Just In
- 53 min ago இந்த ராசிக்காரர்கள் திருப்பதிக்கு அடிக்கடி போகக்கூடாது.. ஏன் தெரியுமா?
- 2 hrs ago தோசை மாவு இல்லையா? வேர்க்கடலையை வெச்சு இப்படி தோசை சுடுங்க.. வேற லெவல் டேஸ்ட்ல இருக்கும்..
- 5 hrs ago Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- 10 hrs ago 18 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
Don't Miss
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம், இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- News கட்சியையே உடைக்கும் அளவிற்கு கோபம்.. வேலையை தொடங்கிய முக்கிய புள்ளி.. ஆட்டம் காணும் "அந்த" கட்சி?
- Movies கீர்த்தி சுரேஷ் என்ன இப்படி மாறிட்டாரு.. பாலிவுட் நடிகரை கட்டிப் பிடித்து தீயாக பரவும் வீடியோ!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Sports தோனி கிடையாது! இந்த 28 வயது வீரர் தான் மிகவும் அபாயகரமான வீரர்.. மேத்தீவ் ஹைடன் கருத்து
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
உலகத்தின் அழிவு இந்த 5 இடங்களில் இருந்துதான் தொடங்கும் என்று பிரம்மா கூறியுள்ளார்...
நாம் வாழும் இந்த கலியுகத்தை பற்றியும் அதன் அழிவை பற்றியும் நம் வேதங்கள் பலவற்றை கூறியுள்ளது.
இந்து புராணங்களின் படி மாபெரும் இதிகாசமான மஹாபாரதத்தில் கூறப்படும் குருஷேத்திர போர்தான் திவாபர யுகத்தின் முடிவாகும். நாம் இப்போது வாழ்ந்து கொண்டிருப்பது கலியுகமாகும்.. நாம் வாழும் இந்த கலியுகத்தை பற்றியும் அதன் அழிவை பற்றியும் நம் வேதங்கள் பலவற்றை கூறியுள்ளது. அவ்வாறு கலியுகத்தின் அழிவை பற்றி மகாராஜா பரீக்ஷித் பல தகவல்களை கூறியுள்ளார்.
குருஷேத்திர போரின் ஒன்பதாவது நாள் வரை போரில் எந்த அப்பாவியும் கொல்லப்படவில்லை. அதுதான் திவாபர யுகத்தின் இறுதி நாளாகும். அதற்குபின் போரில் நடந்த கொலைகளும், அப்பாவிகளின் மரணங்களும் நாம் நன்கு அறிந்ததே. அதுதான் கலியுகத்தின் தொடக்கமாகும். அப்போது தொடங்கிய அழிவு இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. கலியுகத்தின் அழிவு எந்த இடங்களில் தொடங்கும் என்று மகாராஜா பரீக்ஷித் கூறியுள்ளார். அந்த இடங்கள் எந்தெந்த இடங்கள் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
மகாராஜா பரீக்ஷித்
அபிமன்யு மற்றும் உத்திரைக்கு மகனாக பிறந்தவர்தான் மகாராஜா பரீக்ஷித். அசுவத்தாமனின் பிரம்மாஸ்திரம் உத்திரையின் கர்ப்பத்தை தாக்கியதால் குழந்தை இறக்கும் நிலை ஏற்பட்டது. ஆனால் பகவான் கிருஷ்ணரின் அருளாலும், சக்தியாலும் அந்த குழந்தை காப்பாற்றப்பட்டு பரீக்ஷித் என்று பெயர் சூட்டப்பட்டது. பாண்டவர்கள் ராஜ்ஜியம் துறந்து செல்லும்போது பரிக்ஷித்துக்கு முடிசூட்டிவிட்டு கிருபாச்சாரியாரை அவருக்கு குருவாக நியமித்து சென்றார்கள். குரு வம்சத்தில் மிஞ்சியிருந்த கடைசி வாரிசு மகாராஜா பரிக்ஷித்தான்.
கலியுகம்
பிரம்மதேவர் மொத்தம் நான்கு யுகங்களை படைத்தாக வேதங்கள் கூறுகிறது. அவை முறையே சாத்திய யுகம், தீர்த்த யுகம், திவாபர யுகம், இறுதியாக கலியுகம். ஒவ்வொரு யுகமும் பல லட்சம் ஆண்டுகளை கொண்டது. அனைத்து யுகங்களும் அழிந்த பிறகு தற்போது கலியுகமும் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து கொண்டு இருக்கிறது. கலியுகத்தின் அழிவை தன் முன்னோர்கள் மூலம் அறிந்த மகாராஜா பரீக்ஷித் தன் மரணத்திற்கு தயாரானார்.
கலியுகம் உள்ள இடங்கள்
உலகத்தின் அழிவை பற்றி பிரம்மா பரிக்ஷித்திடம் கூறிய பின் அவரிடம் மனிதகுலத்தின் அழிவை தவிர்க்கும்படி கூறினார். அதற்கு பிரம்மா " நீ இந்த ஐந்து இடங்களில் வசிப்பாய், ஆனால் உன் எல்லைக்குள் மட்டுமே இருக்க வேண்டும். இந்த இடங்களுக்கு அவர்களாக விரும்பி வருபவர்களே அவர்களின் அழிவிற்கும் கலியுகத்தின் அழிவிற்கு காரணமாக இருப்பார்கள் " என்று கூறினார்.
மதுபானம் வழங்கும் இடம்
வேதங்களில் குறிப்பிட்டுள்ள படி மது அருந்தும் இடம் விஷத்தை வழங்கும் இடம் என்று கூறப்படுகிறது. மகாராஜா பரீக்ஷித் இந்த இடத்திலும் இருப்பார். இங்கு மனமுவந்து வருபவர்களை ஒருபோதும் தடுக்கக்கூடாது. அவர்கள்தான் இந்த கலியுகத்தின் அழிவை தொடங்கி வைப்பார்கள் என்று வேதங்கள் கூறுகிறது.
MOST READ:இந்த எளிய முறைகளை கையாண்டால் சர்க்கரை நோயை சமாளிப்பது மிகவும் சுலபமாகும்...
விபச்சாரம் செய்யும் இடம்
விபச்சாரம் செய்யும் இடம் ஆசைகளின் ஆயுதம் ஆகும். இந்த இடத்திற்கு வருபவர்கள் தமது ஒழுக்கத்தையும், கௌரவத்தையும் இழந்து வருபவர்கள். அவர்கள் தாங்களும் அழிந்து கலியுகத்தை அழிப்பவர்கள்.
உயிர்களை கொல்லும் இடம்
உயிர்களை கொல்லும் இடமான கறிக்கடை போன்ற இடத்திலும் கலியுகத்தின் அழிவு தொடங்கும். மனிதர்கள் தங்களின் மனிதகுல மாண்பை இழந்து அவர்களுக்குள் இருக்கும் கொடூரமான பக்கத்தை காட்டும் அப்பாவி விலங்குகளை கொல்லும் இடமான இங்கும் அழிவு தொடங்கும் என்று பிரம்மா கூறுகிறார்.
சூதாடும் இடம்
சூதாடும் இடங்கள் துரோகத்தை விதைக்கும் இடமாகும். இந்த இடத்திற்கு வருபவர்கள் அவர்களின் வாழ்வை அவர்களே சூதாட்டத்தில் வைக்கிறார்கள். எனவே அங்கு வருபவர்கள் கலியுகத்தின் அழிவை தொடங்கி வைப்பார்கள்.
தங்கம்
தங்கம் என்பது பேராசையை உண்டாக்கும் ஆயுதமாகும். பரீக்ஷித் இந்த இடங்களுக்கு வருபவர்கள் கெட்டவர்கள் ஆனால் நல்லவர்களை அழிக்கும் ஆயுதம் எது என்று பிரம்மாவிடம் கேட்டார். அதற்கு பிரம்மா பேராசைதான் ஒருவரை அழிக்கும் ஆயுதமாகும், அதற்கு தங்கம்தான் அந்த பேராசையை அதிகரித்து கலியுகத்தின் அழிவிற்கு ஆதாரமாக இருக்கும் என்று கூறினார்.