Just In
- 56 min ago வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- 2 hrs ago போலந்து மக்களால் கடவுளாக கொண்டாடப்படும் இந்திய அரசர்... அப்படி அந்த மக்களுக்கு அவர் என்ன செய்தார் தெரியுமா?
- 2 hrs ago Mango Benefits: ஆண்கள் தினமும் ஒரு மாம்பழம் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்-ன்னு தெரியுமா?
- 4 hrs ago கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
Don't Miss
- Automobiles "ஐ லவ் யூ" சொல்ல ஆட்டோ பைலட் மோடை பயன்படுத்திய விமானி! யாரு சாமி இவரு
- News கோதுமை பீர்.. ஒரே ஒரு பீர் பாட்டில் விலை இவ்வளவா? இப்பவே குஷியில் குடிமகன்கள்.. ஆனாலும் "இடிக்குதே"
- Movies Director Dharani: ஜீப்பை தூக்கினாரா விஜய்.. கில்லி இயக்குநர் தரணி சொன்னது என்ன?
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
இராவணனை வீழ்த்துவதற்கு இராமருக்கு சூரிய பகவான் எப்படி உதவினார் தெரியுமா?
சூரிய பகவான் அனைத்து முக்கிய கடவுள்களின் ஒற்றை வடிவமாகவும், பிரதிநிதியாகவும் இருக்கிறார்.
அகத்திய முனிவர் எழுதிய ஆதித்திய ஹிருதய ஸ்தோத்திரம் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இராமாயணத்தில் இராமர் இறுதி போரின் போது இராவணனுக்கு எதிராக போராடிய போது இராமரின் ஆற்றல் குறைந்த போது இதனை இயற்றியதாக கூறப்படுகிறது.
இந்து மதத்தில் எண்ணற்ற கடவுள்கள் இருந்தாலும் குறிப்பிட்ட கடவுள்கள் மட்டுமே அனைவராலும் வணங்கப்படுகிறார்கள். அதற்கு காரணம் பல கடவுள்களின் மகிமையும், ஆற்றலும் நமக்கு தெரியாமல் இருப்பதுதான். அப்படி நாம் அதிகம் வழிபடாத ஆனால் அதிக ஆற்றலுடன் அருள்பாலிக்கும் கடவுள்தான் சூரிய பகவான். இந்த பதிவில் சூரிய பகவானை வழிபடுவது எப்படி உங்கள் பிரச்சினைகளை தீர்க்கும் என்று பார்க்கலாம்.
இராமருக்கு அருள்
இராமர் விஷ்ணுவின் அவதாராமாகவே இருந்த போதிலும் மனித உருவத்தில் இருந்தபோது இராவணனுக்கு எதிரான போரில் அவர் சோர்வடைவதை பார்த்த அகத்தியர் சூர்ய பகவானின் அற்புத சக்திகளை நியாபகப்படுத்தி அவரை வழிபட அறிவுறுத்தினார். சூரியபகவானுக்கு ஆதித்யர் என்ற பெயரும் உள்ளது.
பிரபஞ்சம்
இராமருக்கு முன்பு அகத்தியர் முழு பிரபஞ்சம், உயிரினங்கள், மலைகள் மற்றும் அனைத்து பொருட்களையும் வரைந்து காண்பித்தார். பிரபஞ்சத்தில் எந்தவொரு உயிரினத்தின் உயிர்வாழ்விற்கும் சூரியனின் ஆற்றல் இன்றியமையாதது என்று அவர் ராமரிடம் கூறினார்.
இருளை நீக்கும்
இந்த ஆதித்ய ஸ்தோத்திரத்தில் சூரிய பகவான் பல வடிவங்களில் உருவகப்படுத்தப்படுகிறார். தீமைகளை அழிப்பவர், அனைத்து தாவரங்களுக்கும், மனிதர்களுக்கும், மிருகங்களுக்கும் வாழ்வதற்கு தேவையான ஆற்றலை வழங்குபவர் என கூறப்படுகிறார்.
MOST READ: எடையை நினைத்ததை விட வேகமாக குறைக்க இந்த ஜூஸை தினமும் குடித்தால் போதுமாம்...!
அறியாமை
இந்த ஸ்தோத்திரத்தின் படி நமக்குள் இருக்கும் இருள்தான் நம்மை வஞ்சகத்திற்கும், கோபத்திற்கும் ஆளாக்குகிறது. அந்த இருளை போக்கிவிட்டால் நாம் வாழ்க்கையில் இருக்கும் அனைத்து பிரச்சினைகளும் தீர்ந்து விடும். இந்த இருளை போக்க சூரிய பகவானை வழிபட வேண்டும் என்று அகத்தியர் கூறுகிறார்.
ஒற்றை வடிவம்
அகத்தியர் இராமரிடம் சூரிய பகவான் அனைத்து முக்கிய கடவுள்களின் ஒற்றை வடிவமாகவும், பிரதிநிதியாகவும் இருக்கிறார். வெற்றிக்காக எந்த கடவுளை வணங்க வேண்டும் என்று குழப்பத்தில் இருந்த இராமருக்கு அகத்தியர் சூரியனை வழிபட வேண்டும் என்று கூறினார். சூரியனை வழிபடுவது நமது வாழ்க்கையில் இருக்கும் அனைத்து துன்பங்களையும் நீக்கும் என்று அகத்தியர் கூறுகிறார்.
தெரிந்த கடவுள்
சூரிய பகவான் அனைவரின் கண்களுக்கும் தெரிந்த கடவுளாக இருக்கிறார். அனைத்து பரிமாணங்களின் ஒருங்கிணைந்த கடவுளாக இருப்பதால் சூரிய பகவானை வழிபடுவது அனைத்து கடவுள்களையும் வணங்குவதற்கு சமமாகும்.
சூரியனிடமிருந்து என்ன கற்றுக்கொள்ளலாம்?
இன்றைய உலகில் அனைவரும் நேரமின்றி விரைந்து கொண்டிருக்கிறோம். அமைதியாக அமர்ந்து நம்மை பற்றி சிந்தித்து மூச்சு விடுவதற்கு கூட யாருக்கும் நேரமில்லை. நமக்கான முக்கியத்துவத்தை நாமே இழந்து கொண்டு இருக்கிறோம். இந்த சூழ்நிலையில் பன்முகத்தன்மை கொண்ட சூரியனிடம் இருந்து பலவற்றை கற்றுக்கொள்ளலாம். குறிப்பாக ஒருங்கிணைப்பு மற்றும் கடமைகளை அர்ப்பணிப்புடன் செய்வது எப்படி என்று சூரியனிடம் இருந்து கற்றுக்கொள்ளலாம்.
ஒழுங்கமைப்பு
இந்த ஆதித்ய ஹிருதய ஸ்தோத்திரம் கூறுவது உங்களின் உள் அமைப்பை ஒழுங்கமைப்பதோடு, உங்களுள் அமைதியையும், நேர்மறை ஆற்றலையும் அதிகரிக்கிறது.
இராமரின் வெற்றி
அகத்தியர் கூறிய இந்த ஸ்தோத்திரத்தை கேட்ட பிறகு இராமர் புது ஆற்றலால் தூண்டப்பட்டு இராவணனுடன் போர் புரிந்தார். மேலும் சூரிய பகவான் தனது அருள் மூலம் இராமருக்கு வெற்றி கிடைக்குமென ஆசீர்வதித்தார்.
MOST READ: இந்த ராசிக்காரர்கள் அடிக்கடி தர்மசங்கடத்திற்கும், அவமானத்திற்கும் ஆளாவார்கள்...!
குணப்படுத்தும் பண்புகள்
மனிதர்களை பொறுத்தவரை சூரியனின் ஒளிக்கதிர்கள் பல நோய்களை குணப்படுத்துகிறது. குறிப்பாக கண்கள் மற்றும் சருமத்திற்க்கு இது பல நன்மைகளை வழங்குகிறது. மேலும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இந்து மதத்தில் சூரியபகவான் ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சியின் கடவுளாக உருவப்படுத்தப்படுகிறார்.