Just In
- 1 hr ago வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- 3 hrs ago மணமணக்கும்.. ருசியான... கையேந்தி பவன் பரோட்டா சால்னாவை எப்படி செய்யணும் தெரியுமா?
- 4 hrs ago இந்த படத்துல உங்களுக்கு எது முதல்ல தெரியுதுன்னு சொல்லுங்க.. உங்கள பத்தின ரகசியத்தை சொல்றோம்..
- 6 hrs ago உங்களுக்கு இந்த அறிகுறிகள் அதிகம் தெரியுதா? அப்ப உடம்புல தண்ணீர் ரொம்ப கம்மியா இருக்கு-ன்னு அர்த்தம்... உஷார்.
Don't Miss
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Movies Actor Vijay: ஐ லவ் விஜய்.. கில்லி படத்தின் ரீ ரிலீசை கொண்டாடும் சீன ரசிகர்!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ஒரே நாளில் 27 பெண்களை திருமணம் செய்துகொண்ட ஆண்...
பங்குனி என்பது தமிழ் மாதங்களில் கடைசி மாதம். அந்த மாதத்தில் வருகிற பௌர்ணமியன்று உத்திர நட்சத்திரமும் சேர்ந்து வரும். அதை மிக விமரிசையாக மக்கள் கொண்டாடுவார்கள்.
பங்குனி என்பது தமிழ் மாதங்களில் கடைசி மாதம். அந்த மாதத்தில் வருகிற பௌர்ணமியன்று உத்திர நட்சத்திரமும் சேர்ந்து வரும். அதை மிக விமரிசையாக மக்கள் கொண்டாடுவார்கள். குறிப்பாக, உலகத்தில் உள்ள எல்லா முருகன் கோவில்களிலும் மக்கள் கூட்டம் கூட்டமாகச் சென்று வழிபாடு நடத்துவார்கள்.
இந்த நாளில் விரதம் இருந்தால் வாழ்க்கை இனிமையாக இருக்குமாம். பங்குனி உத்திர விரதத்துக்கு கல்யாண விரதம் என்றே மற்றொரு பெயரும் இருக்கிறதாம். சரி அப்படி ஒரு புனித நாளில் யார்தான் இப்படியொரு திருமணத்தை செய்து கொண்டது என்று தானே கேட்கிறீர்கள்.
பங்குனி உத்திரம்
தமிழ் மாதத்தின் 12 ஆம் மாதமான பங்குனியில் 12ஆம் நட்சத்திரமான உத்திரம் இணைகிற முழு நிலா நாளான பௌர்ணமியைத் தான் நாம் பங்குனி உத்திரம் என்று சொல்கிறோம். அந்த பங்குனி உத்திரத்தின் போது மக்கள் முருகன் கோவிலில் குவிவது நமக்குத் தெரியும். அதனால் இது வெறுமனே முருகனுக்கு மட்டும் உகந்த நாள் என்று நினைத்துவிடாதீர்கள்.
பங்குனி உத்திர விரதப்பலன்
வளமான பலன்களை அள்ளித் தரக்கூடிய விரதங்களுள் பங்குனி உத்திர விரதமும் ஒன்று. இந்த விரதத்துக்கு கல்யாண விரதம், திருமண விரதம் என்று பல பெயர்கள் இருக்கின்றன. சிவன் பார்வதியை பங்குனி உத்திரத்தன்று அவருக்கு காட்சி தந்து திருமணம் செய்து கொண்டாராம். அதுபோல பங்குனி உத்தரத்தன்று விரதம் இருக்கும் பெண்களுக்கு சிவனைப் போன்ற மணமகன் கிடைப்பார் என்பது ஐதீகம். இந்த நாளில் ஓம்சிவாயநம, ஓம் பராசக்தி நம என்ற நாமத்தை 108 முறை ஜெபிக்க வேண்டும். மதியம் ஒரு வேளை உணவு உண்ணலாம். காலையும் இரவும் பால். பழம் சாப்பிடலாம்.
சூரியனும் சந்திரனும்
உத்திர நட்சத்திரத்தின் அதிபதி, அந்த நட்சத்திரத்துக்கு நாயகனாக இருப்பது சூரியன். அந்த நாளில் சந்திரனும் முழு நிலவாக இணைவது மேலும் அதிக பலன்களைத் தரும். இப்படி சூரியனும் சந்திரனும் இணையும் பங்குனி உத்திர நாளில் விரதம் இருந்தால் கிடைக்கும் பலன்கள் இரட்டிப்பாகக் கிடைக்கும்.
ஐய்யப்பன் பிறந்த நாள்
சாஸ்தாவின் அவதாரமாகத் திகழ்கிற ஐய்யப்பன் சபரிமலையில் கோயில் கொண்டிருக்கிறார். மாத பூஜை தவிர கோயில் நடை திறக்கும் முக்கிய நாட்களுள் பங்குனி உத்தரமும் ஒன்று. இதற்கு இன்னொரு முக்கிய காரணமும் இருக்கிறது. இந்த பங்குனி உத்திரத்தன்று தான் ஐய்யப்பன் பிறந்த நாளாம்.
ஸ்ரீராமர்- சீதா தேவி கல்யாணம்
பெண்களிடம் யாரைப் போல் கணவர் வேண்டுமென்றால் ராமனைப் போல என்று சொல்லக் கேட்டிருப்போம். அத்தகைய ராமபிரான் சீதையை மணந்தது இந்த பங்குனி உத்திரத்தன்று தான். அதனால் தான் இந்த நாளில் விரதம் இருப்பவர்கள் ராமனைப் போல கணவனைப் பெறலாம் எனவும் சொல்லப்படுகிறது.
27 பெண்ணை மணந்த ஆண்
என்னடா இது! ஒரே நாளில் எப்படி 27 பெண்ணை மணக்க முடியும் என்று தானே கேட்கிறீர்கள்?... அப்படித்தான் ஒருவர் மணந்திருக்கிறார். அவர் வேறு யாரும் இல்லைங்க. நாம் நிலா என்று கொஞ்சி விளையாடுகிற சந்திரன் தான் அது. பங்குனி உத்திர நாளன்று அஸ்வினி, பரணி, கார்த்திகை, ரோகிணி, மிருகசீரிடம், திருவாதிரை, புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம், பூரம், உத்தரம், அஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி ஆகிய 27 நட்சந்திரங்களையும் ஒரே நாளில் மணந்து கொண்டார். அவனவன் ஒரு மனைவியையே சமாளிக்க முடியாமல் திணறும்போது, 27 பேரை ஒரே நாளில் மணந்த சந்திரன் உண்மையிலேயே தைரியம் மிக்க ஆண்மகன் தான்.