Just In
- 3 hrs ago Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- 8 hrs ago 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- 8 hrs ago 40 வருடங்கள் கழித்து கருவுற்றால் இந்த விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்!
- 9 hrs ago தழும்புகள் உங்க சருமத்தை அசிங்கமா காட்டுகிறதா? இந்த எளிய வீட்டு வைத்தியங்களை யூஸ் பண்ணுங்க..சீக்கிரம் மறையும்!
Don't Miss
- News அதிகாலையே "திக்" பதிலடி.. ஈரான் மீது சரமாரியாக ஏவுகணை அட்டாக் செய்த இஸ்ரேல்.. உலகப்போர் வருது?
- Movies அஜித்துடன் விஜய் சேர்ந்து நடிக்க இதை செய்ய வேண்டும்.. எஸ்.ஏ.சந்திரசேகர் போட்ட கண்டிஷன்
- Sports என்னை மிரட்டி ஆர்சிபிக்கு விளையாட வைத்தார் கோலி.. உலககோப்பை தோல்வி வலித்தது- கேஎல் ராகுல் பேச்சு
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
புதன் கிழமையன்று பிள்ளையாரை வழிபடுவது எவ்வளவு சிறப்பு வாய்ந்தது தெரியுமா?
வேத குறிப்புகளின் படி புதன் கிழமை விநாயகரை வழிபடுவதற்கு ஏற்ற நாளாகும். புதன்கிழமை விநாயகரை வழிபடுவது முக்கியத்துவம் வாய்ந்தது.
இந்து மதத்தின் மிகவும் முக்கியமான கடவுள் என்றால் அது விநாயகர்தான். வினைதீர்க்கும் விநாயகரை வழிபடுவது உங்களுக்கு வாழ்க்கையில் அனைத்து வளங்களையும் கொடுக்கும். வேதங்களில் குறிப்பிட்டுள்ளபடி வாரத்தின் ஒவ்வொரு நாளுக்கும் ஒரு கடவுளும், குருவும் உள்ளார்கள்.
வேத குறிப்புகளின் படி புதன் கிழமை விநாயகரை வழிபடுவதற்கு ஏற்ற நாளாகும். புதன்கிழமை விநாயகரை வழிபடுவது முக்கியத்துவம் வாய்ந்தது. தந்திர சாஸ்திரங்களின் படி விநாயகரை தனிப்பட்ட நன்மைக்காகவும், வியாபார நன்மைக்காகவும் பல்வேறு வடிவங்களில் வழிபடலாம். புதன் கிழமையில் இந்த வடிவங்களில் ஒரு பிள்ளையாரை வழிபடுவது பல நன்மைகளை வழங்கும்.
வெள்ளை பிள்ளையார்
குறிப்பிட்ட தாவரத்தின் வேரிலிருந்து தயாரிக்கப்படும் வெள்ளை நிற விநாயகர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இது கணபதி ஸ்வேதர்க் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த விநாயகரை வீட்டில் வைத்து, சரியான சடங்குகளுடன் வழிபடுவது வீட்டிலிருந்து எதிர்மறை ஆற்றல்களை விரட்ட உதவுகிறது.
சிவப்பு விநாயகர்
வாழ்க்கையில் எதிரிகள் இல்லாமல் வாழ வேண்டும் என்று அனைவர்க்கும் ஆசை இருக்கும். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது சிவப்பு விநாயகரை புதன் கிழமையில் வழிபட வேண்டும். இது உங்களை அனைத்து எதிரிகளின் தொல்லைகளில் இருந்தும் பாதுகாக்கும்.
வெள்ளி பிள்ளையார்
வெள்ளி பிள்ளையாரை வழிபடுவது என்பது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். ஏனெனில் புதன் கிழமையில் வெள்ளி பிள்ளையாரை சரியான முறையில் வழிபடுவது உங்கள் வாழ்க்கையில் இருக்கும் அனைத்து பணக்கஷ்டத்தையும் போக்கும். வெள்ளி பிள்ளையார் வழிபாடு வீட்டில் செல்வ செழிப்பை ஏற்படுத்தும்.
சந்தன பிள்ளையார்
குடும்ப உறவுகளை பொறுத்த வரை கடவுள் வழிபாடு என்பது மிகவும் முக்கியமானது. விநாயகரின் வழிபாடு குடும்ப உறவுகளை இணைக்க உதவுகிறது. சந்தன பிள்ளையாரை புதன் கிழமையன்று வழிபடுவது குடும்பத்தில் பிணைப்பை ஏற்படுத்தி குடும்பத்தில் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தும்.
மெர்குரி விநாயகர்
மெர்குரி விநாயகர் வழிபாடு மிகவும் புனிதமான ஒன்றாக கருதப்படுகிறது. இந்த பிள்ளையாரை புதன் கிழமை வழிபடுவது உங்களின் அனைத்து வேண்டுதல்களையும் நிறைவேற்றுவதோடு உங்களின் தனிப்பட்ட மகிழ்ச்சியையும் அதிகரிக்கும்.