Just In
- 16 min ago ஒருடைம் உருளைக்கிழங்கு குருமாவை இந்த ஸ்டைலில் செய்யுங்க.. அப்புறம் பாருங்க இப்படிதான் எப்பவும் செய்வீங்க..
- 3 hrs ago Today Rasi Palan 24 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பிறர் பிரச்சனைகளில் தலையிடாமல் இருந்தால் நல்லது...
- 9 hrs ago வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- 11 hrs ago மணமணக்கும்.. ருசியான... கையேந்தி பவன் பரோட்டா சால்னாவை எப்படி செய்யணும் தெரியுமா?
Don't Miss
- News சர்ச்சை கருத்து: பிரதமர் மோடி இப்படி பேசுறதுக்கு காரணமே இதுதான்.. போட்டு தாக்கிய நடிகர் பிரகாஷ் ராஜ்
- Movies படு மோசமான படுக்கையறை காட்சி.. ரஜினியின் ரீல் மகளை திட்டிதீர்க்கும் பேன்ஸ்!
- Finance இன்போசிஸ் எடுத்த முக்கிய முடிவு… கல்லூரி மாணவர்கள் ஷாக்.
- Automobiles ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- Sports சுற்றி சிஎஸ்கே ரசிகர்கள்.. நடுவில் ஒற்றை ஆளாய் போட்ட ஆட்டம்.. சேப்பாக்கத்தில் லக்னோ ரசிகர் சம்பவம்!
- Technology வெளுக்குது ஆர்டர்.. ரூ.15249 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 45W சூப்பர்வூக்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
இந்த மந்திரத்த தினம் சொன்னீங்கன்னா உங்க முகத்துலயும் இப்படி தேஜஸ் பொங்குமாம்...
ஆண், பெண் இருவரும் எல்லா செல்வங்களையும் பெற சொல்ல வேண்டிய சௌந்தர்ய மந்திரத்தை உங்களுக்காக இங்கே பகிர்ந்து கொள்கிறோம். அப்படி ஆணும் பெண்ணும் இருவரும் சொல்ல வேண்டிய மந்திரங்கள் பற்றி தான் இந்த தொகுப்பில
'மந்திரம்' என்பதற்கு மாற்றத்தை உருவாக்கக்கூடிய ஓர் ஒலி, வார்த்தை அல்லது இணைந்த வார்த்தைகள் என்று பொருள் கொள்ளப்படுகிறது. மந்திரங்கள் காலங்காலமாக வேண்டுதல்களும் இறைவனுக்குள் நிலைகொள்ளவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
"ஓம்" என்னும் மந்திரம், எல்லாவற்றையும் முன்முடிவுகள் இல்லாமல் அப்படியே ஏற்றுக்கொள்வதற்காக பாரம்பரியமாக பயன்பாட்டில் இருந்து வருகிறது. "லோஹ ஸ்ஹஸ்தா ஸ்குஹ்ஹினோ ப்பாவந்த்து" என்பது அனைத்து உயிர்களுக்கும் சமாதானம் வேண்டி சொல்லப்படும் மந்திரம்.
மந்திரம்
'மந்திரம்' என்ற சமஸ்கிருத வார்த்தைக்கு 'சிந்தனையின் கருவி' என்று பொருள். 'மந்திரம்'என்ற சமஸ்கிருத சொல்லின் வேர்ச்சொல் 'மந்த்' என்பதாகும். இதற்கு 'சிந்தனைக்கு' என்று அல்லது 'மனம்' என்று அர்த்தம் கொள்ளலாம். 'திரா' என்ற பின்னொட்டுச் சொல்லுக்கு 'கருவி' என்பது பொருள். ஆகவே, மந்திரம் என்பது 'சிந்தனையின் கருவி' என்பதாகிறது.
ஆகவே, மந்திரங்களை உச்சரிப்பதால் நம் சிந்தனை மற்றும் மனதின் நிலைப்பாடு மட்டும் மாற்றம் பெறுவதோடு நின்றுவிடுவதில்லை. நம்முடைய தோற்றமே மாற்றத்திற்குள்ளாகிறது. அதுவும் அழகு மற்றும் தேஜஸ் என்பதற்கான சௌந்தர்ய மந்திரத்தை உச்சரிக்கும்போது நாம் அழகான தோற்றத்தை பெறுகிறோம்.
சௌந்தர்ய மந்திரம்
ஓம் சௌந்தர்யே சௌந்தர்ய பிரதேயா சிட்டிம் தேஹி நமஹ
'சௌந்தர்யம்' அல்லது 'அழகு' என்ற சொல் மிகவும் சிறியதாயினும் அதிக வல்லமை பொருந்தியதாகும். எல்லாவற்றுக்கும் அடித்தளமானதும், இப்பிரபஞ்சத்தின் ஒரு பகுதியின் இயக்கத்திற்கு பொறுப்பானதும், வசீகரத்தை தருவதும், அதன் ஒரு பகுதியை உருவாக்குவதும், பொருள்களில் வித்தியாசத்திற்கு காரணமானதும், ஒவ்வொரு தனிப்பட்ட மனிதனின் நிலைப்பாட்டை புரிந்துகொள்வதற்கான வழியுமே 'சௌந்தர்யம்' ஆகும்.
பழங்காலத்திலிருந்தே பல கலைகள் உருவாவதற்கு அழகே உந்துசக்தியாக இருந்துள்ளது. இன்று அழகென்ற வார்த்தையை நாம் புரிந்துகொள்வது போன்ற அர்த்தத்தில், நோக்கில் அது அன்றைக்கு புரிந்துகொள்ளப்படவில்லை. எந்தத் துறையாயினும் அதில் நன்மைக்கேதுவான தகுதியாக, தேஜஸ் கொண்ட ஆளுமையை சுட்டுவதாக அது அமைந்திருந்தது.
MOST READ:செவ்வாய் கிரகம் இன்னைக்கு எந்த ராசிக்கு சாதகமாகவும் எந்த ராசிக்கு பாதகமாகவும் அமையும்?
ஆதி சங்கரரின் சௌந்தர்ய லஹரி
சௌந்தர்ய லஹரியை அருளிய ஆதி சங்கரர், சௌந்தர்யம் என்பது தோற்றப் பொலிவை மட்டும் குறிப்பதல்ல. இயற்கையின் உதவியுடன் உள்ளும் புறமும் மேம்பாடடைந்து நீ ஒப்பற்றவனாக, தெய்வத்தோடு இணையும் நிலைக்கு உன்னை வழிநடத்துவது என்று கூறியுள்ளார்.
இது பல படிகளை கொண்ட ஒரு நீண்ட வழிமுறையாகும். ஆன்மீக நோக்கு கொண்டதாயினும் இதன் லௌகீக பக்கத்தையும் நாம் புறக்கணித்துவிட இயலாது. அழகிய தோற்றம் கொண்ட ஒருவரை பார்ப்பது அனைவருக்குமே நல்லதொரு உணர்வை கொடுக்கும். தோற்றப்பொலிவு நமக்கு ஓர் அடையாளத்தையும் தருகிறது.
சௌந்தர்ய மந்திர உச்சாடனம்
பொலிவான தோற்றம் பெறவும், வசீகரம் பெறவும், சரும பளபளப்புக்கும், அழகுக்கும், கவர்ந்திழுக்கும் தன்மை பெறவும் ஒருவர் சௌந்தர்ய லஹரியை உச்சரிக்கலாம். இம்மந்திரத்தை உச்சரிப்பதன் மூலமாக சாதனம் செய்வதன் மூலமாக சருமம் பளபளப்பாவதுடன், முகத்தில் வசீகரம் உண்டாகும்.
சருமத்தில் இருக்கும் தேவையில்லாத வடுக்கள், பரு போன்ற சரும பிரச்னைகளை தீர்க்கக்கூடிய இம்மந்திரத்தை பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் உச்சாடனம் செய்து அழகிய தோற்றத்தைப் பெறலாம்.
MOST READ:சனிபகவான் பிறந்த கதை உங்களுக்குத் தெரியுமா? கேளுங்க அந்த சுவாரஸ்யத்த...