For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சாதியின் பெயரால் நிலத்தை அபகரிக்க நிகழ்ந்தப்பட்ட கொடூரம்!

நில உடமையாளர்களாக இருந்த மேல் சாதி மக்கள் தங்களை எதிர்த்து கேள்வி கேட்டதற்காகவும், நிலத்தை அதிகரிக்கவும் செய்த கொடூர தாக்குதல்களை பாருங்கள்

|

நம்மை ஆட்சிய செய்த நபர்கள் தங்களின் அதிகாரம் எப்போதும் நிலைத்திருக்க வேண்டும் என்பதற்காக எந்த எல்லைக்கும் செல்வார்கள் என்பதற்கான உதாரணம் தான் இது. தங்களுக்கு எதிராக குரல் கொடுப்பவர்களை எல்லாம் நசுக்கும் விதமாக இனி எங்களை எதிர்த்து யாரும் குரல் கொடுக்கக்கூடாது என்று மிரட்டுவதற்காக ஒரு மினி ராணுவத்தை உருவாக்கினார்கள்.

அவர்களின் ஒரே வேலை அதிகாரித்தில் இருக்கிறவர்களை விமர்சிப்பவர்களை எல்லாம் தேடிப்பிடித்து சுட்டுக் கொல்வது தான். அப்படி கொல்லப்போகிற இடத்தில் பெண்கள் இருந்தால் அவளை நீ என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். இப்படி ஓர் நடைமுறை இருந்தால் நம் நாட்டின் நிலையை சற்று யோசித்துப் பாருங்கள் நாடே சுடுகாடு ஆகியிருக்காது... இது ஒன்றும் கற்பனை கதையல்ல உண்மையிலேயே நடந்த சம்பவம்.

இப்படி தங்களுக்கு கீழே கூலியாய் வேலை பார்க்கும் மக்களை கொல்வதற்கு என்றே மேல் சாதியினர் ஒரு அமைப்பை உருவாக்கியிருந்தார்கள். பீகாரில் இந்த வன்முறை தொடர்ந்து பல ஆண்டுகளாக நடந்திருக்கிறது இதில் ஏராளமான மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள், பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாகியிருக்கிறார்கள்.

மேல் சாதியினரால் அமைக்கப்பட்ட ரன்வீர் சேனா என்ற இந்த கொலை செய்யும் அமைப்பிற்கு அரசாங்கம் தடை விதித்திருக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

பிஹாரின் கிழக்குப் பகுதியில் சுமார் எண்பத்தாறு கோடி மக்கள் வசிக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் படிப்பறிவு இல்லாதவர்கள் நிலம் இல்லாதவர்கள். மேல் சாதியினரிடம் கூலியாக வேலைப் பார்க்கிறவர்கள்.

தங்களை விட கீழ் சாதி, பணமில்லை, அதிகாரமில்லை என்றதும் அவர்களுக்கு நடக்கிற அநீதிகளைப் பற்றி சொல்லவும் வேண்டுமா என்ன?

Image Courtesy

#2

#2

இந்த மக்களுக்கு ஆதரவாக நக்சலைட்டுகள் களமிறங்கினார்கள். உழைப்புக்கு ஏற்ற கூலியை பெற்றுத்தருவது, கடன் என்று சொல்லி குழந்தைகளை அடிமையாய் பிடித்துச் செல்வதை தடுப்பது ஆகியவற்றை செய்வதுடன் மேல்சாதியினரின் அடக்குமுறையை எதிர்த்து கேள்வி கேட்கவும் செய்தார்கள் நக்சலைட்டுகள்.

Image Courtesy

#3

#3

சுதந்திரம் பெற்றது முதல் வருமானத்திலும் சரி, உற்பத்தி துறையிலும் சரி பீஹார் மாநிலம் சற்றும் பின்தங்கி தான் இருக்கிறது. இங்கே தான் நிலமிருக்கிற ஜமீன் குறைந்த அளவும் நிலமில்லாத மக்கள் அதிகளவிலும் வசித்தார்கள். அதோடு இந்த மக்கள் வேறு வழியின்றி தங்களின் மேல் சாதியினரின் வயல்களில் கூலி வேலைக்கு அடிமையாய் செல்ல ஆரம்பித்தார்கள்.

Image Courtesy

#4

#4

கூலி வேலை என்றதும் நாளெல்லாம் உழைக்க, மாலையில் வீடு திரும்புகையில் கையில் காசு கொடுத்து அனுப்பும் வேலையெல்லாம் அங்கு கிடையாது. நாளெல்லாம் உழைக்க வேண்டும் கடைசியாக உங்களுக்கு இரண்டு கிலோ அரிசி வழங்குவார்கள்.

அதை சமைத்து சாப்பிட பாத்திரம், விறகு, அடுப்பு, போன்ற எதுவும் இல்லாத போது என்ன செய்ய முடியும். பல நேரங்களில் அந்த அரிசியை தண்ணீரில் ஊற வைத்து அப்படியே சாப்பிடுவார்களாம் அந்த மக்கள்.

Image Courtesy

#5

#5

ஆரம்ப காலங்களில் பல கொடுமைகளை சந்தித்த அந்த மக்கள் தங்கள் உழைப்புக்கு ஏற்ப கூலி கொடுக்க வேண்டும் என்று குரல் கொடுக்க ஆரம்பித்தார்கள். இந்த நேரத்தில் தான் நக்சலைட்களும் நில உடைமையாளர்களுக்கு எதிராகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாகவும் நின்றார்கள்.

இவர்களிடமிருந்து தங்களை பாதுகாத்து கொள்ள மேல்சாதியில் இருக்கக்கூடிய நில உடைமையாளர்கள் தனி படைப்பிரிவை உருவாக்குகிறார்கள்.

Image Courtesy

#6

#6

ரன்வீர் சேனா என்று அழைக்கப்பட்ட இந்த படைப்பிரிவினரின் ஒரே வேலை கீழ் சாதியில் இருக்கிற மக்களை கொல்ல வேண்டும், மேல் சாதியினருக்கு எதிராக குரல் கொடுக்கிற நக்சலைட்டுகளையும் சுட்டு வீழ்த்த வேண்டும் என்பது தான். 90களின் ஆரம்பத்தில் இந்த படை உருவாக்கப்பட்டது.

காரணமேயின்றி சாதி பெயரை வைத்துக் கொண்டு மட்டும் படுகொலைகள் நடந்தது.

Image Courtesy

#7

#7

பெரும்பாலும் இந்த ரன்வீர் சேனா படை இரவு நேரத்தில் தான் வீட்டிற்குள் நுழைவார்கள். நாம் எழுந்து சுதாரிப்பதற்குள் ஒட்டுமொத்த பேரையும் கொன்றிருப்பார்கள். சில நேரங்கள் வீட்டிற்குள் எல்லாம் வருவதில்லை உள்ளே கீழ் சாதியினர் இருக்கிறார்கள் என்று உறுதி செய்து கொண்டால் அந்த வீட்டிற்கு நெருப்பு வைத்து விட்டு சென்று விடுவார்கள்.

அந்த வீட்டில் பெண்கள் இருந்தால் அவர்கள் கண்டிப்பாக ரன்வீர் சேனா படையினரின் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக நேர்ந்தது.

Image Courtesy

#8

#8

அப்போதிருந்த அதிகார வர்கம் முழுவதும் இந்த ரன்வீர் சேனாவிற்கு ஆதரவு தெரிவித்ததால் இவர்களின் ஆட்டம் கொஞ்சம் நஞ்சமில்லை வன்முறையை நிகழ்த்திவிட்டு எங்களது ரன்வீர் சேனா இதை செய்து முடித்தது என்று பெருமையாக பேசிக் கொண்டார்கள் மேல் சாதியினார். அடுத்ததாக இந்த கிராமத்திற்கு தாக்குதல் நடத்தப்போகிறோம் என்ற முன்னறிவிப்பு செய்து தாக்குதல் நடத்திய அநியாயங்களும் நடந்திருக்கிறது.

Image Courtesy

#9

#9

மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய போலீசும் இதற்கு உடந்தையாக இருந்திருக்கிறது. அதிகமான மக்கள் கொல்லப்படும் போது மட்டும் கிராமத்தில் தேடுதல் வேட்டை பெயரளவில் நடத்திவிட்டு கிளம்பிச் சென்றுவிடுவார்களாம். அதோடு இந்த சம்பவத்தை நிகழ்த்தியது நக்சலைட்டு தான் என்று சொல்லி அவர்களை கைது செய்து அழைத்துச் செல்வதும் வாடிக்கையாய் இருக்கிறது.

போலீஸ் என்கவுண்டரிலும் பலர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

Image Courtesy

#10

#10

பிஹாரில் கிட்டத்தட்ட பதினான்கு சதவீத மக்கள் கீழ் சாதியினராக அடையாளப்படுத்தப்படுகிறார்கள். மேல் சாதியினராக பார்ப்பவர்கள், புமினிஹார்ஸ், ராஜபுத்திரர்கள், மற்றும் சத்தியர்கள் ஆகியோர் இருக்கிறார்கள். இடைநிலை சாதியாக நூறுக்கும் மேற்பட்ட சாதிகள் இருக்கிறது அவற்றில் முக்கியமானதாக பார்க்கப்படுவது யாதவா மற்றும் குர்மீஸ் எனப்படுகிற இரண்டு சாதிகள் தான்.

96 மற்றும் 97 ஆண்டுகளில் பிஹார் மாநில முதல்வராக இருந்தவர் லாலு பிரசாத் யாதவ்.இவருக்கு மேல் சாதியினர்களிடமிருந்து பயங்கர எதிர்ப்பு இருந்தது.

Image Courtesy

#11

#11

1960களில் இருந்தே மேல் சாதியினர் ஒவ்வொருவரும் தங்கள் சாதிக்காக என்று சொல்லி ஒர் படையை உருவாக்கிக் கொண்டார்கள் அப்போது அவர்கள் சொன்ன காரணம் மேல் சாதியினரை எதிர்க்கும் நக்சல்களிடமிருந்து எங்களை பாதுகாத்துக் கொள்ள என்று சொன்னார்கள்.

ராஜபுத்திரர்கள் 1969 ஆம் ஆண்டு குர் சேனா என்ற படையை தோற்றுவித்தார்கள். புமிஹார்ஸ் ப்ரம்மரிஷி சேனா என்ற படையை தங்களுக்காக உருவாக்கினார்கள். இது தவிர சமாஜ்வாதி க்ரண்டிகரி சேனா, டைமண்ட் சேனா,சூரிய ஒளி சேனா என ஏகப்பட்ட படைப்பிரிவுகள் இருந்தன.

Image Courtesy

#12

#12

மேல் சாதியினரைப் போல இடைநிலையில் இருந்த சாதியும் தங்களுக்கு என்று ஒரு படையை உருவாக்கிக் கொள்ள ஆரம்பித்தது. இந்த படை எங்களுடைய பாதுகாப்பிற்காக என்று சொல்லிக் கொண்டார்கள். குர்மீஸ் சாதியினர் தங்களுக்காக உருவாக்கிக் கொண்ட படையின் பெயர் பூமி சேனா. யாதவர்கள் லோரிக் சேனா என்ற படையை உருவாக்கினார்கள்.

இடைநிலை சாதியில் இருக்கிற நில உடைமையாளர்கள் எல்லாரும் சேர்ந்து கிஷன் சங்க என்ற ஓர் படையை உருவாக்கியிருந்தார்கள். இப்படி ஏராளமான சாதிகளும் தங்கள் சாதியை காப்பாற்றிக் கொள்ள பாதுகாக்க ஒரு படையும் என கிடந்தார்கள்.

Image Courtesy

#13

#13

இந்த ரன்வீர் சேனா நடத்திய கொடூர தாக்குதல்களில் பெரும் பதற்றத்தையும் இவர்களின் அட்டூழியத்தை வெளியுலகத்திற்கு தெரிய வந்தது 1997 ஆம் ஆண்டு லக்‌ஷ்மன்பூர்மற்றும் பதே என்ற கிராமத்தில் நடந்த தாக்குதல் தான்.

ஆற்றங்கரையோரமாக குடிசைகளில் வாழ்ந்து வந்த 180 குடும்பங்களை இந்த ரன்வீர் சேனா சுற்றி வளைத்தது. 61 பேரை கொன்று குவித்தார்கள் ஏராளமானோர் காயமடைந்தார்கள். சில குடும்பங்களில் மூன்று தலைமுறையும் இறந்து கிடந்தது. இந்த தாக்குதலில் பலியானது பெரும்பாலும் பெண்களும் குழந்தைகளும் தான்.

Image Courtesy

#14

#14

இந்த லக்‌ஷமன்பூர்-பதே ஆகிய கிராமங்களுக்கு செல்ல சரியான சாலை வசதி கூட கிடையாதாம். படகு மூலமாக ஆற்றைக்கடந்து தான் இந்த மக்கள் வசிக்கிற பகுதிக்கு செல்ல வேண்டும். அவ்வளவு இண்டீரியராக வாழ்கிற மக்களைத் தேடி ரன்வீர் சேனா செல்லக் காரணம் அங்கே அந்த மக்களுக்கு சொந்தமான ஐம்பது ஏக்கர் நிலம் இருந்தது. அதை கையகப்படுத்தவே இந்த தாக்குதலை நடத்தியிருக்கிறார்கள் புமினிஹார்ஸ் சாதியினர்.

அவர்கள் எப்போதும் கூட்டமாக வீட்டிற்குள் நுழைவார்கள் நாம் சுதாகரிப்பத்ற்குள் சுட்டுக் கொன்றுவிட்டு சென்றுவிடுவார்கள் அது தான் அவர்களின் பாணியாய் இருந்திருக்கிறது.

Image Courtesy

#15

#15

இந்த விவகாரம் வெளியே கசிந்து மனித உரிமை போராளிகள் இந்த கிராமத்திற்கு சென்றனர். இந்த தாக்குதலில் உயிர்பிழைத்த மக்களிடம் அவர்கள் விசாரணை நடத்தினார்கள்.ரன்வீர் சேனா தாக்குதலிருந்து உயிர் பிழைத்த கதைகள் ஒவ்வொன்றும் அவ்வளவு பதைபதைப்பாக இருந்தது.

அந்த கிராமத்தில் நான்கும் மேற்பட்ட பதினைந்து வயதுக்கு மேற்பட்ட சிறுமிகள் கொல்லப்பட்டார்கள். நான்கு பேருமே பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியிருந்தார்கள். அந்த குழந்தைகள் நிர்வாணமாகவும் மார்பு அறுக்கப்பட்டு கிடந்தார்கள். அதில் ஒரு சிறுமியின் பிறப்புறுப்பில் சுட்டு கொன்றிருந்தார்கள்.

இது ஒரு கிராமத்தின் கதை. இப்படி ஏராளமான கிராமங்கள் ஒவ்வொரு கிராமத்திலும் பல முறை இப்படியான வன்கொடுமைகள் நடந்திருக்கிறது. உயிர் பலி மட்டுமல்ல வரும் போதெல்லாம் அந்த மக்களின் உடைமைகளை அபகரித்துச் செல்வதையும் வழக்கமாக வைத்திருந்திருக்கிறார்கள். அவர்களின் வாழ்வாதாரமாக விளங்கிய ஆடு, மாடுகளை அவிழ்த்துச் சென்றுவிடுவார்களாம்.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: insync pulse
English summary

Upper Caste People Killed Others Brutally for Their Land

Upper Caste People Killed Others Brutally for Their Land
Story first published: Monday, June 18, 2018, 15:58 [IST]
Desktop Bottom Promotion