Just In
- 51 min ago தக்காளி சட்னி செய்யும் போது இந்த ஒரு பொருளை மட்டும் அதிகமா சேர்த்துக்கோங்க.. டேஸ்ட் சூப்பரா இருக்கும்..
- 4 hrs ago Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- 9 hrs ago 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- 11 hrs ago தளர்ந்து போன சருமத்தை இறுக்கமாக்கி ஜொலிக்கிற மாதிரி மாத்த ஆசைப்படுறீங்களா? இந்த இயற்கை பொருட்களை யூஸ் பண்ணுங்க
Don't Miss
- Finance CHATGPT முதல் இந்திய ஊழியரை நியமித்தது.. யார் இந்த பிரக்யா மிஸ்ரா..?
- Technology ஆர்டர் பிச்சிக்கும் பாருங்க.. ரூ.10,000 போதும்.. 108MP கேமரா.. 256GB மெமரி.. வருகிறது itel போன்.. எந்த மாடல்?
- News 2019 vs 2024: 35 தொகுதிகளில் வாக்குப்பதிவு கடும் சரிவு.. 4 தொகுதிகளில் மட்டும் உயர்வு.. எங்கெங்கு?
- Movies பண்றது எல்லாமே திருட்டுத்தனம்.. கணவருடன் சேர்ந்து கொண்டு பிரபல நடிகை பார்த்த வேலை.. ஒரே அசிங்கம்?
- Sports மொத்த பேட்டிங் ஆர்டரும் மாறிப்போச்சு.. ருதுராஜ் செய்த சொதப்பல்.. சிஎஸ்கே தோல்விக்கு காரணம் என்ன?
- Automobiles பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
அலுவலகத்தில் ஏற்படும் பிரச்சினைகளை சமாளிக்க சாணக்கியர் கூறும் எளிய வழிகள் இதுதான்...!
அலுவலகத்தில் ஏற்படும் பிரச்சினைகளை சமாளிக்க சாணக்கியர் கூறும் எளிய வழிகள் இதுதான்...!
இந்தியாவின் மிகச்சிறந்த மேதைகளில் ஒருவர் சாணக்கியர் ஆவார். வாழ்க்கைக்கான தத்துவங்களில் இருந்து வெற்றிக்கான ரகசியம் வரை அனைத்தையும் நாம் சாணக்கியரின் அறிவுரைகளில் இருந்து பெறலாம். சாணக்கியரின் அர்த்தசாஸ்திரமும், சாணக்கிய நீதியும் எக்காலத்திற்கும் பொருந்த கூடியவையாகும்.
இன்றைய இளைஞர்களின் முக்கியமான பிரச்சினைகளில் ஒன்று அவர்களின் அலுவலகத்தில் சந்திக்கும் பிரச்சினைகளாகும். பெரும்பாலான இளைஞர்கள் மனஅழுத்ததிற்கு ஆளாவதற்கு காரணமே அவர்களின் அலுவலங்களில் நடக்கும் அரசியலை சமாளிக்க முடியாமல்தான். இதை எளிதாக சமாளிக்கும் வழிகளை சாணக்கியர் கூறியுள்ளார்.
நேர்மை
சாணக்கியர் எப்போதும் அதீத நேர்மையுடன் இருக்கக்கூடாது என்று கூறுவார். ஏனெனில் நேராக வளர்ந்த மரங்கள்தான் முதலில் வெட்டப்படும். எங்கு தந்திரமாக இருக்க வேண்டும் எங்கு நேர்மையாக இருக்க வேண்டும் என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.
வேலையில் செய்ய வேண்டியது
எந்தவொரு வேலையையும் தொடங்கும் முன் உங்களுக்குள் மூன்று கேள்விகளை கேட்டுக்கொள்ளுங்கள். நான் ஏன் செய்கிறேன், இதன் முடிவு என்னவாக இருக்கும், இதில் நான் வெற்றிபெறுவேனா இந்த மூன்று கேள்விகளையும் கேட்டுக்கொள்ளுங்கள். எந்த வேலைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமென்று தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் நேரத்தை ஒதுக்குவதற்கு இந்த வேலை தகுதியானதா என்று யோசித்து கொள்ளுங்கள்.
கடின உழைப்பில்
ஒரு வேலையை தொடங்கும் முன் அது தோல்வியில் முடியும் என்று நினைத்தோ அதனை பாதியில் நிறுத்தக்கூடாது. கடினமாக வேலை செய்பவர்களே மகிழ்ச்சியானவர்கள். உங்களை நீங்களே உற்சாகப்படுத்தி கொள்ளுங்கள். தினமும் உங்கள் முன்னேற்றத்தை கண்காணியுங்கள்.
ரகசியங்கள்
மிகப்பெரிய குரு மந்திரம் என்னவெனில் உங்கள் ரகசியங்களை யாருடனும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். அது உங்களை அழித்துவிடும். ஒருபோதும் வதந்திகளில் ஈடுபடாதீர்கள்.
நட்பில்
அனைத்து நட்பிற்கு பின்னாலும் ஒரு சுயநலம் கண்டிப்பாக இருக்கும். சுயநலம் இல்லாத நட்பு இருக்க வாய்ப்பில்லை. இது கசப்பான உன்மையாகும். நண்பர்களை வைத்து கொள்ளுங்கள் ஆனால் மிகவும் நெருக்கமான நண்பர்களை வைத்த கொள்ளாதீர்கள்.
பயம்
பயம் உங்களை நெருங்கும் போதே அதனை தாக்கி அழித்து விடுங்கள். கற்றுக்கொள்வதை மட்டும் எப்பொழுதும் நிறுத்தி விடாதீர்கள். ஏனெனில் உங்களை பயத்தில் இருந்து பாதுகாக்கும் ஒரே விஷயமாகும்.
போட்டி
நீங்கள் ஓடுவதற்கு முடிவு செய்யாத வரை நீங்கள் போட்டியில் இல்லை என்றுதான் அர்த்தம். நீங்கள் தோற்றாலும், கீழே விழுந்தாலும் பரவாயில்லை. முயற்சி செய்யாமல் இருப்பதற்கு கலந்து கொள்வது சிறந்தது.
MOST
READ:
ஜூலை
மாதத்தில்
பிறந்தவர்கள்
உண்மையில்
எப்படிப்பட்டவர்கள்
தெரியுமா?
தவறுகள்
மற்றவர்களின் தவறுகளிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள். உங்களின் தவறுகளில் இருந்தே அனைத்தையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைக்காதீர்கள். மக்களிடமும், சூழ்நிலைகளிடமும் கவனமாக இருங்கள்.