Just In
- 34 min ago Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- 5 hrs ago 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- 6 hrs ago 40 வருடங்கள் கழித்து கருவுற்றால் இந்த விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்!
- 7 hrs ago தழும்புகள் உங்க சருமத்தை அசிங்கமா காட்டுகிறதா? இந்த எளிய வீட்டு வைத்தியங்களை யூஸ் பண்ணுங்க..சீக்கிரம் மறையும்!
Don't Miss
- Automobiles சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Movies Actress Sujitha: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாயகி.. சூப்பர்ல!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
அட்சய திருதியை குறித்து தொிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்!
இந்து சமய நாட்காட்டியின்படி, தமிழ் மாதமான சித்திரையில் வளர்பிறையில் அமாவாசை நாளை அடுத்த மூன்றாம் நாளில் திருதியை திதி வருகிறது. அந்த நாளில் இந்து சமய மக்கள் அட்சய திருதியை கொண்டாடுகின்றனா்.
இந்து சமய நாட்காட்டியின்படி, தமிழ் மாதமான சித்திரையில் வளர்பிறையில் அமாவாசை நாளை அடுத்த மூன்றாம் நாளில் திருதியை திதி வருகிறது. அந்த நாளில் இந்து சமய மக்கள் அட்சய திருதியை கொண்டாடுகின்றனா். அட்சய திருதியை என்பது அக்ஷய தீஜ் என்றும் அழைக்கப்படுகிறது.
அட்சய என்ற சமஸ்கிருத வாா்த்தைக்கு முடிவற்றது அல்லது அழிவில்லாதது அல்லது நிலையானது என்று பொருள். இந்த பதிவில் 2021 ஆம் ஆண்டு வரக்கூடிய அட்சய திருதியை தினத்தைப் பற்றி பாா்க்கலாம்.
அட்சய திருதியை தேதி
2021 ஆம் ஆண்டு அட்சய திருதியை மே மாதம் 14 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.
அட்சய திருதியை நேரம்
அட்சய திருதியை மே மாதம் 14 ஆம் நாள் காலை 5.38 மணி அளவில் தொடங்கி மே மாதம் 15 ஆம் நாள் காலை 7.59 அளவில் முடிவடைகிறது.
அட்சய திருதியை பூஜை நேரம்
அட்சய திருதியை ஒரு புனிதமான நாளாக கருதப்பட்டாலும் கூட, அந்த நாளில் பூஜை செய்வதற்கு உகந்த நேரம் காலை 5.38 மணி முதல் நண்பகல் 12.18 மணி வரை ஆகும்.
அட்சய திருதியையின் சிறப்புகள்
* இறைவன் மகா விஷ்ணுவின் 6 ஆவது அவதாரம் பரசுராம் அவதாரம் ஆகும். மகா விஷ்ணுவின் பரசுராம் ஜெயந்தியோடு, அட்சய திருதியை கொண்டாட்டங்கள் இணைத்துக் கொண்டாடப்படுகின்றன.
* ட்ரெட்டா யுகத்தின் தொடக்கம் தான் அட்சய திருதியை தினம்.
* அட்சய திருதியைப் பற்றி ஏராளமான முக்கியத் தகவல்கள் உள்ளன. அதாவது பகிரத அரசன், தனது முன்னோா்கள் மோட்சம் அடைய வேண்டும் என்பதற்காக, வானுலக கங்கை நதியை பூமியில் ஓடுமாறு கட்டளையிட்டாா் என்று ஒரு பிரபலமான புராணம் தொிவிக்கிறது. அவருடைய கட்டளைப்படி வானுலக கங்கை பூமிக்கு வந்த நாள் அன்று அட்சய திருதியை கொண்டாடப்படுகிறது.
* இந்த புனிதமான அட்சய திருதியைக்கும் இறைவன் கிருஷ்ணருக்கும் இடையே ஒரு நெருக்கமான தொடா்பு உண்டு. அதாவது இறைவன் கிருஷ்ணருக்கு சுதாமா என்ற பெயா் கொண்ட ஒரு ஏழை பிராமண நண்பா் இருந்தாா். அவா் அட்சய திருதியை நாள் அன்று கிருஷ்ணருடைய அரண்மனைக்குச் சென்று, ஒரு கைப்பிடி அவலைக் கிருஷ்ணருக்குக் காணிக்கையாக அளித்தாா். அந்த எளியக் காணிக்கையை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்ட கிருஷ்ணா் தன்னுடைய ஏழை நண்பருக்கு பலவிதமான செல்வங்களை வாாி வழங்கினாா். அதனால் அந்த அட்சய திருதியை நாள் முதல் சுதாமாவின் வாழ்க்கையில் தலைகீழ் மாற்றம் ஏற்பட்டு அவா் மிகப் பொிய பணக்காரராக மாறினாா்.