Just In
- 24 min ago வெயில் காலத்தில் உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்க தினமும் எத்தனை கிளாஸ் தண்ணீர் குடிக்கணும் தெரியுமா?
- 1 hr ago 1 கப் பச்சரிசி மாவு வெச்சு.. இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ஒரு வாரத்துக்கு ஸ்நாக்ஸ் பிரச்சனையே வராது..
- 2 hrs ago கர்ப்ப காலத்தில் பதட்டப்படும் பெண்களுக்கான டிப்ஸ்..!
- 2 hrs ago இந்தியாவில் இன்றும் ராஜவாழ்க்கை வாழும் அரச குடும்பங்கள்..இவங்களுக்கு எங்க இருந்து இவ்வளவு பணம் வருது தெரியுமா?
Don't Miss
- Finance விப்ரோ லாபத்தில் 8% வீழ்ச்சி.. ஷாக் கொடுத்த மார்ச் காலாண்டு முடிவுகள்..!!
- News சிவப்பு நிறத்திலிருந்து "காவி"க்கு தாவிய DD.. எதிலும் காவி, இதிலேயுமே? தூர்தர்ஷனுக்கு என்னதான் ஆச்சு
- Automobiles விமானம் தரையிறங்கும் முன் எரிபொருளை விமானிகள் வேண்டுமென்றே திறந்துவிடுவார்கள்.. நாடுவானில் ஏன் இத செய்யுறாங்க?
- Movies மீண்டும் தள்ளிப்போன அரண்மனை 4.. விஷாலின் அந்த குற்றச்சாட்டு தான் காரணமா?.. இப்படி ஆகிடுச்சே!
- Technology ஏப்ரல் 24 உறுதி.. ரூ.12000 போதும்.. 45W சார்ஜிங்.. 256ஜிபி மெமரி.. Flat டிஸ்பிளே.. எந்த போன்?
- Sports ஹர்திக் பாண்டியா கதையை முடிக்கப் போகும் தோனி - ருதுராஜ்.. சிஎஸ்கே அணியில் என்ன நடக்கிறது?
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஜாக்கிரதையா வாங்குங்க... இறால்ல ஜெலட்டின் ஊசிபோட்டு விக்கறாங்களாம்...
சீன விற்பனையாளர்கள் இறாலில் ஜெலட்டின் ஊசி போட்டு விற்பது கண்டுபிடிக்கப்பட்டது பற்றி தான் இந்த கட்டுரை உங்களுக்கு விளக்கமாகக் கொடுக்கப்பட்டுள்ளது. அது பற்றிய விளக்கமான தொகுப்பு தான் இது.
ஆர்கானிக் உணவுகளை சாப்பிட வேண்டும் என்ற ஆர்வம் மக்கள் மத்தியில் ஒரு புறம் பரவி வருகிறது. மறுபுறம் விற்பனையாளர்கள் மக்களை ஏதாவது ஒரு ரூபத்தில் ஏமாற்றிக் கொண்டே இருக்கிறார்கள். இது போல் ஒரு வழக்கு தற்போது சீனாவில் நடந்துள்ளது.
இறால் வாங்கவரும் வாடிக்கையாளர்களுக்கு ஆரோக்கியமாகவும் சாறு நிறைந்ததாகவும் இறால் காணப்பட வேண்டும் என்று நினைத்து இந்த ஏமாற்று வேலை நிகழ்ந்துள்ளது. இறாலை நன்றாக கவனித்துப் பார்த்தால் அதில் ஜெலட்டின் உட்செலுத்தப்பட்டது தெரிய வருகிறது. இதனைப் பற்றி மேலும் தெரிந்துக் கொள்ள இந்த பதிவைப் படியுங்கள்.
பெண் புத்திசாலி
இறாலில் ஜெலட்டின் நிரப்பப்பட்டிருப்பதை ஒரு பெண் கண்டுபிடித்தார். ஒரு பெண் கடையில் இருந்து புதிதாக வாங்கி வந்தார். வீட்டிற்கு வந்ததும் வாங்கி வந்த இறாலை உரிக்கத் தொடங்கினார் .அந்தப் பெரிய இறாலின் தலையை உரிக்கும்போது அதில் ஜெலட்டின் நிரம்பி இருப்பதைக் கண்டு அதிர்ந்துவிட்டார்.
MOST READ: பரம்பரை குண்டா நீங்க? அத எப்படி வேகமா குறைக்கலாம் தெரியுமா?
இது முதல் முறை அல்ல
இறாலில் ஜெல்லி போன்ற ஒரு கூறு காணப்படுவது சீனாவில் முதல்முறை அல்ல என்று பல அறிக்கைகள் கூறுகின்றன. குறிப்பாக 2012ம் ஆண்டு முதல் சீனாவின் பல்வேறு இடங்களில் இறாலில் இது போன்ற ஒரு கூறு காணப்படுவதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
என்ன காரணம்?
பல்வேறு காரணங்களுக்காக இறாலில் ஜெலட்டின் உட்செலுத்தப்படுகிறது. இறாலை உலர்த்தி, காய வைத்து, பனி நீக்கம் செய்து, பிறகு அவை ஆரோக்கியமாகவும் புஷ்டியாகவும் காணப்படுவதற்காக வியாபாரிகள் இறாலுக்குள் ஜெலட்டினை ஊசி மூலம் உட்செலுத்துகின்றனர்.
இதனால் இறால் முன்பை விட புஷ்டியாக, ஆரோக்கியமாக வளமாக காணப்படுகிறது. மேலும் இப்படி ஜெலட்டின் உட்செலுத்தப்ட்ட இறால்கள் முன்பை விட 20 முதல் 30 சதவிகிதம் கூடுதல் எடையுடன் விளங்குகிறது. இதனால் வியாபாரிகளுக்கு கூடுதல் லாபம் கிடைக்கிறது.
ஒரே பயம்
இந்த வகை ஜெலட்டின் நிரப்பப்பட்ட இறால்கள் மனிதர்கள் உண்ணக் கூடியதாக இருக்குமா என்பது இதனை வாங்கி உண்ணும் வாடிக்கையாளர்களின் சந்தேகமாக உள்ளது. இதற்குக் காரணம், மலிவான விலையில் தொழிற்சாலை பயன்பாட்டிற்காக கிடைக்கும் ஜெலட்டின் உட்கொள்வதால் தீங்கு ஏற்படும் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.
இனியும் தொடர்ந்து இதே இறால்களை வாங்கி உண்பதா அல்லது இறால் சாப்பிடும் பழக்கத்தை அறவே கைவிடுவதா என்பது வாடிக்கையாளர்களுக்கு இருக்கும் இரண்டு தீர்வுகளாகும்.
இந்த பதிவைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? உங்கள் மேலான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ள மறக்க வேண்டாம்.