Just In
- 11 min ago மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- 57 min ago Kulfi: 4 பிரட்டும், 1 பால் பாக்கெட்டும் வெச்சு ஈஸியா குல்பி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
- 1 hr ago சர்க்கரை நோயாளிகள் சிக்கன் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா? எப்படி சாப்பிடணும் தெரியுமா?
- 1 hr ago புடவை கட்டினால் புற்றுநோய் வருகிறதாம்.. ஆய்வுகள் கூறும் அதிர்ச்சி தகவல்..!
Don't Miss
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Finance ஆக்சிஸ் வங்கி சிஇஓ-க்கு அடித்தது யோகம்.. அடுத்த 3 வருடத்திற்கு ராஜ வாழ்க்கை..!
- News ஒரே காரில் 4 ஆண்களுடன் இளம்பெண் பயணம்.. குமரி போலீஸ் கேட்ட கேள்வி.. கேரள இளைஞர்கள் கடும் வாக்குவாதம்
- Technology பொளக்குது விற்பனை.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 108MP கேமரா.. 100W சார்ஜிங்.. 4500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Movies தங்கலான் திரைப்பட இசை..ஜிவி பிரகாஷ் என்ன சொல்றாரு பாருங்க.. சம்பவம் இருக்காம்
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
இந்த மிருகங்களை பார்ப்பது உங்கள் வாழ்க்கையில் அற்புத நல்ல மாற்றங்களை உண்டாக்கும் தெரியுமா?
முக்கியமான காரியங்களுக்காக வெளியே செல்லும்போது நீங்கள் வழியில் பார்க்கும் மிருகங்களை வைத்தே அது வெற்றிகரமாக முடியுமா? இல்லையா? என்பதை கண்டறிந்து விடலாம்
பழங்கால வேதங்கள் மற்றும் சாஸ்திரங்களின் படி சில மிருகங்களை அடிக்கடி பார்ப்பது என்பது இயற்கை நமக்கு எதையோ கூற வருவதன் அர்த்தமாகும். இதில் சில மிருகங்கள் அதிர்ஷ்டத்தை கொண்டுவரலாம், சில மிருகங்கள் ஆபத்தையும், துரதிர்ஷ்டத்தையும் கொண்டு வரலாம்.
முக்கியமான காரியங்களுக்காக வெளியே செல்லும்போது நீங்கள் வழியில் பார்க்கும் மிருகங்களை வைத்தே அது வெற்றிகரமாக முடியுமா? இல்லையா? என்பதை கண்டறிந்து விடலாம் என்று நமது சாஸ்திரங்கள் கூறுகிறது. இந்த பதிவில் மிருகங்கள் கூறவரும் அர்த்தங்கள் என்னென்னெ என்று பார்க்கலாம்.
பல்லி
பல்லி மிகவும் அதிர்ஷ்டமான மற்றும் புனிதமான உயிரினம் என்று நமது சாஸ்திரங்கள் கூறுகிறது. நீங்கள் வெளியே செல்லும்போது பல்லி உங்கள் பாதையில் வந்தால் நீங்கள் செல்லும் காரியம் வெற்றிகரமாக முடியும் என்று நம்பப்படுகிறது. மேலும் நல்ல செய்திகள் உங்களை தேடி வருவதன் அடையாளமாகவும் பல்லி இருக்கும். பல்லி உங்கள் வழியில் வந்தால் உங்களுக்கு வெற்றிதான் என்று முடிவு செய்துகொள்ளுங்கள்.
ஆந்தை
ஆந்தை உங்கள் பாதையில் வந்தாலோ அல்லது உங்கள் கண்களில் அடிக்கடி அது பட்டாலோ அது இயற்கை உங்களுக்கு கூறவரும் செய்தி என்று புரிந்து கொள்ளுங்கள். ஆந்தை அறிவு மற்றும் ஞானத்தின் அடையாளமாகும். ஆந்தை உங்கள் வழியில் வருவது நீங்கள் சில குழப்பமான சூழ்நிலைகளில் விழப்போவதை குறிக்கும். அவ்வாறு குழப்பமான சூழ்நிலைகளில் நீங்கள் மற்றவர்களின் பேச்சை கேட்காமல் உங்களின் சொந்த அறிவை உபயோகப்படுத்தி முடிவெடுக்க வேண்டும்.
கிளி
கிளி உங்கள் பார்வையிலோ அல்லது வழியிலோ வருவது என்பது நல்ல சகுனமாக கருதப்படுகிறது. இது உங்களுடைய முன்னோர்களின் ஆசீர்வாதம் உங்களுக்கு இருப்பதன் அறிகுறி ஆகும். உங்கள் கடினமான சூழ்நிலைகளில் அவர்கள் உடனிருந்து காப்பாற்றுவார்கள் என்பதன் அறிகுறிதான் கிளி ஆகும்.
கழுகு
கழுகின் பெரிய கண்கள் ஆர்வத்தை குறிப்பதாகும். கழுகு உங்கள் வழியிலோ அல்லது நெருக்கமாகவோ வந்தாலோ இயற்கை உங்களுக்கு உணர்த்த வருவது என்னவெனில் வரும் நாட்களில் நீங்கள் பல முக்கியமான பாடங்களை கற்றுக்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்பதாகும்.
பச்சோந்தி
சிலசமயம் போதுமான முயற்சிகள் செய்தாலும் உங்களால் நினைத்த முடிவுகளை அடைய முடியாமல் போகலாம். அதுபோன்ற சூழ்நிலைகளில் நீங்கள் உங்களுடைய குறிக்கோள் மற்றும் எண்ணங்களை மாற்றிக்கொள்ள நினைப்பீர்கள். நீங்கள் தோல்வியில் இருக்கும்போது உங்கள் வழியில் பச்சோந்தியை பார்த்தால் நீங்கள் உங்கள் இலக்கை மாற்றிக்கொள்ளாமல் அதிலேயே வேறு முயற்சிகளை செய்ய வேண்டும் என்று அர்த்தம்.
பாம்பு
பொதுவாகவே பாம்பு என்பது கெட்ட சகுனம்தான் என்று நம்பப்படுகிறது, ஆனால் உண்மையில் அவை எப்பொழுதும் கெட்ட செயல்களை மட்டும் கொண்டு வருவதில்லை. இவை சக்தி மற்றும் ஞானத்தின் அடையாளமாக இருக்கிறது. இது நமக்குள் இருக்கும் ஆற்றலை உணர்த்துவதாக இருக்கிறது. உங்கள் பாதையில் பாம்பு வந்தால் நீங்கள் வெற்றியை நோக்கி முன்னேறி கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்.
சிலந்தி பூச்சி
அசிங்கமான உயிரினமாக கருதப்படும் இது அறிவின் அடையாளமாகும். உண்மையில் சிலந்தி பூச்சி புனிதமான ஒன்றாக கருதப்படுகிறது, இதன் வலை நாம் இயற்கையுடன் இணைந்திருப்பதை உணர்த்தும். பழங்காலத்தில் சிலந்தி நண்பர்கள் மற்றும் கடந்த காலத்தின் அடையாளமாக கருதப்பட்டது, இப்போதும் அதன் அர்த்தம் அதுதான். இது உங்களை நோக்கி உபயோகமான செய்திகள் வருவதை குறிக்கும்.
காகம்
இந்த பறவையும் மோசமானதாக சித்தரிப்படுகிறது. இது இருள் மற்றும் மரணத்தின் அறிகுறியாக கருதப்படுகிறது. ஆனால் இது உண்மையின் அடையாளமாகவும் இருக்கிறது. இது உங்கள் பாதையில் வருவது நீங்கள் இதுவரை தெரிந்து கொள்ளாமல் இருந்த முக்கியமான உண்மையை தெரிந்து கொள்ள போவதன் அர்த்தம் ஆகும். நீங்கள் உண்மையை தெரிந்து தயாராகி விட்டதன் அறிகுறிதான் காகம் உங்கள் வழியில் வருவது.