Just In
- 38 min ago இந்த ராசிக்காரர்கள் திருப்பதிக்கு அடிக்கடி போகக்கூடாது.. ஏன் தெரியுமா?
- 1 hr ago தோசை மாவு இல்லையா? வேர்க்கடலையை வெச்சு இப்படி தோசை சுடுங்க.. வேற லெவல் டேஸ்ட்ல இருக்கும்..
- 4 hrs ago Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- 10 hrs ago 18 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
Don't Miss
- Movies கீர்த்தி சுரேஷ் என்ன இப்படி மாறிட்டாரு.. பாலிவுட் நடிகரை கட்டிப் பிடித்து தீயாக பரவும் வீடியோ!
- News சென்னையில் அடுத்த 2 நாளைக்கு இந்த சிக்கல் வேற வருதே.. மாநகராட்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Sports தோனி கிடையாது! இந்த 28 வயது வீரர் தான் மிகவும் அபாயகரமான வீரர்.. மேத்தீவ் ஹைடன் கருத்து
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ஒரே பிரசவத்தில் 5 குழந்தையை பெற்றெடுத்த 23 வயது பெண்... 480 ஆண்டுக்கு ஒருமுறை நடக்கிற அதிசயம்
ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகளை பெற்றெடுத்து 480 வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும் அதிசயத்தை நிகழ்த்திய பெண்ணைப் பற்றி இங்கே விளக்கமாகப் பார்க்கலாம். அந்த சுவாரஸ்யமான நிகழ்ச்சி பற்றிய தொகுப்பு தான் இது.
ஒரு பெண்ணுக்கு பிரசவம் என்பது அவ்வளவு எளிதான விஷயம் கிடையாது. உயிர் போய்ட்டு திரும்ப வரும் காரியம் என்று சொல்லுவார்கள். அதிலும் தாயையும் சேயையும் காப்பாற்ற வேண்டும் என்றால் நிறைய கஷ்டங்களை தாண்டி வர வேண்டும்.
இது பெண்ணுக்கு வலி நிறைந்த விஷயமா இருந்தால் கூட தாய்மை சுகமான விஷயமும் கூட. ஒரு பிரசவத்தில் ஒரு குழந்தையை பெற்றெடுப்பதே கடினமான விஷயம். ஆனால் இந்த பெண்ணோ ஒரே பிரசவத்தில் ஐந்து குழந்தைகளை பெற்றெடுத்து ஆச்சர்யம் அளித்துள்ளார். அதைப் பற்றிய ஒரு சின்ன கட்டுரை
இரட்டை குழந்தையா?
அலெக்ஸாண்டிரா கினோவா என்பவர் 23 வயதை அடைந்த பெண்மணி. இவர் கர்ப்பமாக இருந்து வந்தார். வயிறு பெரியதாக இருப்பதை பார்த்து இரட்டை குழந்தைகள் என்று தான் நினைத்தாராம். ஆனால் மருத்துவர்கள் ஸ்கேன் செய்து பார்த்த போது தான் தெரிந்தது அவர் 4 குழந்தைகளை சுமப்பது தெரிய வந்துள்ளது. இப்படியே தொடர்ந்து செக்கப் செய்து வந்த அவருக்கு அடுத்த மாதமே ஒரு மகிழ்ச்சி காத்திருந்தது. ஆமாங்க அவர் இப்பொழுது 5 குழந்தைகளை கருவில் சுமப்பது தெரிய வந்துள்ளது.
MOST
READ:
தண்ணீரில்
மூழ்கியவர்களுக்கு
என்ன
முதலுதவி
செய்தால்
உயிர்
பிழைக்க
வைக்கலாம்?
31 வது பிரசவம்
கர்ப்ப காலத்தின் 31 வது வாரத்தில் அவருக்கு சிசேரியன் செய்து குழந்தையை எடுத்தனர். இதில் சந்தோஷமான விஷயம் என்னவென்றால் 5 குழந்தைகளும் எந்த வித குறைபாடும் இல்லாமல் ஆரோக்கியமாக பிறந்தன. இருப்பினும் தாயையும் குழந்தைகளையும் ஸ்பெஷல் பாதுகாப்புடன் அவசர பிரிவில் வைத்து மருத்துவர்கள் கவனித்து வந்துள்ளனர்.
அப்பா செல்லம்
இந்த 5 குழந்தைகளும் அப்படியே அவருடைய அப்பா ஜாடையில் பிறந்திருப்பது அவரது தந்தைக்கு பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது. ஓரே சமயத்தில் 5 குழந்தைக்கு அப்பான அவரும் சந்தோஷத்தை தள்ளிப் போடாமல் கையோடு குழந்தைகளுக்கு பெயர் சூட்டி விட்டார். டேனியல், மைக்கேல், அலெக்ஸ் மற்றும் மார்ட்டின், கடைசியாக பிறந்த பெண் குழந்தைக்கு டெரிஸ்கா என்றும் தன் செல்லங்களுக்கு பெயர் சூட்டி மகிழ்ந்துள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
வரலாறு படைப்பு
செக் குடியரசு கருத்துப் படி ஒரே சமயத்தில் 5 குழந்தை பிறப்பு என்பது 480 வருடங்கள் கழித்து தற்போது நடந்துள்ளது என்கிறது. கண்டிப்பாக இது ஒரு ஆச்சரியமூட்டும் விஷயமே. கடவுளின் அருளால் அம்மாவும் 5 குழந்தைகளும் நலமாக இருக்கிறார்கள். மக்களும் இவர்களுக்கு வாழ்த்துக்கள் சொல்லி தங்களின் சந்தோஷத்தை பகிர்ந்து வருகிறார்கள். என்னங்க நீங்களும் உங்க வாழ்த்துக்களை இந்த தம்பதிக்கு சொல்லலாமே .