Just In
- 49 min ago 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- 2 hrs ago தளர்ந்து போன சருமத்தை இறுக்கமாக்கி ஜொலிக்கிற மாதிரி மாத்த ஆசைப்படுறீங்களா? இந்த இயற்கை பொருட்களை யூஸ் பண்ணுங்க
- 3 hrs ago திருமணம் ஆக இருக்கும் இளம்பெண்கள் இந்த ஜூஸை குடியுங்கள்.. முகம் பொலிவுறும்..!
- 4 hrs ago சப்பாத்திக்கு ஒருடைம் உருளைக்கிழங்கு வெச்சு இப்படி கிரேவி செஞ்சு பாருங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
Don't Miss
- News மாஸ் காட்டிய சென்னைவாசிகள்! 40 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு வாக்குப்பதிவு! 1980க்கு பிறகு இதுதான் அதிகம்
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
சனிபகவானை இப்படி வழிபடுவது உங்களுக்கு சனிபகவானின் சாபத்தை பெற்றுத்தரும் தெரியுமா?
ஒழுக்கமான வாழ்க்கை முறையும், முறையான வழிபாடும் நம்மை சனிபகவானின் கோபப்பார்வையில் இருந்து பாதுகாக்கும்.
இந்து மதத்தில் அனைவரும் கண்டு நடுங்கும் ஒரு கடவுள் என்றால் அது சனிபகவன்தான். ஏனெனில் வாழும்போதே நமக்கு நரகத்தை காட்ட இவரால்தான் முடியும். நமது தவறுகளுக்கான தண்டனைகளை வாழும் போதே வழங்கும் இவரை கண்டு பயப்படுவதில் தவறு எதுவுமில்லை.
ஒழுக்கமான வாழ்க்கை முறையும், முறையான வழிபாடும் நம்மை சனிபகவானின் கோபப்பார்வையில் இருந்து பாதுகாக்கும். சனிபகவானை வழிபடும் போது மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியமாகும். ஏனெனில் தவறான வழிபாடும் சனிபகவானின் கோபத்தை தூண்டும். இந்த பதிவில் சனிபகவானை எப்படி வழிபட வேண்டும் என்று பார்க்கலாம்.
எப்படி நின்று வணங்க வேண்டும்?
பொதுவாக கடவுளை வணங்கும் போது நேருக்கு நேர் நின்று கையெடுத்து கும்பிட்டு நம்முடைய வேண்டுதல்களை கூறுவோம். ஆனால் சனிபகவானை பொறுத்தவரை இவ்வாறு வழிபடக்கூடாது. ஏனெனில் வேதங்களில் சனிபகவானை நேரடியாக நின்று பார்க்கக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது. சனிபகவானின் பார்வையை தடுக்கும் விதமாக அவருக்கு எதிரில் நிற்பது சனிபகவானின் கோபத்தை தூண்டும்.
எப்போது செல்ல வேண்டும்?
சாஸ்திரங்களின் படி சூரிய பகவான் இல்லாத நேரங்களில் மட்டுமே சனிபகவானின் கோவிலுக்கு செல்ல வேண்டும். ஒன்று சூரியன் உதிப்பதற்கு முன் செல்ல வேண்டும் அல்லது சூரியன் மறைந்ததற்கு பிறகு செல்ல வேண்டும். சனிபகவான் அவருடைய தந்தையான சூரியபகவான் முன்னிலையில் எவரையும் ஆசீர்வதிக்கமாட்டார். அவர் முன் தன்னை வழிபடுவதை அவர் ஒருபோதும் விரும்பவில்லை.
MOST
READ:
உங்கள்
இதயத்தை
பாதுகாக்கும்
உலகின்
சிறந்த
டயட்
முறைகள்
இதுதான்...!
கைகூப்பி வணங்கக்கூடாது
சனிபகவானை மற்ற கடவுள்களை போல கைகூப்பி வணங்கக்கூடாது. சனிபகவானை வழிபடும் போது கையெடுத்து கும்பிடுவதை தடுக்கவும், மாறாக தலை வணங்கியபடி கைகளை பின்புறம் வைத்து கொண்டுதான் வழிபட வேண்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகிறது.
தவறான வாக்குறுதிகள்
சனிபகவான் முன்னிலையில் ஒருபோதும் தவறான வாக்குறுதிகளை வழங்கவோ அல்லது அவரின் ஆசீர்வாதத்தை பெறுவதற்காக பொய்யான தர்மங்களில் ஈடுபடவோ கூடாது. தனது முன்னிலையில் தவறான செயல்களில் ஈடுபடுவதையோ அல்லது பொய் கூறுவதையோ சனிபகவான் விரும்பமாட்டார். சனிபகவானை வழிபடுவதற்கு முன் ஆஞ்சநேயரை வழிபடவும். ஆஞ்சநேயரின் வார்த்தையை ஒருபோதும் சனிபகவான் மீறமாட்டார் என்று சாஸ்திரங்கள் கூறுகிறது.
பொய் சத்தியம்
உங்கள் பின்பற்ற முடியாத எந்த சத்தியத்தையும் சனிபகவான் முன்னிலையில் செய்யாதீர்கள். சனிபகவானின் கோபத்தில் இருந்து தப்பிக்க உதவும் அடிப்படை குணமே நேர்மைதான். அதையும் மீறி செய்தால் சனிபகவானின் சாபத்திற்கு ஆளாக நேரிடும்.