Just In
- 23 min ago இந்த ராசிக்காரர்கள் திருப்பதிக்கு அடிக்கடி போகக்கூடாது.. ஏன் தெரியுமா?
- 1 hr ago தோசை மாவு இல்லையா? வேர்க்கடலையை வெச்சு இப்படி தோசை சுடுங்க.. வேற லெவல் டேஸ்ட்ல இருக்கும்..
- 4 hrs ago Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- 10 hrs ago 18 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
Don't Miss
- News சென்னையில் அடுத்த 2 நாளைக்கு இந்த சிக்கல் வேற வருதே.. மாநகராட்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Movies டெய்லர் ஸ்விஃப்டுடன் கச்சேரி நடத்தப் போகிறாரா ஏ.ஆர். ரஹ்மான்?.. அந்த விருது வேற கிடைச்சிருக்கே!
- Sports தோனி கிடையாது! இந்த 28 வயது வீரர் தான் மிகவும் அபாயகரமான வீரர்.. மேத்தீவ் ஹைடன் கருத்து
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ஆண்கள் கையில் இந்த ரேகை மட்டும் இருந்துவிட்டால் அவர்களின் அழிவிற்கு காரணம் காமமாகத்தான் இருக்கும்..!
கைரேகை ஜோதிடத்தின் படி கைகளில் சில ரேகைகள் இருப்பது உங்களுக்கு துரதிர்ஷ்டத்தையும், ஆபத்தையும் ஏற்படுத்தும்.
இந்தியாவில் பழங்காலம் முதலே இருந்து வரும் நம்பிக்கை கைரேகையை வைத்து ஒருவரின் எதிர்காலத்தை சொல்வதாகும். இது வெறும் நம்பிக்கையாக மட்டுமில்லாமல் இதில் உண்மைகளும் இருப்பதால்தான் இன்றும் இந்த ஜோதிட முறை உயிர்ப்புடன் உள்ளது. கைரேகை என்பது பெருவிரல் ரேகை மட்டுமின்றி கைகளில் இருக்கும் அனைத்து ரேகைகளையும் பொறுத்ததாகும்.
கைரேகை ஜோதிடத்தின் படி கைகளில் சில ரேகைகள் இருப்பது உங்களுக்கு துரதிர்ஷ்டத்தையும், ஆபத்தையும் ஏற்படுத்தும். குறிப்பாக ஆண்களை பொறுத்த வரையில் அவர்கள் கையில் இருக்கும் சில ரேகைகள் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி, பொது வாழ்கையிலும் சரி பெரிய பாதிப்புகளை உண்டாக்கும். இந்த பதிவில் ஆண்களின் கையில் இருக்கக்கூடாத ரேகைகள் என்னென்ன என்று பார்க்கலாம்.
காமத்தின் கோடு
ஆண்களின் கையில் இருக்கும் முக்கியமான கோடுகளில் ஒன்று இந்த காமத்தின் கோடு ஆகும். இந்த கோடு உணர்த்துவது என்னவெனில் இந்த கோடு கையில் உள்ளவர்கள் காமத்தில் அதிக ஈடுபாடுடனும், அதிக ஆற்றலுடனும் இருப்பார்கள். இந்த கோடு உள்ள ஆண்களால் அவர்களின் காமத்தை கட்டுப்படுத்தவே இயலாது.
எப்படி இருக்கும்?
இந்த கோட்டை அடையாளம் காண முடியாதவர்கள் அதனை எப்படி கண்டுபிடிக்கலாம் எனில் காமத்தின் கோடானது அரைவட்ட வடிவில் காட்சியளிக்கும். இது உங்கள் கையில் இருக்கும் நிலா சந்திர மேடு மற்றும் வெள்ளி மேட்டையும் இணைக்கும் வடிவத்தில் இருக்கும்.
பிற ரேகைகள்
இந்த காமத்தின் கோட்டின் சிறப்பம்சம் என்னவெனில் உங்கள் கையில் உள்ள மற்ற ரேகைகளான கல்யாண ரேகை, குழந்தைகள் ரேகை, ஆயுள் ரேகை போன்றவை மற்றவர்களுடனும் தொடர்பு கொண்டது. ஆனால் இந்த ரேகை முழுக்க முழுக்க இந்த ரேகை கையில் உள்ளவர்களுக்கு மட்டுமே பாதிப்பை ஏற்படுத்தும். அதுவும் எதிர்மறையான பாதிப்புகளை மட்டுமே ஏற்படுத்தும்.
ஆசைகள்
இந்த கோடு அனைத்து விதத்திலும் ஒருவரின் ஆசையை அதிகரிக்கும். குறிப்பாக சுயமுன்னேற்றம் தொடர்பான பேராசையை இந்த கோடு அதிகம் ஏற்படுத்தும். பேராசை என்னும்போது அது காமம் தொடர்பானதாகவோ, பணம் தொடர்பானதாகவோ, அதிகாரம் தொடர்பானதாகவோ இருக்கலாம்.
கையின் வகை
இந்த ரேகை உள்ளவர்களின் கை ஒருவேளை மென்மையாக இருந்தால் அவர்கள் போதை பொருட்களுக்கு அடிமையாக வாய்ப்புள்ளது. அதேசமயம் இவர்களின் கை கடுமையாகவும், முரட்டுத்தனமாகவும் இருந்தால் அவர்கள் மதுவிற்கு அடிமையாக வாய்ப்புள்ளது. மேலும் இவர்களின் மூளை கோடானது மற்ற கோடுகளை விட சிறிதாகவும், இவர்களின் கட்டை விரல் சிறியதாகவும் இருந்தால் அவர்களின் பாலியல் வேட்கை அதிகமாக இருக்கும். அவர்கள் வாழ்க்கையில் பலருடன் பாலியல்ரீதியான தொடர்புகளில் இருப்பார்கள்.
நோய்கள்
இவர்களின் அதீத பாலியல் ஆர்வத்தால் இவர்களுக்கு பாலியல்ரீதியான நோய்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. அதுமட்டுமின்றி இந்த ஆசையால் அவர்களால் ஒரு சாதாரண வாழ்க்கையை வாழவே முடியாது.
MOST
READ:
மகாபாரத
போரின்
முடிவிற்கு
பின்
நடந்த
துயர
சம்பவங்கள்
என்னென்ன
தெரியுமா?
ஆயுள் அதிகம்
இந்த காமத்தின் கோடானது ஆயுள் ரேகையை விட பலவீனமாக இருந்தால் அவர்கள் அடிக்கடி நோயில் விழ அதிக வாய்ப்புள்ளது. ஆனால் அவர்கள் விரைவில் இறக்க மாட்டார்கள். தொடர்ந்து ஏற்படும் நோய்கள் அவர்களின் வாழ்வை படாதபாடு படுத்தும்.
தலைமை ரேகை
காமத்தின் கோடு தவிர, ஒருவரின் தலைமை ரேகையானாது மிகவும் பலவீனமாக இருப்பது பொதுவாக நல்ல அறிகுறியாக கருதப்படவில்லை. அவ்வாறு இருப்பவர்கள் காதலில் அதிகம் ஏமாற்றுபவர்களாக இருப்பார்கள். அவர்கள் எந்த உறவிலும் உண்மையாக இருக்கமாட்டார்கள்.
தனி உலகம்
இப்படிப்பட்ட ரேகைகள் உள்ளவர்கள் அவர்களுக்கென தனி உலகத்தில் வாழ்வார்கள். அவர்கள் உலகத்திலேயே அவர்கள் காணாமல் போனவர்கள். மற்றவர்களின் கருத்துகளுக்கோ, அவர்கள் என்ன நினைப்பார்கள் என்றோ இவர்கள் ஒருபோதும் கவலை கொள்ள மாட்டார்கள். இவர்களுக்கு தெரிந்ததெல்லாம் தன்நலன் மட்டுமே.
புத்திக்கூர்மை
இந்த காமத்தின் கோடு கையில் இருப்பவர்கள் எப்பொழுதும் மற்றவர்களை விட அதிக புத்திகூர்மை மிக்கவர்களாக இருப்பார்கள், இவர்களின் கற்பனைத்திறனும் எல்லையற்றதாக இருக்கும். ஆனால் அது இவர்களுக்கு எந்த வகையிலும் உதவாது. ஏனெனில் அது எப்போதும் சரியான பாதையில் செயல்படாது.
MOST READ: இறந்த உடல்களை எரிப்பதற்கு பதில் இவர்கள் பறவைகளுக்கு உணவாக்கி விடுவார்களாம் ஏன் தெரியுமா?
புறக்கணிப்பு
இந்த ரேகை கையில் உள்ளவர்கள் எப்பொழுதும் இந்த சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்டு கொண்டே இருப்பார்கள் இது அவர்களின் நடத்தையில் பிரதிபலிக்கும். இவர்கள் எளிதில் பாதிக்கப்படக்கூடியவராக இருப்பதுடன் தனது மூளையை உபயோகிக்காமல் மற்றவர்கள் கூறுவதை கண்ணை மூடிக்கொண்டு நம்புவார்கள்.