Just In
- 1 min ago எச்சரிக்கை! எக்காரணம் கொண்டும் இந்த 5 அறிகுறிகளை புறக்கணிக்காதீங்க.. ரொம்ப அவதிப்படுவீங்க..
- 4 min ago புற்றுநோய், இதய நோய் அபாயத்தை குறக்கனுமா? இதோ இந்த பழங்களை சாப்பிடுங்கள்..!
- 1 hr ago இந்த பழங்களை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்கக் கூடாதாம்... ஏன் தெரியுமா?
- 3 hrs ago நீங்க ஏ.சி. போட போறீங்களா? இந்த 3 விஷயங்களை செய்ய மறந்துடாதீங்க...!
Don't Miss
- Movies நல்ல படம் எடுத்துட்டா போதும்.. அந்த இயக்குநரை பெரிய ஹீரோ காலி பண்ணிடுவாரு.. பிரபல நடிகர் பகீர்!
- Technology கம்ப்யூட்டர் Keyboard: F மற்றும் J கீயில் மட்டும் கோடு இருப்பது ஏன்? இது தெரியாம டைப் செஞ்சா கேலி செய்வாங்க..
- News ஏத்துக்கவே முடியாது..புண்படுத்திட்டீங்க! ஒன்று கூடிய தமிழக கட்சிகள்..மோடி மீது டைரக்ட் அட்டாக்..!
- Finance முகேஷ் அம்பானி ஸ்ட்ரிக்ட் ஆர்டர்..!! 'இங்க' தான் ஆனந்த் அம்பானி - ராதிகா திருமணம்..!
- Automobiles இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
இந்த குழந்தைகளுக்கு இவங்க ரெண்டுபேரும் தான் அப்பா அம்மாவாம்... ரெண்டுபேரும் பால் கொடுக்கலாமா?
தன்னுடைய தோழிக்கு பிரசவமாகி, அந்த குழந்தைக்கு பாலூட்டும் மற்றொரு பெண்ணைப் பற்றிய சுவாரஸ்ய கதையைப் பற்றி தான் இந்த கட்டுரையில் பார்க்கப் போகிறோம்.
கருத்தரித்தல், குழந்தைப் பேறு இவை பெரும் சவாலான விஷயம். ஒருபாலின பெற்றோர் என்றால் குழந்தைப் பேறு எவ்வளவு சிக்கலானது என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை.
ஒரு பாலின இணையில் கருத்தரித்து பெற்றெடுக்காத தாயும், பால் சுரப்பதற்கான தூண்டுதல் சிகிச்சை மூலம் குழந்தைக்கு பாலூட்டும் செய்தியும் புகைப்படங்களும் வைரலாக பரவி வருகின்றன.
இரண்டாண்டு போராட்டம்
ஜாக்லின் மற்றும் கெல்லிஃபெய்ஃபர் இருவரும் ஒருபாலின தம்பதியர். இருவரும் 2016 ஜனவரி முதல் குழந்தைப் பேற்றுக்காக முயற்சி செய்து வந்தனர். இரண்டாண்டு காலத்திற்கு மேலாக கணக்கற்ற சிகிச்சைகளுக்கு ஏறத்தாழ 21,000 டாலர் செலவு செய்துள்ளனர். தம்பதியரின் சினைப்பையிலிருந்து 58 கருமுட்டைகள் எடுக்கப்பட்டு 20 கருவூட்டல் முயற்சிகள் செய்யப்பட்டன. அவர்களுள் கெல்லி ஃபெய்ஃபர், மே மாதம் ஜாக்சன், எல்லா என்ற இரட்டைக் குழந்தைகளை பெற்றெடுத்தார்.
பெயர் தெரியாத தந்தை
ஒரு கருத்தரித்தல் மூலம் பிறந்ததினால் குழந்தைகள் இரட்டையர்தாம். பெயர் அறியப்படாத கொடையாளர் ஒருவர் அளித்த விந்தணுவிலிருந்து பிறந்ததினால், அவர்தாம் இக்குழந்தைகளின் தந்தை. ஆனால், கருமுட்டை வெவ்வேறு பெண்களிடமிருந்து எடுக்கப்பட்டபடியினால், இரட்டையரின் உயிரியல் ரீதியான தாய் வேறுவேறானவர்கள். கருவூட்டப்பட்ட இந்த சினைமுட்டைகள் கெல்லியின் கருப்பையினுள் வைக்கப்பட்டன.
ஏற்கனவே தாய்மையடைந்தவர்
தம்பதியரில் மருத்துவ காரணங்களால் ஜாக்லினுக்கு கருத்தரிக்க இயலவில்லை. தான் முன்பு கொண்டிருந்த உறவின் மூலம் கெல்லி மூன்று குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். ஆகவே, இப்போதும் கெல்லியே கருத்தரிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளார். குழந்தைகளை பிரசவித்தமையால் அவரால் பாலூட்ட முடிகிறது.
பிரசவிக்காமல் பாலூட்டும் தாய்
குழந்தையை பிரசவிக்காத பெண்களும் ஹார்மோன் சிகிச்சை அல்லது உடலில் பால் சுரக்கும் வரைக்கும் தூண்டுதல் சிகிச்சை பெறுவதன் மூலம் தாய்ப் பாலூட்ட இயலும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. அதன்படி ஜாக்லின், தாய்ப்பால் தூண்டுதல் சிகிச்சை பெற்று இரட்டையர்கள் ஜாக்சன் மற்றும் எல்லாவுக்கு பாலூட்டி வருகிறார்.
கெல்லியும் ஜாக்லினும் இரட்டை குழந்தைகளுக்கு ஆசையாய் பாலூட்டும் படங்களே வைரலாய் பரவி வருகின்றன.