Just In
- 15 min ago சர்க்கரை நோயாளிகள் சிக்கன் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா? எப்படி சாப்பிடணும் தெரியுமா?
- 32 min ago புடவை கட்டினால் புற்றுநோய் வருகிறதாம்.. ஆய்வுகள் கூறும் அதிர்ச்சி தகவல்..!
- 1 hr ago வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- 3 hrs ago போலந்து மக்களால் கடவுளாக கொண்டாடப்படும் இந்திய அரசர்... அப்படி அந்த மக்களுக்கு அவர் என்ன செய்தார் தெரியுமா?
Don't Miss
- Finance ஐசிஐசிஐ வங்கி கஸ்டமரா நீங்க.. மொபைல் ஆப்-ல் கோளாறு.. கிரெடிட் கார்டு தரவுகள் திருடுபோகும் அச்சம்!!
- Automobiles புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- News நேருவும், இந்திராவும் முட்டாள்கள் இல்லை.. பாஜகவின் மொழி கொள்கைக்கு ஜேஎன்யு துணைவேந்தர் எதிர்ப்பு
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Movies அந்த பயம் தான் காரணமா?.. அமரன் முதல் கங்குவா வரை.. ரிலீஸ் தேதியை முடிவு பண்ண முடியலையே!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
கணவன்-மனைவி இடையே விரிசல் ஏற்படாமல் இருக்க வாஸ்து கூறும் இந்த எளிய மாற்றங்களே போதுமாம்...!
விவகாரத்து என்பது தற்போதைய காலக்கட்டத்தில் சமூகத்தின் மிகவும் முக்கியமான பிரச்சினையாக மாறியுள்ளது. பிரபலங்களின் தொடர்ச்சியான விவகாரத்தால் தற்போது விவாகரத்து அதிகம் விவாதிக்கப்படும் தலைப்பாக மாறியுள்ளது.
விவகாரத்து என்பது தற்போதைய காலக்கட்டத்தில் சமூகத்தின் மிகவும் முக்கியமான பிரச்சினையாக மாறியுள்ளது. பிரபலங்களின் தொடர்ச்சியான விவகாரத்தால் தற்போது விவாகரத்து அதிகம் விவாதிக்கப்படும் தலைப்பாக மாறியுள்ளது. தேவையற்ற மற்றும் மனரீதியாக ஏற்படும் சண்டைகளைத் தவிர்க்க, எல்லா ஜோடிகளும் முடிந்த அனைத்தையும் முயற்சி செய்ய வேண்டும். இதனால் அவர்கள் பின்னர் எதற்கும் வருத்தப்பட மாட்டார்கள்.
திருமண ஆலோசகரிடம் சென்று அதைப் பற்றி விவாதிப்பது தவிர, இந்த பிரச்சினையை சரிசெய்ய சில வாஸ்து பரிகாரங்களும் உள்ளன, அவற்றை எளிதாகப் பின்பற்றலாம். மோசமான சண்டைகள் மற்றும் பிரிவினையைத் தவிர்ப்பதற்கு, உங்கள் படுக்கையறையில் செய்ய வேண்டிய சில மாற்றங்கள் உள்ளன. அவை என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
படுக்கை
நீங்கள் படுக்கையை வைக்க வேண்டிய சிறந்த திசை வீட்டின் தென்மேற்குப் பக்கமாக இருக்க வேண்டும். தலையை தெற்கு அல்லது கிழக்கு நோக்கியும், கால்களை மேற்கு அல்லது வடக்கு திசையிலும் வைத்து உறங்க வேண்டும். உங்கள் தூக்கத்தின் தரமும் உங்கள் மனநிலையை பாதிக்கும். மேலும் இது எதிர்மறை அதிர்வுகளை உருவாக்குவதால், உங்கள் படுக்கை மரத்தால் ஆனது மற்றும் உலோகத்தால் ஆனது என்பதை உறுதிப்படுத்தவும். ஒரே மெத்தையில் உறங்க முயற்சி செய்யுங்கள், இரண்டு தனித்தனி மெத்தைகளை இணைக்க வேண்டாம். உங்கள் அறையின் ஒரு மூலையில் படுக்கையை வைக்காதீர்கள், அது நேர்மறை ஆற்றலைக் கட்டுப்படுத்தும்.
தரை துடைப்பான்
வாரத்திற்கு ஒரு முறையாவது தண்ணீரில் கடல் உப்பைக் கலந்து தரையைத் துடைப்பது மிகவும் சுவாரசியமான மற்றும் மிகவும் பயனுள்ள தீர்வாகக் கூறப்படுகிறது. இது தம்பதிகளுக்கு இடையே நிலவும் எதிர்மறை ஆற்றலை அகற்ற உதவும் என்று கூறப்படுகிறது.
தூங்கும் திசை
வாஸ்து படி, மனைவி எப்போதும் தனது கணவரின் இடது பக்கத்தில் தூங்க வேண்டும், இது அன்பான மற்றும் மென்மையான உறவுக்கு வழிவகுக்கிறது. மேலும் இது தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்க்கும்.
தலையணை
படுக்கையில் 2-3 தலையணைகளை மட்டும் வைத்திருங்கள் மற்றும் கூடுதல் தலையணைகள் இருப்பதைத் தவிர்க்கவும், இது குறிப்பாக தம்பதிகளுக்குள் இடைவெளியை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
சுவர் அலங்காரம்
உங்கள் படுக்கையறைச் சுவரில் எதிர்மறைப் படங்களைக் மாட்டி வைக்க வேண்டாம். ஓவியம் எவ்வளவு விலை உயர்ந்ததாக இருந்தாலும், கலைஞரின் படைப்பு எவ்வளவு அழகாக இருந்தாலும் சண்டையோ, போர் காட்சிகளோ, வாக்குவாத சித்தரிப்புகளோ அல்லது அழுகையை குறிக்கும் ஓவியங்களோ இருக்கக்கூடாது. மகிழ்ச்சியான ஜோடி படங்கள் மற்றும் பறவைகளின் படங்களை மாட்டி வைக்கவும். நேர்மறையை வெளிப்படுத்தும் படங்கள் உங்கள் அறையில் இருக்க வேண்டும்.
சுத்தமாக வைத்திருக்க வேண்டும்
ஒழுங்கீனம் அல்லது குழப்பம் எப்போதும் எதிர்மறையைக் கொண்டுவருகிறது. வாஸ்து மட்டுமல்ல, ஃபெங் சுய் கூட அறையை சுத்தமாக வைத்திருப்பது உங்கள் அறையில் நேர்மறை அதிர்வுகளை வரவேற்க உதவும் என்று பரிந்துரைக்கிறது. இது தம்பதிகளுக்கு மட்டுமல்ல, ஒற்றை ஆன்மாக்களுக்கும் பொருந்தும்.