Just In
- 46 min ago Today Rasi Palan 24 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பிறர் பிரச்சனைகளில் தலையிடாமல் இருந்தால் நல்லது...
- 6 hrs ago வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- 8 hrs ago மணமணக்கும்.. ருசியான... கையேந்தி பவன் பரோட்டா சால்னாவை எப்படி செய்யணும் தெரியுமா?
- 9 hrs ago இந்த படத்துல உங்களுக்கு எது முதல்ல தெரியுதுன்னு சொல்லுங்க.. உங்கள பத்தின ரகசியத்தை சொல்றோம்..
Don't Miss
- Automobiles 21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Movies Actor Vijay: ஐ லவ் விஜய்.. கில்லி படத்தின் ரீ ரிலீசை கொண்டாடும் சீன ரசிகர்!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
விநாயகரை கும்பிடும்போது இதுல ஒரு பொருளை வைச்சு கும்பிடுங்க... வாழ்க்கை சூப்பரா இருக்கும்!
சாதாரண பூஜையாக இருந்தாலும் சரி அல்லது திருமண அழைப்பிதழாக இருந்தாலும், விநாயகர் எப்போதும் எல்லா நல்ல தருணங்களிலும் முதல் இடத்தில் இருப்பார்.
அனைத்து வகையான தொல்லைகளையும் தீர்ப்பதாகவும், மனித வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் தனது புனித பிரசன்னத்தால் தொடுவதாகவும் கூறப்படும் ஒரு சில இந்து கடவுள்களில் விநாயகர் முக்கியமான ஒருவர். விக்னஹார்த்தா - தடைகளை நீக்குபவர், சுமுகா - கவர்ச்சியான முகம் கொண்டவர், விநாயகர் - நித்திய தலைவர், லம்போதரா - ஒரு பெரிய வயிற்றைக் கொண்டவர், பல முயற்சிகளால் நீங்கள் விநாயகரை ஈர்க்க முடியும். அவர் தனது எல்லா வடிவங்களிலும் வணங்கப்படுகிறார், போற்றப்படுகிறார்.
எந்தவொரு முக்கியமான வேலையையும் தொடங்குவதற்கு முன்பு விநாயகரை வணங்கித்தான் நம் மக்கள் தொடங்குகின்றனர். சாதாரண பூஜையாக இருந்தாலும் சரி அல்லது திருமண அழைப்பிதழாக இருந்தாலும், விநாயகர் எப்போதும் எல்லா நல்ல தருணங்களிலும் முதல் இடத்தில் இருப்பார். தன்னுடைய ஆசீர்வாதங்களை ஆவலுடன் தேடுபவர்களுக்கு உதவுவதற்கு விநாயகர் தயாராக இருப்பார். விநாயகரின் அருளை முழுமையாக பெற அவருக்கு பிடித்தது என்னவென்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
விநாயகரை எவ்வாறு கவர்வது?
விநாயகரை நீங்கள் ஈர்க்க பல வழிகள் உள்ளன மற்றும் எளிதான வழி என்னவெனில் புதன்கிழமை கொழுக்கட்டை நிரம்பிய தட்டுடன் அவரை வணங்குவது. ஆனால் உங்களுக்குத் தெரியுமா, விநாயகருக்கு குங்குமமும் மிகவும் பிடித்தது. ஆம் அனுமன் மற்றும் பைரவ மூர்த்தியைப் போல விநாயகரும் குங்குமத்தை நேசிக்கும் கடவுளாவார்.
விநாயகருக்கு ஏன் குங்குமம் வழங்க வேண்டும்?.
விநாயகருக்கு புதன்கிழமை குங்குமம் வைத்து வழிபடுவது உங்கள் வருத்தம், வலி மற்றும் துன்பங்கள் அனைத்தையும் ஒழிக்க உதவும்.
விநாயகருக்கு குங்குமம் வழங்குவதன் நன்மைகள்
பங்குனி மாதத்தில், ஹோலியின் அடுத்த நாளில், குங்குமத்தை வைத்து விநாயகரை வழிபடுவது மிகவும் பயனுள்ள முடிவுளை வழங்கும். இந்த நாளில் நீங்கள் குங்குமத்தை வைத்து வழிபட்டால் உங்கள் உடல் துன்பங்கள் அனைத்தும் நீக்கப்படும்.
MOST READ: வாழ்வை செழிப்பாக்கும் விநாயகர் மந்திரமும் மகிழ்ச்சியை உருவாக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்களும்
தொழில் வளர்ச்சி
குங்குமத்தை நெய் அல்லது மல்லிகை எண்ணெயில் கலந்து வெள்ளி அல்லது தங்க நாணயங்களுடன் வைத்து சாதாரண நாட்களில் கூட விநாயகரை வழிபடலாம். அவ்வாறு செய்வது உங்கள் எல்லா சிக்கல்களையும் அகற்ற உங்களுக்கு உதவுவதோடு மட்டுமல்லாமல் தொழில் வளர்ச்சியை விரும்பும் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். விநாயகரின் அருளை பெற உதவும் பொருட்கள் என்னென்ன என்று மேற்கொண்டு பார்க்கலாம்.
எருக்கு மலர்
எருக்கு மலர்கள் ஒரு நபரின் உடல் மற்றும் மனதில் இருந்து எதிர்மறையை அகற்றும் திறனைக் கொண்டுள்ளன. பிள்ளையாருக்கு எருக்கு பூவால் செய்யப்பட்ட மாலையை அணிவித்து வழிபடுவது பக்தருக்கு ஆரோக்கியமான வாழ்க்கை, வியாதிகளிலிருந்து விடுபடுகிறது.
சங்கு
சங்கு என்பது இந்து சமூக-மத கலாச்சாரத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகும். சங்கின் ஒலி கடவுளுக்கு புனித மற்றும் தூய்மையான பக்தியை எழுப்புகிறது. விநாயகர் ஒரு கையில் ஒரு சங்கை வைத்திருக்கிறார். விநாயகர் பூஜைக்கு சங்கு ஊதுவது புனிதமானது.
MOST READ: உங்க ராசிப்படி இந்த ராசிக்காரங்கள கல்யாணம் பண்ணிக்கிட்டா உங்கள் வாழ்க்கை நரகம்தானாம்... உஷார்!
வாழைப்பழம்
எந்தவொரு பருவகால பழத்தையும் விநாயகருக்கு வழங்க முடியும் என்றாலும், ஆனால் யானை தலை கொண்ட கடவுள் வாழைப்பழத்தை சாப்பிட விரும்புகிறார், மேலும் வாழை இலைகளையும் விரும்புகிறார். அதனால்தான் சிலை பெரும்பாலும் வாழை இலைகளால் அலங்கரிக்கப்படுகிறது.
வெள்ளை மலர்கள்
விநாயகருக்கு வெள்ளை பூக்களை வழங்குவது வெற்றியையும் புகழையும் தருகிறது. பிள்ளையாருக்கு மிகவும் பிரியமானதாகக் கருதப்படுவதால், நீங்கள் செம்பருத்தி மலர்களையும் வழங்கலாம்.
அருகம்புல்
அருகம்புல் வழங்குவது நல்ல அதிர்ஷ்டத்தையும், செழிப்பையும், குழந்தைக செல்வத்தையும் தருகிறது. புஷ்பஞ்சலி மந்திரத்தை உச்சரிப்பதன் மூலம் பூ அல்லது அருகம்புல்லை வழங்கும்போது, விநாயகர் உங்கள் கடந்த கால தவறுகளை மன்னிப்பார்.
MOST READ: செக்ஸின் போது பெண்களின் பிறப்புறுப்பில் ஈரப்பதம் குறைந்து உடலுறவு கடினமாக மாற காரணம் என்ன தெரியுமா?
பிள்ளையார் சிலையை வைக்க வேண்டும்?
நீங்கள் அதிக செல்வத்தையும், மகிழ்ச்சியையும், செழிப்பையும் ஈர்க்க விரும்பினால், வெள்ளை விநாயகரின்படத்தை வீட்டிற்கு கொண்டு வாருங்கள். ஒரு படத்தை ஒட்டுவது கூட உங்களுக்கு ஆச்சரியமான நன்மைகளை ஏற்படுத்தும். உங்கள் வீட்டின் வெளியே தெய்வத்தின் பின்புறம் எதிர்கொள்ளும் வகையில் விநாயகரின் சிலையை வைக்கவும்.
எந்த திசையில் வைக்க வேண்டும்?
சிலை வைக்க சிறந்த இடம் வீட்டின் வடகிழக்கு மூலையாகும், இது பூஜை அறையை அமைப்பதற்கான சிறந்த இடமாகும். வடகிழக்கு மூலையில் இல்லை என்றால், பிரார்த்தனை செய்யும் போது வடக்கு அல்லது கிழக்கு நோக்கி எதிர்கொள்ளும் வகையில் ஒரு சிலையை வைக்கவும்.