Just In
- 12 min ago புதன் மீன ராசிக்கு நேராக செல்வதால் இந்த 5 ராசிக்காரர்களின் வாழக்கையில் அதிர்ஷ்டம் கொட்டப்போகுதாம்...!
- 1 hr ago உங்கள் தலைமுடி வலுவாக வளரனுமா? அப்போ இதை சாப்பிடுங்கள்..!
- 1 hr ago ஜாகிங் போகும் போது இந்த தவறுகளை தெரியாம கூட பண்ணிராதீங்க... இல்லனா உங்க எலும்புகள் அவ்வளவுதான்...!
- 3 hrs ago இந்தியாவின் டாப் 10 ஏழை மாநிலங்கள் என்னென்ன தெரியுமா? கடைசி இடத்துல இருக்கிறத பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க...!
Don't Miss
- News "அது அவ்ளோதான்.. முடிஞ்ச்!" பாஜக இந்த முறை 150ஐ தாண்டாது என.. கணித்த ராகுல் காந்தி
- Technology கடையை இழுத்து மூடும் OnePlus.. இனி தமிழ்நாட்டில் ஒன்பிளஸ் போன் வாங்க முடியாதா? உண்மை என்ன?
- Movies குடித்துவிட்டு ஆட்டம் போட்ட ஸ்ரீதிவ்யா.. ஓரம் கட்டிய தமிழ் சினிமா.. செய்யாறு பாலு சொன்ன ஷாக் நியூஸ்!
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
- Sports IPL 2024 : சிஎஸ்கே கேப்டனுக்கு கல்தா.. பிசிசிஐ எடுத்த அதிரடி முடிவு.. சுப்மன் கில் வைத்த ட்விஸ்ட்
- Finance அஜித் குமார்-க்கு கிடைத்த புதிய பதவி.. இனி மாஸ் தான்..!!
- Automobiles 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
கருணாநிதியும், கருப்பு கண்ணாடியும் - அடுத்தடுத்த விபத்தும், பெரிய வரலாறும்!
கருணாநிதியும், கருப்பு கண்ணாடியும் - அழிக்க முடியாத அடையாளம்!
கலைஞர் கருணாநிதி என்றாலே முதலில் நினைவிற்கு வருவது உதய சூரியன், மஞ்சள் துண்டு மற்றும் அவரது கருப்பு கண்ணாடி. உதய சூரியனும், மஞ்சள் துண்டும் ஆரம்பத்தில் இருந்தே அவரிடம் இருந்தது. ஆனால், கருப்பு கண்ணாடி அவருடன் பாதியில் தான் இணைந்துக் கொண்டது.
பட்ட காலிலே படும், கெட்ட குடியே கெடும் என்ற பழமொழி என்று. துன்பம் / சோகம் எப்போதும் தனித்து வருவதில்லை. அவசியம் சேர்ந்து வரும் என்பதை குறிக்கும் பழமொழி தான் இது. இந்த பழமொழி கருணாநிதிக்கும் பொருந்தியது. ஆம்! கலைஞர் கருணாநிதியின் எழுத்தின் தெளிவை போலவே, கண் பார்வையும் சிறந்து இருந்தது.
ஆனால், எதிர்பாராத விபத்து காரணமாக கருணாநிதி அவர்களது கண் பார்வை பாதிக்கப்பட்டது.
கார் விபத்து!
1953ம் வருடம், திருப்பத்தூரில் காரில் பயணித்துக் கொண்டிருந்தார் கலைஞர் கருணாநிதி. அப்போது எதிர்பாராமல் நடந்த கார் விபத்து காரணமாக அவரது இடது கண்ணில் பார்வை மிகவும் பாதிக்கப்பட்டது. மேலும், அடுத்த சில விபத்துக்கள் போதும் அதே கண்ணில் மீண்டும், மீண்டும் அடிப்பட அவரது இடது கண் பார்வை மிகவும் பாதிக்கப்பட்டது.
கண்ணாடி!
இப்படியான தொடர் விபத்து மற்றும் எதிர்பாராமல் இடது கண்ணில் அடிப்பட்டது போன்றவற்றால் கருணாநிதி அவர்களுக்கு இடது கண் பார்வை பாதிக்கப்பட்டது. இதற்காக அவருக்கு அறுவை சிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட்டன. 1971ம் ஆண்டில் அமெரிக்க மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்ட பிறகே கருணாநிதி அவர்கள் கருப்பு கண்ணாடி தொடர்ந்து அணிய ஆரம்பித்தார்.
அடையாளம்!
பெரியாருக்கு தடி, அண்ணாவுக்கு கை அசைவு, எம்ஜிஆருக்கு தொப்பி என்பது போல கருணாநிதி அவர்களுக்கு அந்த கருப்பு கண்ணாடி ஒரு பெரும் அடையாளமாக மாறிவிட்டது. ஒருவகையில் கருப்பு கண்ணாடி அவருக்கான மரியாதை சின்னமாகவும், கம்பீரமான தோற்றமாகவும் அமைந்தது என்று கூறலாம்.
எளிது!
பிற தேசிய, அரசியல் தலைவர்களை வரைவதை காட்டிலும் இவரது படத்தை வரைவது மிகவும் எளிது. முக்கியமாக கார்டூன் வடிவத்தில் அல்லது வேறு சில வரையும் வகைகளில் கருணாநிதி அவர்களை மிக எளிமையாக வரைந்துவிடலாம்... அதற்கு முக்கிய காரணம் அவரது கருப்பு கண்ணாடியும் கூட.
அதுமட்டுமின்றி கலைஞர் கருணாநிதி போல விழாக்களில் வேடம் அணிபவர்கள், அவரது தோற்றம் கிட்டத்தட்ட கொண்டுவர அந்த கருப்பு கண்ணாடியை தான் தேர்வு செய்வார்கள்.
கருப்பு!
கருப்பு திராவிடத்தின் நிறம், போராளிகளின் நிறம், உழைக்கும் வர்கத்தின் நிறம். கருப்பு தமிழர்களின் நிறம். கருப்பிற்கு எப்போதுமே ஒரு சிறப்பு உண்டு. கருப்பை யாரும் களங்கப்படுத்த முடியாது. கருப்பிடம் விளையாடுபவர்களே களங்கப்பட்டு கொள்வார்கள். கலைஞரின் "அண்ணா" கருப்பை தோளில் சுமந்தார். கலைஞர் தன் கண்ணில் வைத்து காத்தார்.
எத்தனை ஆண்டுகள் கடந்தாலும்..., "கலைஞரின்" எழுத்தும், அவரது அடையாளமும் தமிழையும், தமிழ் நாட்டையும் விட்டு அகலாது என்பது நிதர்சனம்!
All Image Credit: Facebook / Kalagnar89