For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சொந்த வீடு வேணும் கடன் வாங்க கூடாது... - செவ்வாய்கிழமையில் இதை பண்ணுங்க

அனில் அம்பானியும் கபே காஃபி டே ஒனருமே கடன் பிரச்சினையில் சிக்கி சின்னாபின்னமாகியிருக்காங்க. சாதாரண மனிதர்கள் எம்மாத்திரம். இன்றைக்கு கடன் இல்லாத மனிதர்களே இல்லை. ருணம், ரோகம் சத்ரு இந்த மூன்றும் இல்லா

|

செவ்வாய்கிழமை மங்களகரமான நாள். பூமிக்கு அதிபதியான செவ்வாய் பகவான் ஆட்சி செய்யும் நாள். செவ்வாய் பகவான் ஒருவர் ஜாதகத்தில் வலிமையாக இருந்தால் அவர் வீடு, நிலம் சொத்துக்கள் வாங்கி சொந்த வீட்டில் வசிப்பார். அதே நேரம் செவ்வாய் உங்க ஜாதகத்தில் வீக் ஆக இருந்தால் சொந்த வீடு சிலருக்கு அமையவே அமையாது. அதே போல கடன் பிரச்சினை காலை சுற்றிய பாம்பாக இருந்து கவலையை ஏற்படுத்தும். கடன் தொல்லை நீங்கவும், சொந்த வீடு வாங்கவும் சில பரிகாரங்கள் இருக்கின்றன. அந்த பரிகாரங்களை செய்தால் கடன் பிரச்சினைகள் தீரும் கூடவே சொந்த வீடு யோகமும் அமையும்.

நவக்கிரகங்களில் முக்கியமான கிரகம் செவ்வாய். இது ராஜகிரகம். சூரியனின் தளபதி. ஒரு மனிதனுக்கு ரத்தம், தைரியம், பூமி சம்பந்தமான சொத்துக்கள் எதிர்ப்பு சக்தி, செவ்வாய் தோஷம்,சொந்த வீடு, இது எல்லாத்துக்கும் மூலகாரணமாக விளங்குபவர் செவ்வாய் பகவான். ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை செவ்வாய் பகவானின் அம்சம் கொண்ட முருக பகவானை வணங்கி செவ்வாய்க்கிழமைகளில் விரதம் இருக்க வேண்டும்.

Astrology Remedies for purchase own house remove debt issues

11 செவ்வாய்கிழமைகளில் விரதம் இருந்து முருகனை வணங்கினால் அந்த முருகன் அருளினாலும் செவ்வாய் பகவான் அருளினாலும் வீடு கட்டும் யோகம் அமையும். அதே போல செவ்வாய்கிழமை வெற்றிலையில் மாலை கட்டி விநாயகருக்கு மாலை சாற்றி வணங்கினால் கடன் பிரச்சினை தீரும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
செவ்வாய் விரதம்

செவ்வாய் விரதம்

செவ்வாய்க்கிழமை விரதம் இருக்கிறவங்க காலையில் எந்திரிச்சு அதுவும் அதிகாலையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து குளித்து வீட்டில் விளக்கேற்றி விட்டு ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் நாணயத்தை எடுத்து கழுவி விட்டு அதில் சந்தனம் கும்குமம் வைத்து முருகன் படத்திற்கு அருகில் வைக்க வேண்டும். பக்கத்தில் இருக்கிற முருகன் கோவிலுக்கு போய் வழிபட வேண்டும். வீட்டுக்கு வந்தவுடனே பால் அல்லது ஜூஸ் மட்டும் சாப்பிட்டு விரதத்தைத் தொடர வேண்டும்.

MOST READ: நாய் கடிச்சிடுச்சா?... உடனே இந்த 7 விஷயத்த மறந்திடாம செய்ங்க...

பழனி முருகன் கோவில்

பழனி முருகன் கோவில்

முருகனுக்கு உகந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம், அப்புறம் மந்திரங்கள் ஆகியவற்றை படிக்கவோ கேட்கவோ செய்ய வேண்டும். மாலையில் முருகன் கோவிலுக்க போய் வந்து விட்டு விரதம் முடிக்க வேண்டும். 11 செவ்வாய்கிழமை இதுபோன்ற விரதம் முருகனுக்கு இருந்தால் கண்டிப்பாக முருகன் அருளினால் சொந்த வீடு யோகம் அமையும். 11 வாரமும் சேர்த்து வைத்த நாணயங்களை பழனி முருகன் கோவில் உண்டியலிலோ, வடபழனி முருகன் கோவிலில் செவ்வாய் பகவானுக்கு எதிரில் உள்ள உண்டியலிலோ கொண்டு போய் போட்டு விட்டு வணங்கி வரலாம்.

கடன் வாங்கும் நேரம்

கடன் வாங்கும் நேரம்

கடன் வாங்குவதற்கு நேரம் காலம் ரொம்ப முக்கியம். திருப்பி அடைப்பதற்கும் நேரம் ரொம்ப முக்கியம். ராகு கேது போன்ற பாம்பு கிரகங்களுடன் குரு சேர்ந்து நிற்கும் போது புதிய கடன்கள் வாங்கவோ அல்லது கடன் அடைக்கவோ முயற்சி செய்ய கூடாது. ஏழரை சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி ஆகியவை நடைபெறும்போது கடன் வாங்க முயற்சி செய்ய கூடாது.

பவுர்ணமி பரிகாரம்

பவுர்ணமி பரிகாரம்

முற்பிறவியில் நாம் செய்த வினைகளின் காரணமாக, இந்தப் பிறவியில் பல தொல்லைகளை அனுபவிக்கிறோம். கடன் பிரச்சினையும் அப்படித்தான். இந்த கடன் பிரச்சினை மூன்று பவுர்ணமி தினங்கள் குலதெய்வ கோவிலுக்குச் சென்று குலதெய்வத்தை மனமுருக வேண்டி, முறையாக வழிபட்டு வந்தால் கடன் தொல்லைகள் அனைத்தும் விலகும். மூன்று பவுர்ணமிகள் குல தெய்வ கோவிலுக்கு போக முடியாதவர்கள் வீட்டிலேயே குலதெய்வம் படத்திற்கு முன்பாக இந்த பரிகாரத்தை செய்யலாம்.

குல தெய்வத்திற்கு படையல்

குல தெய்வத்திற்கு படையல்

வீட்டில் குல தெய்வ படம் இருப்பவர்கள் ஐந்துமுக விளக்கில் நெய் விட்டு தீபம் ஏற்ற வேண்டும். குலதெய்வத்திற்கு படையல் இட்டு கடன் பிரச்சினைகள் முழுவதுமாக நீங்க வேண்டும் என்று மனமுருகி குலதெய்வத்திடம் பிரார்த்தனை செய்யவேண்டும். இப்படி தொடர்ந்து ஒன்பது பவுர்ணமிகள் குலதெய்வத்திற்கு படையலிட்டு வழிபட்டு வந்தால், கடன் பிரச்சினைகள் அனைத்தும் நீங்கும்.

MOST READ: இந்த பூ பார்த்திருக்கிங்களா? ஒரே பூ பத்து நோயை குணப்படுத்தும்...

கல் உப்பு பரிகாரம்

கல் உப்பு பரிகாரம்

கடன் பிரச்சினை தீர வெள்ளிக்கிழமையன்று காலை குளித்து பூஜைகள் செய்து, அருகில் உள்ள மளிகை கடைக்கு சென்று மகாலட்சுமியை வேண்டி கொண்டு கல் உப்பு வாங்கி வந்து உப்பு பாத்திரத்தில் போடவும். இதை ஒவ்வொரு வாரமும் செய்து வர வீட்டில் மகாலட்சுமி வரவிற்கு குறைவே இருக்காது.

வெள்ளிக்கிழமை காலை 5 வெற்றிலை, 5 கொட்டை பாக்கு, 5 ஒரு ரூபாய் நாணயம் ஆகியவற்றை பூஜையில் வைத்து லட்சுமி வழிபாடு செய்ய வேண்டும். பின்பு அனைத்தையும் ஒரு தாளில் மடித்து வைக்கவும். பின்பு அடுத்த வாரம் செய்யும் ஏற்கனவே செய்ததை ஒரு உண்டியலில் போட்டு வைக்கவும்.

நரசிம்மர் செவ்வாய் வழிபாடு

நரசிம்மர் செவ்வாய் வழிபாடு

நரசிம்மருக்கு செவ்வாய் கிழமைகளிலும், சுவாதி நட்சத்திரத்திலும் வரும் பிரதோஷங்கள் மிகவும் விசேஷமானவை. தட்சிண அகோபிலம் என்று அழைக்கப்படும் கீழப்பாவூர் நரசிம்மர் கோவில் 1100 ஆண்டுகள் பழமையானது. இக்கோவிலில் ஒவ்வொரு மாதமும் நரசிம்மர் அவதரித்த சுவாதி நட்சத்திரத்தில் சிறப்பு பூஜை நடைபெறும். இந்த பூஜையில் பங்கேற்பது சிறப்பானது. காலையில் யோக நரசிம்மர் அல்லது லட்சுமி நரசிம்மர் படத்தின் முன் அகலில் நெய் அல்லது நல்லெண்ணெய் தீபம் ஏற்றி, ருண விமோசன நரசிம்ம ஸ்தோத்திரம் கடனை செவ்வாய்க்கிழமை அன்று திருப்பிச் செலுத்துவது நல்லது. முக்கியமாக செவ்வாய், சனிக்கிழமைகளில் கடன் வாங்கக் கூடாது.

மைத்ர முகூர்த்தம்

மைத்ர முகூர்த்தம்

கடன் தொல்லையைத் தீர்க்க மைத்ர முகூர்த்தம் என்ற ஒன்று ஜோதிடத்தில் இருக்கிறது. ஒரு தமிழ் மாதத்தில் அதிகபட்சமாக மூன்று நாட்களுக்கு வரும். அந்த மூன்று நாட்களில் ஒவ்வொரு நாளும் அதிகபட்சமாக இரண்டு மணிநேரம் வரும். இந்த நேரத்தைப் பயன்படுத்தி நமது கடன் எத்தனை கோடி ரூபாய்களாக இருந்தாலும் அதை முழுமையாக அடைத்துவிட முடியும்.

MOST READ: 5 ஆயிரம் வருஷமா கொழுப்பை கரைக்க இததான் நம்ம முன்னோர்கள் சாப்டாங்களாம்...

அக்டோபர் மாத மைத்ர முகூர்த்தம்

அக்டோபர் மாத மைத்ர முகூர்த்தம்

3.10.2019 வியாழன் காலை 9 முதல் 11 வரை மைத்ர முகூர்த்தம் உள்ளது. அதே போல அக்டோபர் மாதம் 14.10.2019 திங்கள் மாலை 6.16 முதல் இரவு 8.16 வரையும் 30.10.2019 புதன் காலை 8.48 முதல் 10.48 வரையும் மைத்ர முகூர்த்தம் உள்ளது. இந்த நாட்களில் கடனின் ஒரு பகுதியாவது அடைக்கலாம். கழுத்தை சுற்றி இருக்கும் கடன்கள் மட மட வென அடைபடும். கடன் தொல்லைகள் நீங்கிவிட்டால் அப்புறம் என்ன வீடு, வண்டி வாகன யோகம் தானாக அமையும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Astrology Remedies for purchase own house remove debt issues

Mars and Venus help to maintain the dignity of a home offer prayer to lord murugan Tuesday storng mars for bye own house.
Story first published: Tuesday, October 1, 2019, 12:24 [IST]
Desktop Bottom Promotion