For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கர்பிணியின் வயிற்றைக் கிழித்து வயிற்றிலிருக்கும் குழந்தை திருட்டு....

கர்பிணிகளை கொன்று குழந்தை திருடிய கும்பல் அதிர்ச்சி தகவல்கள்

|

குழந்தை வளர்ப்பு என்பது இன்றைய காலத்தில் எவ்வளவு சவாலன வேலை என்பதை யாராலும் மறுக்க முடியாது. வழக்கமாக பள்ளியிலிருந்து வரும் நேரத்திலிருந்து ஐந்து நிமிடம் தாமதமானாலே பெற்றோருக்கு பதட்டம் தொற்றிக் கொள்ளும்.

குழந்தை வந்து சேரும் வரை ஏற்படக்கூடிய பதைபதைப்பிற்கு அளவேயிருக்காது. மூளைக்கு விடையளிக்கும் வகையில் காரணங்கள் நமக்கு தெரிந்தாலும் ஆனால் அதனை நம் மனம் ஏற்றுக் கொள்வதில்லை. நம்மூர்களில் பல்வேறு காரணங்களுக்காக குழந்தைகள் கடத்தப்படுகிறார்கள் பொது இடங்களில், மருத்துவமனைகளில் நடந்திருக்கிறது.

இதைவிட கொடூரமான ஒரு சம்பவங்களைப் பற்றித் தான் பார்க்கப்போகிறோம். வெளிநாடுகளில் குறிப்பாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் குழந்தைக்காக என்ன வேண்டுமானாலும் செய்யத் துணிந்திருக்கிறார்கள்.

அதன் வீரியம் எங்கே போய் முடிந்திருக்கிறது தெரியுமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

ஒரு குழந்தை வேண்டும் என்று நினைத்து விட்டால் குழந்தையை இவர்கள் குறி வைப்பதில்லை மாறாக கர்பிணிப்பெண்களை குறிவைக்கிறார்கள். தொடர்ந்து கண்காணிக்கிறார்கள் அந்த பெண்ணின் குடும்ப சூழ்நிலை, வீட்டின் நடமாட்டம், உணவுப்பழக்கம் என தொடர்ந்து கண்காணித்து சரியாக ஒன்பது மாதங்கள் நிரம்பியதும் அவர்களின் வேலை ஆரம்பமாகிறது.

பிரசவத்திற்கு ஒரு வாரமோ அல்லது ஒரு சில தினங்களோ இருக்கும் போது இவர்களின் வேட்டை ஆரம்பமாகிறது.

#2

#2

வீட்டை கொள்ளையடிப்பவர்களை போல வீட்டிற்குள் நுழைபவர்கள் பொருட்களை எதுவும் கொள்ளையடிக்காமல் கர்பிணியின் வயிற்றைக் கிழித்து குழந்தையை திருடுகிறார்கள். இல்லையென்றால் கர்பிணிபெண்ணை வீட்டிற்கு வரவழைத்து கொடூரமாக கொலை செய்து கொலையை திருடுகிறார்கள்

இதில் வீட்டில் இருக்கிற பிற உறவுகளையும் தயவு தாட்சாண்யமின்றி கொன்றிருக்கிறார்கள். இந்த கும்பலுடன் மருத்துவம் அறிந்த நபர் ஒருவரையும் உடன் வைத்துக் கொள்கிறார்கள் அதற்காக அவர்கள் முறையாக மருத்துவ சிகிச்சை எல்லாம் அளிப்பதில்லை அவர்களுக்குத் தேவை அந்த குழந்தை மட்டுமே....

வயிற்றை அறுத்துவிட்டு சில நேரங்களில் தையல் போடுகிறீர்கள் இல்லையென்றால் அப்படியே விட்டுச் சென்று விடுகிறார்கள்.

#3

#3

டைனெல் லேன் என்ற பெண்மணியின் குழந்தை எதிர்பாராத விதமாக இறந்து விடுகிறது. இதனால் டைனெலுக்கும் அவரது ஆண் நண்பருக்கும் அடிக்கடி சண்டை வந்து கொண்டிருந்தது. இதனைத் தொடர்ந்து தனக்கு இன்னொரு குழந்தை வேண்டுமென்று நினைத்தார். ஆனால் அவருக்கு குழந்தை பெற்றுக் கொள்ள விருப்பமில்லை. இதனால் தான் கர்ப்பமாக இருப்பது போல நடிக்க ஆரம்பித்தார்.

அவரது ஆண் நண்பரும் அதை நம்பினார். மாதம் செல்ல செல்ல டைனெலுக்கு பயம் தொற்றிக் கொண்டது. இந்த நேரத்தில் தான் டைனெல் தான் குழந்தைகளுக்கான துணி விற்பதாக ஒரு விளம்பரம் வெளியிட்டிருந்தார் அதை வாங்குவதற்காக வீட்டிற்கு மிச்சேல் வில்கின்ஸ் என்ற பெண்மணி வருகிறார்.

Image Courtesy

#4

#4

வில்கின்ஸ் நிறைமாத கர்பிணியாக இருந்தார். அவரைப் பார்த்ததும் டைனெல் மூளை வேலை செய்ய ஆரம்பித்தது நீண்ட நேரம் பேசிவிட்டு கிளம்புவதாக சொல்ல.... கீழே பேஸ்மெண்ட்டில் இன்னும் சில குழந்தைகளின் துணி இருப்பதாகவும் அதையும் காட்டுவதாக சொல்லி கீழே அழைத்துச் செல்கிறார்.

அங்கே சென்றதும் தான் தயாராய் வைத்திருந்த கட்டையால் வில்கின்ஸை தாக்கி மயக்கமுறச் செய்கிறார். பின்னர் வயிற்றை அறுத்து குழந்தையை வெளியில் எடுத்து விடுகிறார்.

Image Courtesy

#5

#5

உடனடியாக தன்னுடைய ஆண் நண்பருக்கு போன் செய்து தனக்கு வீட்டிலேயே குறைப்பிரசவம் நடந்து விட்டதாக சொல்கிறார். உடனடியாக விரைந்தவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறார். அங்கே குழந்தைக்கு அவசர சிகிச்சை வழங்கப்பட்டது.

மருத்துவர்கள் டைனெலை பரிசோதிக்க வர அதற்கு மறுப்பு தெரிவிக்கிறார். தனக்கு எதுவும் பாதிப்பு இல்லை பேஸ்மெண்ட்டுக்கு சென்ற போது தடுமாறி விழுந்து விட்டதாகவும் அதில் தான் குழந்தை பிறந்து விட்டது என்றும் சொல்லி மருத்துவர்கள் பரிசோதிக்க மறுப்பு தெரிவிக்கிறார். ஆனால் அவரது ஆண் நண்பர்,மருத்துவர்கள் சந்தேகம் கொண்டு போலீஸிடம் புகார் அளிக்க விஷயம் தெரிய வந்தது. வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்த வில்கின்ஸ் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டார் டைனெலுக்கு 100 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.

Image Courtesy

#6

#6

அஷ்லைஹ் என்ற பெண்மணி எல்லாரிடத்திலும் தான் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தார். தன்னுடைய சமூக வளைதங்களில் இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட அல்ட்ரா சவுண்ட் படங்களை பதிவேற்றி குழந்தைக்காக காத்திருப்பதாக தெரிவித்தார். ஆனால் உண்மையில் இவர் கருத்தரிக்கவில்லை.

இவரது பதிவுகளைப் பார்த்து இவரது பள்ளித் தோழியான சூட்டன் என்பவர் தொடர்பு கொண்டு தானும் இப்போது கர்ப்பமாக இருப்பதாக சொல்லி பேச ஆரம்பிக்கிறார். இருவரும் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்ள ஆரம்பித்தார்கள்.

#7

#7

திட்டமிட்டபடி சூட்டனை வீட்டிற்கு வரவழைத்த அஷ்லைஹ் அவரை கொடூரமாக கொலை செய்து குழந்தையை வெளியில் எடுத்துவிடுகிறார். குழந்தையின் தொப்புள் கொடியை அறுத்து வீட்டிற்குள் சென்று போலீஸுக்கு போன் செய்கிறார்.

வீட்டில் தனியாக இருக்கும் போது தன்னைப் பார்க்க தோழி வந்ததாகவும் ஆனால் அவள் என்னை கொலை செய்ய முயன்றாள் அந்த நேரத்தில் என்னை தற்காத்துக் கொல்ல அவளை நான் கத்தியால் குத்தினேன் அதில் அவள் இறந்துவிட்டால் இந்த கலேபரத்தில் எனக்கு குறைப்பிரசவம் ஆகிவிட்டது என்றிருக்கிறார். விரைந்து வந்த போலீசார் உண்மையை கண்டுபிடித்தனர் சூட்டன் பரிதாபமாக உயிரிழந்துவிட குழந்தை காப்பகத்தில் சேர்க்கப்பட்டது அஷ்லைஹ் சிறையில் அடைக்கப்பட்டார்.

Image Courtesy

#8

#8

அனீடி மோரல்ஸ் என்ற பெண்மணி ஏற்கனவே இரண்டு முறை கரு உருவாகி கலைந்து விட்டதாக சொல்லியிருந்தார். இந்நிலையில் நெருக்கடி காரணமாக மூன்றாவது முறையாக தான் கருத்தரிப்பதாக எல்லாரையும் நம்ப வைத்தார். இம்முறை அவருக்கு பயம் தொற்றிக் கொண்டது.

இம்முறை எப்படியாவது தனக்கு குழந்தை வேண்டும் என்று நினைத்தவர் கர்ப்பிணிகளை தேட ஆரம்பித்தார். இரண்டு வாரங்கள் தீவிர தேடுதலுக்குப் பிறகு ஒரு காபி ஷாப்பில் மரிட்சா க்ரூஸ் என்ற கர்பிணிப்பெண்ணை சந்திக்கிறார். தானும் கர்ப்பமாக இருப்பது போல வயிற்றில் தலையணை வைத்திருந்தார். இந்தப் பெண்மணிக்கு இது முதல் குழந்தை இல்லை என்பதை தெரிந்து கொள்கிறார் மோரல்ஸ்.

சகஜமாக கர்ப்பகால அனுபவங்களை பேச ஆரம்பித்து நட்பாக்கிக் கொண்டு தன் வீட்டிற்கு அழைக்கிறார். அந்த அழைப்பினை ஏற்று மோரல்ஸ் வீட்டிற்கு சென்ற மரிட்சாவை வெட்டி கொலை செய்கிறார். பின் வயிற்றை கிழிக்கிறார் மருத்துவம் சார்ந்த எந்த அனுபவமும் இல்லாததால் அவருக்கு குழந்தை இருக்கும் இடம் சரியாக கணிக்கத் தெரியவில்லை அதனால் மரிட்சாவை இரண்டு துண்டுகளாக வெட்டி ஒரு வழியாக குழந்தையை எடுத்துவிடுகிறார்.

Image Courtesy

#9

#9

ஆனால் குழந்தை இறந்திருக்கிறது. இதனால் உடனடியாக ஆம்புலன்ஸுக்கு அழைத்தவர் தனக்கு வீட்டிலேயே குறைப்பிரசவம் ஏற்பட்டதாகவும் ஆனால் குழந்தை அழவில்லை என்கிறார். உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார் அங்கே பரிசோதித்த மருத்துவர்கள்.

குழந்தையை கட்டாயமாக பிடுங்கி எடுக்கப்பட்டிருக்கிறது. இது நார்மல் டெலிவரி போல தெரியவில்லை என்கிறார். அதோடு ஆம்புலன்ஸில் சென்ற மருத்துவரும் குழந்தையுடன் கருப்பை சேர்ந்தே இருந்தது நாங்கள் தான் அதனை நீக்கினோம் என்று சொல்ல சந்தேகம் ஏற்பட்டு போலீஸுக்கு தகவல் கொடுத்துவிடுகிறார்கள்.

தான் வசமாக மாட்டிக் கொண்டதை உணர்ந்த மோரல்ஸ் கழிவறைக்குச் சென்று தானே தன்னுடைய பிறப்புறப்பில் கூர்மையான ஆயுதத்தால் குத்திக் கொள்கிறார்.

 #10

#10

ரத்தம் வரும் வரை தன்னை குத்திக் கொண்டவர் பின் மருத்துவர்களிடம் வந்து பாருங்கள் எனக்கு உதிரப்போக்கு ஏற்படுகிறது. குழந்தையை பிரசவித்தது முதல் எனக்கு உதிரப்போக்கு நிற்கவில்லை என்கிறார்.

ஆனால் மருத்துவர்கள் குழந்தை இவர் வயிற்றிலிருந்து வரவில்லை என்பதை உறுதி செய்கிறார்கள். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் உண்மை வெளிப்படுகிறது. மோரல்ஸுக்கு பரோலில் வெளிவர முடியாத அளவிற்கு வாழ்நாள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: insync pulse
English summary

Shocking Stories About Fetal Abduction

Shocking Stories About Fetal Abduction
Story first published: Thursday, June 14, 2018, 11:56 [IST]
Desktop Bottom Promotion