Just In
- 19 min ago வெயில் காலத்தில் உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்க தினமும் எத்தனை கிளாஸ் தண்ணீர் குடிக்கணும் தெரியுமா?
- 1 hr ago 1 கப் பச்சரிசி மாவு வெச்சு.. இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ஒரு வாரத்துக்கு ஸ்நாக்ஸ் பிரச்சனையே வராது..
- 2 hrs ago கர்ப்ப காலத்தில் பதட்டப்படும் பெண்களுக்கான டிப்ஸ்..!
- 2 hrs ago இந்தியாவில் இன்றும் ராஜவாழ்க்கை வாழும் அரச குடும்பங்கள்..இவங்களுக்கு எங்க இருந்து இவ்வளவு பணம் வருது தெரியுமா?
Don't Miss
- Finance விப்ரோ லாபத்தில் 8% வீழ்ச்சி.. ஷாக் கொடுத்த மார்ச் காலாண்டு முடிவுகள்..!!
- News சிவப்பு நிறத்திலிருந்து "காவி"க்கு தாவிய DD.. எதிலும் காவி, இதிலேயுமே? தூர்தர்ஷனுக்கு என்னதான் ஆச்சு
- Automobiles விமானம் தரையிறங்கும் முன் எரிபொருளை விமானிகள் வேண்டுமென்றே திறந்துவிடுவார்கள்.. நாடுவானில் ஏன் இத செய்யுறாங்க?
- Movies மீண்டும் தள்ளிப்போன அரண்மனை 4.. விஷாலின் அந்த குற்றச்சாட்டு தான் காரணமா?.. இப்படி ஆகிடுச்சே!
- Technology ஏப்ரல் 24 உறுதி.. ரூ.12000 போதும்.. 45W சார்ஜிங்.. 256ஜிபி மெமரி.. Flat டிஸ்பிளே.. எந்த போன்?
- Sports ஹர்திக் பாண்டியா கதையை முடிக்கப் போகும் தோனி - ருதுராஜ்.. சிஎஸ்கே அணியில் என்ன நடக்கிறது?
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஸ்ரீதேவியின் நிறைவேறாத ஆசை ஒன்னு இருக்கு... அது என்னன்னு தெரியுமா?...
நடிகை ஸ்ரீதேவியின் யாரும் எதிர்பாறாமல் திடீரென மரணித்து விட்ட நிலையில் அவருடைய கணவர் போனி கபூர் மனம்திறந்து கடிதம் எழுதியுள்ளார். அதில் ஸ்ரீதேவியின் குடும்ப அக்கறை குறித்தும் மகள்கள் மீதானஅன்பும் குறி
Recommended Video
ஸ்ரீதேவி தான் இந்தியத் திரையுலகின் முதல் பெண் சூப்பர் ஸ்டார் என்று தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடப்பட்டவர். பெண் பார்க்க சென்றால் கூட பெண் ஸ்ரீதேவி மாதிரி இருக்க வேண்டும் என்பதே அந்த காலகட்டங்களில் பேச்சாக இருந்தது. அப்படிப்பட்ட ஸ்ரீதேவியின் அழகைப் பார்த்து மயங்காத ஆண்கள் மட்டுமல்ல, பெண்களையும் கிடையாது என்றுதான் சொல்ல வேண்டும்.
16வயதினிலே மயில்
80 களில் மயில் என்ற பெயரை உச்சரிக்காத இளசுகளே இருந்திருக்க முடியாது. ஏறக்குறைய எல்லோருடைய கனவு நாயகியாகவும் ஸ்ரீதேவி இருந்திருப்பார். ஆனால் அதே ஸ்ரீதேவி மூக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்ட பின்னர், அவரை திட்டித் தீர்க்காத ஆளே இல்லையென்று தான் சொல்ல வேண்டும்.
அறுவை சிகிச்சை
மூக்கு அறுவை சிகிச்சைக்குப் பின் அவருடைய முக அமைப்பு வடஇந்திய முக அமைப்போடு ஒத்துப்போய், தமிழக கிராமத்து கலையை இழந்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.
திடீர் மரணம்
அதற்குப் பிறகு தமிழ் ரசிகர்கள் ஸ்ரீதேவியை கொஞ்சம் மறந்துதான் போனார்கள். ஆனால் கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி துபாயில் தங்கியிருந்த ஹோட்டலிலேயே கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இறந்துபோனார்.
பிரேத பரிசோதனை
இதைக்கேட்ட இந்திய ரசிகர்கள் தங்களின் மனக்குமுறலை சமூக வலைத்தளங்களில் எழுதித் தீர்த்தனர். ஆனால் அடுத்த நாளே ஸ்ரீதேவி குளியலறைத் தொட்டியில் விழுந்து இறந்தார், மது அருந்தி இறந்தார் என பல சர்ச்சைகள்கிளம்பின. அதற்கேற்றாற் போல அவருடைய பிரேதப் பரிசோதனை முடிவும் அந்த மரணம் கார்டியாக் அரெஸ்ட் இல்லை என்று சொன்னது.
மரணம் குறித்த சர்ச்சை
அதுவரையிலும் துக்க செய்தியாக இருந்த ஸ்ரீதேவியின் மரணம் சர்ச்சைக்குரிய மரணமாக மாறிவிட்டது. ஒட்டுமொத்த ஊடகங்களும் சிரியாவையும் ஜெயேந்திரர் மரணத்தையும் மறந்துவிட்டு, ஸ்ரீதேவியின் மரணம் குறித்த டெமோ போட ஆரம்பித்துவிட்டது.
சமூகவலைத்தள காட்டம்
இப்படி ஊடகங்கள் தங்களுடைய டீஆர்பிக்காக செய்யும் விஷயங்களை சமூக வலைத்தளங்களில் காட்டமாக விமர்சனங்கள் வைக்கப்பட்டன. இரண்டு நாட்கள் இந்த பரபரப்பு
ஓடிக்கொண்டிருந்தது.
குடும்ப வாழ்க்கை
சிவகாசி அனுப்பன்குளத்தில் 1963 ஆம் பிறந்த இவர் 1996 இல் இந்தி திரைப்படத் தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து கொண்டனர். அந்த சமயத்தில் இருவருக்கும் மிக பெரிய அளவில் வயது வேறுபாடு இருந்தது பெரும் பரபரப்பை இந்தியத் திரையுலகில் ஏற்படுத்தியது.
மகள்கள்
ஸ்ரீதேவிக்கு தன்னைப் போலவே இரண்டு அழகான மகள்கள் இருக்கிறார்கள். அவர்களுடைய பெயர் ஜான்வி மற்றும் குஷி.
குழந்தை நட்சத்திரம்
தன்னுடைய நான்காவது வயதிலேயே தமிழ் சினிமாவில் நுழைந்தார். துணைவன் என்னும் படத்தில் குழந்தை நட்சத்திரமாக முருகன் வேடத்தில் அறிமுகமானார். அதன்பின் நிறைய தமிழ், மலையாளப் படங்களில் முதல்படம் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். கேரள அரசின் சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான விருதும் பெற்றிருக்கிறார்.
மொத்த படங்கள்
இதுவரையிலும் ஸ்ரீதேவி மொத்தம் 300 படங்களில் நடித்திருக்கிறார்.
முதல் படம்
ஸ்ரீதேவி கதாநாயகியாக அறிமுகமானது கே.பாலச்சந்திரனின் மூன்று முடிச்சு படத்தில்தான். அதன்பின் பல நெஞ்சையள்ளும் கதாபாத்திரங்களில் நடித்துவிட்டார்.
கடைசிப்படம்
ஸ்ரீதேவி நீண்ட இடைவேளைக்குப் பின் சில வருடங்களாக மீண்டும் ஹிந்தி படங்களில் நடித்து வந்தார். அவருடைய 300 வது படமும் ஹிந்தி படம் தான். அந்த படத்தின் பெயர் மம்.
பத்மஸ்ரீ
ஸ்ரீதேவியின் திரையுலகப் பணியைப் பாராட்டி கடந்த 2013 ஆம் ஆண்டு அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
நிறைவேறாத ஆசை
எல்லோரையும் போல இவருக்கும் தன்னுடைய குழந்தைகள் மீதான பல ஆசைகளும் எதிர்பார்ப்புகளும் இருந்தது. அதில் தன்னுடைய மகள் ஜான்வி கதாநாயகியாக அறிமுகமாகி நடித்திருக்கும் தடாக் திரைப்படம் வருகிற ஜூலை மாதம் 20 ஆம் தேதி ரிலீஸ் செய்யப்படவிருக்கிறது. தான் நீண்ட நாள் ஆசையாக எதிர்பார்த்துக் காத்திருந்த தன்னுடைய மகளின் திரைப்படத்தை பார்க்க முடியாத நிறைவேறாத ஆசையோடு அவர் இநத மண்ணைவிட்டு பிரிந்து சென்றுவிட்டார்.
அரசு மரியாதை
அவருடைய ஆசை நிறைவேறாவிட்டாலும் இந்திய அரசு ஒரு சிறந்த கலைஞருக்கு கொடுக்க வேண்டிய மரியாதையைக் கொடுக்கத் தவறவில்லை. பிப்ரவரி 28 ஆம் தேதி வில்லே பார்லே மைதானத்தில் உடலில் தேசியக்கொடி போர்த்தப்பட்டு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டன.