாஸ்திரங்களின்படி, கருப்பு நூல் அணிவதால் பல நன்மைகள் உள்ளன. குறிப்பாக, காலில் கட்டப்பட்டால், அது ஒரு மனிதனின் வாழ்க்கையில் அற்புதமான மாற்றங்களைக் கொண்டுவருகிறது.
இன்றும் ஒருவரது வீட்டில் குழந்தை பிறந்தால், அவர்களின் காலில் கருப்பு நூல் கட்டுவது வழக்கம். இதை அணிந்தால் தீய கண்களில் இருந்து குழந்தையை பாதுகாக்க முடியும் என்று மக்கள் நம்புகிறார்கள். குறிப்பாக பெண்கள் எந்த வயதிலும் காலில் கருப்புக் கயிறு கட்டுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஜோதிட சாஸ்திரத்தின் படி கருப்பு நூல் அணிவது பல எதிர்மறை ஆற்றல்களிலிருந்து பாதுகாக்கும் மேலும் பல நன்மைகளை வழங்கும், அவற்றைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
வயிற்று வலி பிரச்சனையை சரி செய்கிறது
ஒருவருக்கு வயிற்றில் வலி அதிகமாக இருந்தால், அவர்கள் ஒரு கருப்பு நூலை எடுத்து கால் விரலில் கட்ட வேண்டும். தொப்புளை அதன் இடத்தில் இருந்து அகற்றும்போது, அது வயிற்றுவலியை ஏற்படுத்துகிறது, அதற்கு சிகிச்சையளிக்கப்படாவிட்டால், இந்த வலி எப்போதும் அப்படியே இருக்கும். கறுப்பு நூலை காலில் கட்டினால் வயிற்றுவலி உடனே குணமாகும்.
நிதி பிரச்சனைகளைத் தீர்க்கிறது
உங்கள் வாழ்க்கையில் நிறைய பணப் பிரச்சனைகள் இருந்தால், செவ்வாய் அன்று உங்கள் வலது காலில் ஒரு கருப்பு நூலைக் கட்டுங்கள். பணம் தொடர்பான பிரச்சனைகள் அனைத்தும் படிப்படியாக நீங்கும். வீட்டில் பணப் பற்றாக்குறை இருக்காது, உங்கள் வாழ்க்கையில் செழிப்பு இருக்கும்.
காயங்களைக் குணப்படுத்தும்
சில நேரங்களில் காலில் ஏற்பட்ட காயங்கள் குணமாக நீண்ட காலமாகலாம், சிலசமயங்களில் குணமடையாமலே போகலாம். இதனால், பல இன்னல்களை சந்திக்க வேண்டியுள்ளது. எனவே இந்த சிறிய கருப்பு நூலை கணுக்காலில் அணிந்தால், காயம் விரைவில் குணமடையத் தொடங்குகிறது. பல நேரங்களில், அதிக வேலை அல்லது நடைபயிற்சி காரணமாக கால்களில் வலி தொடங்குகிறது. இந்த நிலையிலும் கறுப்பு நூல் அணிவதால் பாத வலிக்கு உடனடி நிவாரணம் கிடைக்கும்.
கண் திருஷ்டியை விரட்டுகிறது
கைகள், கால்கள், கழுத்து போன்றவற்றிலும் கருப்பு நூல் அணியப்படுகிறது. கண் திருஷ்டியில் இருந்து பாதுகாக்க பலர் கருப்பு நூலை பரிந்துரைக்கின்றனர். கெட்ட ஆற்றல்கள் மனிதனைப் பாதிக்காதபடி, தனக்குள் இருக்கும் அனைத்து எதிர்மறை ஆற்றலையும் உள்வாங்கிக் கொள்ளும் திறன் கொண்டது. நீங்கள் மற்றவர்களின் கண் திருஷ்டியைத் தவிர்க்க விரும்பினால், கருப்புக் கயிறை அணிந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.
சனிபகவானின் அருள்
கருப்பு நிறத்திற்கு வெப்பத்தை உறிஞ்சும் சக்தி உண்டு. எனவே, ஒருவர் கணுக்காலில் கருப்புக் கயிறை அணிந்தால், அது எதிர்மறை ஆற்றல்களிலிருந்து பாதுகாக்கும் கவசமாக செயல்படுகிறது. அதேபோல், இந்த நூல் சனி தோஷத்தின் எதிர்மறை விளைவுகளிலிருந்து மனிதர்களைப் பாதுகாக்கிறது. குறிப்பாக, அதை முழு பக்தியுடன் காலில் கட்டினால், உங்கள் வாழ்க்கையின் அனைத்து பிரச்சனைகளும் நீங்கும்.
MOST READ: துரோகத்தை தாங்கும் மனவலிமை எந்த ராசியில் பிறந்தவர்களுக்கு இருக்கும் தெரியுமா?உங்க ராசி இதுல இருக்கா?
கருப்புக் கயிறை எப்படி கட்ட வேண்டும்?
ஜோதிட சாஸ்திரப்படி இந்த கயிறை எப்போதும் 9 முடிச்சுகள் போட்ட பின்னரே அணிய வேண்டும்.
கருப்புக் கயிறு கட்டப்பட்டிருக்கும் கைகளிலோ அல்லது கால்களிலோ வேறு எந்த நிற நூலையும் கட்ட வேண்டாம். கருப்புக் கயிறு சனி கிரகத்திற்கு சொந்தமானது. எனவே உங்கள் ஜாதகத்தின் கிரக நிலை அல்லது சனி தோஷம் கருப்பு நூல் அணிவதால் பலவீனமாகிறது. உங்கள் வீட்டு வாசலில் எலுமிச்சையுடன் கருப்பு நூலைக் கட்டலாம்.