Just In
- 39 min ago கேரளாவின் அடையாளங்களில் ஒன்றான இந்த குட்டி மாட்டின் பால்தான் உலகிலேயே சத்தான பாலாம் தெரியுமா?
- 1 hr ago கத்திரிக்காயை இந்த மாதிரி ஒருமுறை பொரியல் செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க...
- 2 hrs ago ஹிட்லரின் நாஜி முகாமில் நடத்தப்பட்ட திகிலூட்டும் சோதனைகள் என்னென்ன தெரியுமா? முக்கியமா இரட்டை குழந்தைகள் மீது!
- 3 hrs ago Constipation: மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து உடனே விடுபடணுமா? இந்த பானங்களை தினமும் குடிங்க..
Don't Miss
- Movies நைசா முத்தம் கொடுக்கும் தீபா.. அட செம ரொமான்ஸ் தான்போல.. கார்த்திக் தீபம் இன்றைய எபிசோடு!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
- News மாயாவதியின் மாயவலை.. பாஜகவுக்கு 24 தொகுதிகளில் ஜாக்பாட்! பயந்து நடுங்கும் அண்ணன் மகன்!
- Finance ரூ.12,500 முதலீடு செஞ்சா ரூ. 1 கோடி கிடைக்குமா.. செம சான்ஸ்..! சூப்பர் திட்டம்.. மிஸ் பண்ணிடாதீங்க!
- Automobiles இப்பவே 13,000த்த தொட்ருச்சா! இந்தியால இருந்து கொண்டு வந்த காருக்கு பேராதரவு வழங்கும் ஜப்பானியர்கள்!
- Technology அள்ளி தரும் BSNL.. வெறும் ரூ.299 போதும்.. தினமும் 3GB டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. எத்தனை நாள் வேலிடிட்டி?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
உங்கள் வாழ்க்கை நரகமாக காரணம் நீங்கள் சாதாரணமென நினைத்து செய்யும் இந்த செயல்கள்தான்...!
கலியுகமான இன்று நாம் சாதாரணமென நினைத்து செய்யும் செயல்களில் பல சத்யுகத்தில் பெரிய பாவங்களாக கருதப்பட்டு வந்தது.
நமது உலகம் இதுவரை மூன்று யுகங்களை கடந்து நான்காவது யுகத்தில் இருக்கிறது. சத்யுகம், தீர்த்தயுகம், துவாபரயுகம் என மூன்றையும் கடந்து நமது உலகம் இப்பொழுது கலியுகத்தில் இருக்கிறது. ஒவ்வொரு யுகத்திலும் மனிதர்களின் குணம், விருப்பங்கள், நடத்தை என அனைத்திலும் தொடர்ந்து மாற்றங்கள் ஏற்பட்டு கொண்டே வருகிறது. சத்யுகத்தில் உறவுகளுக்கு கொடுத்த முக்கியத்துவமும், மனதிற்கு நேர்மையாக இருப்பதும் முக்கியமானதாக இருந்தது.
கலியுகமான இன்று நாம் சாதாரணமென நினைத்து செய்யும் செயல்களில் பல சத்யுகத்தில் பெரிய பாவங்களாக கருதப்பட்டு வந்தது. ஏனெனில் கலியுகத்தில் மனிதர்கள் உறவுகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் என்பது மிகவும் குறைந்து விட்டது. நாம் செய்யும் பாவச்செயல்கள்தான் நம் உலகத்தின் முடிவுக்கு காரணமாக இருக்க போகிறது என்று நமது வேதங்கள் சொல்கிறது. கங்கை மைந்தர் பீஷ்மரும் அதைத்தான் தர்மருக்கு கூறினார். இந்த பதிவில் கலியுகத்தின் அழிவிற்கு காரணமாக இருக்கப்போகும் பாவங்கள் என்ன என்று பார்க்கலாம்.
தீர்த்தயுகம்
சத்யுகம் முடிந்த பிறகு தீர்த்தயுகம் தொடங்கியது. இந்த யுகத்தில்தான் மகாவிஷ்ணு பூமியில் இராமபிரானாக பிறப்பெடுத்தார். இந்த யுகத்தில்தான் மனித உறவுகள் நேர்மையான செயல்களையும், உண்மையையும் மிஞ்சி செயல்பட தொடங்கியது. துவாபர யுகத்தில் உறவுகள் மற்றும் தனிமனித கண்ணியம் படிப்படியாக குறைந்து கொண்டே வந்தது. பணம், அதிகாரம் மற்றும் பதவி போன்றவற்றிற்கு மனித உறவுகளை விட அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.
கலியுகம்
கலியுகம் தொடங்கிய பின் பணம் மற்றும் அதிகாரத்திற்காக அனைத்து மனித இயல்புகளையும் மனிதர்கள் மீற தொடங்கிவிட்டார்கள். துரோகம், சதி, ஏமாற்றுதல் என அனைத்தையும் தங்கள் கையில் எடுக்க மனிதர்கள் தொடங்கிவிட்டார்கள். குறைந்தபட்சம் தனக்கு தானே உண்மையாக இருப்பதை கூட மனிதர்கள் மறந்துவிட்டார்கள். கலியுகத்தை அழிக்கும் பாவங்கள் என்னென்ன என்று பீஷ்மர் தர்மனிடம் கூறியதை மேற்கொண்டு பார்க்கலாம். இந்த பாவங்கள் நம் உடலால், மனதால் மற்றும் வார்த்தைகளால் செய்பவையாகும்.
வன்முறை
நாம் உடலால் செய்யும் முதல் பாவம் வன்முறைதான். மற்ற பாவங்களை காட்டிலும் மிகவும் கொடூரமான பாவம் என்றால் அது இதுதான். வேண்டுமென்றே உயிருள்ள பொருட்கள் மீது செய்யும் அனைத்து வன்முறையும் உங்களின் பாவங்களிலேயே சேரும்.
MOST READ: உங்களுக்கு ஆயுசு எவ்வளவு இருக்குனு இந்த அறிகுறிகள வைச்சே தெரிஞ்சிக்கலாம் தெரியுமா?
திருட்டு
உடலால் செய்யும் இரண்டாவது பாவம் திருட்டு ஆகும். சட்டவிரோதமாக மற்றவரின் பணம் மற்றும் சொத்தை அபகரிப்பது போன்றவை பாவச்செயல்கள்தான். உங்களுக்காக மற்றவர்கள் திருடினாலும் அது உங்களின் பாவத்திலேயே சேரும்.
முறைகேடு
முறைகேடுகள் என்பது கலியுகத்தில் அதிகம் நடக்கும் ஒரு பாவச்செயலாகும். நம்புபவர்களை ஏமாற்றுவது, உறவுகளுக்குள் ஏமாற்றுவது, பொய் வாக்குறுதிகள் கொடுப்பது என முறைகேடுகள் நம்மை சுற்றி தினமும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
பேசும் மொழி
நாம் மற்றவர்களிடம் பேசும் விதம்தான் நம் ஆளுமையின் உண்மையான பிரதிபலிப்பாகும். தவறான உடல்மொழி உங்கள் உடல் பாவங்களின் கீழ் வருகிறது. எப்பொழுதும் அன்புடன் பேசுவதுதான் சிறந்தது. உங்களின் உடல்மொழி உங்களின் எண்ணங்களையும், வளர்ப்பையும் வெளிப்படுத்தும்.
MOST
READ:
கனவில்
மரணம்
காண்பது
போல
வந்தால்
ஆயுள்
அதிகரிக்கும்
என்பது
உண்மையா?
அறிவின்றி பேசுவது
விஷயங்களை ஆராயாமல் அறிவின்றி பேசுவது கூட ஒருவிதத்தில் பாவம்தான். மற்றவர்களுடன் விவாதிக்கும் முன் அதைப்பற்றி நீங்கள் முழுமையாக தெரிந்து கொண்டு அதன்பின் விவாதத்தில் ஈடுப்படவும்.
வயதில் மூத்தவர்களை அவமதிப்பது
மகாபாரதத்தில் கூறப்பட்டுள்ளபடி வயதில் மூத்தவர்களை அவமதிப்பது என்பது மரணத்திற்கு சமமானதாகும். ஆனால் கலியுகத்தில் இது சாதாரணமாக நிகழும் ஒரு செயலாக மாறிவிட்டது. பீஷ்மரை அவமதித்த துரியோதனின் நிலைமை என்னவாயிற்று என்பதை நாம் நாகு அறிவோம். அதே நிலைதான் வயதில் மூத்தவர்களை அவமதிக்கும் அனைவருக்கும்.
பொய்
பொய் கூறுவது என்பது உங்களுடைய குணத்தை மட்டும் காட்டுவதில்லை அதனுடன் உங்களுக்கு பிரச்சினைகளையும் சேர்த்தே ஏற்படுத்தும். பொய்கள் கூறுவது உங்கள் ஆன்மாவை காயப்படுத்தும் எள்ளலும் உங்களை நரகத்திற்கு அழைத்து செல்லவும் வழிவகுக்கும்.
மனரீதியாக காயப்படுத்துவது
வேண்டுமென்ற ஒருவரை கடுஞ்சொற்களால் காயப்படுத்துவதும் பாவம்தான். மற்றவர்களை பற்றிய தவறான விஷயங்களை மட்டும் சிந்திப்பதே தவறான செயல்தான். மனரீதியாக காயப்படுத்துவது என்பது உடல்ரீதியாக காயப்படுத்துவதை விட கொடுமையானது.