Just In
- 4 hrs ago 18 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- 6 hrs ago Garlic Peels: பூண்டின் தோலில் இவ்வளவு நன்மைகளா? என்னென்ன-ன்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..
- 6 hrs ago Hair Care: பளபளப்பான மற்றும் வலிமையான முடி வேணுமா? கற்பூரத்தை இப்படி யூஸ் பண்ணுங்க... சர சரனு வளரும்...!
- 7 hrs ago 3 முள்ளங்கியும், 1 தக்காளியும் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு செமயா இருக்கும்..
Don't Miss
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
கடந்த 2 நூற்றாண்டுகளில் எதிர்காலம் பற்றி கணிக்கப்பட்டு பொய்த்த 10 விஷயங்கள்!
கடந்த 2 நூற்றாண்டுகளில் எதிர்காலம் பற்றி கணிக்கப்பட்டு பொய்த்த 10 விஷயங்கள்!
சில விஷயங்கள் எல்லாம் நம் வாழ்வில் நடக்கும் என்று நாம் கனவில் கூட நினைத்திருக்க மாட்டோம். ஆனால், அவர் நம் வாழ்வில் நடந்து பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும்.
உதாரணமாக சில விஷயங்களை கூற இயலும்... வகுப்பறையில்... இவன் எல்லாம் எங்க பாஸ் ஆக போறான் என்று ஆசிரியர் கருதும் மாணவன், பத்தாம் வகுப்பு பொது தேர்வில் நானூறு மதிப்பெண்களுக்கு மேல் பெற்று ஆச்சரியம் அளித்திருப்பான். எப்படியும் தோற்றுவிடுவோம் என்று கருதப்படும் கிரிக்கெட் போட்டியில், கடைசியாக களம்கண்ட பந்துவீச்சாளர் பொறுமையாக விளையாடி டெஸ்ட் போட்டியை டிரா அல்லது வெற்றிபெற செய்திருப்பார்.
Cover Image Source: ancient-origins
இப்படி நாம் நினைப்பவை எல்லாம் நினைத்தப்படியே நடப்பதில்லை. இது அறிவியல் கண்டுப்பிடிப்புகள் மற்றும் தொழில்நுட்பங்கள் சார்ந்தும் பொருந்தும். இதெல்லாம் சாத்தியமே இல்லை என கடந்த இரண்டு நூற்றாண்டுகளில் கணிக்கப்பட்ட சில விஷயங்கள்.. இன்று அசுர வளர்ச்சி அடைந்து மக்கள் தினமும் பயன்பாட்டில் கண்டு வரும் விசயமாக இருக்கிறது...
வாங்க! அவை என்னென்ன என்று காணலாம்...
1800ல்
டாக்டர். டயோநிசிஸ், இயற்கை தத்துவம் மற்றும் வானியல், பல்கலைகழக கல்லூரி, லண்டன்.
வேகமாக பயணிக்கும் ரயில்கள் சாத்தியமற்றது. மேலும், இது பயணிகளை சுவாசிக்க முடியாதபடி செய்யும். மேலும், மூச்சுத்திணறல் ஏற்படுத்தி அவர்கள் மரணிக்க செய்யும், என்ற கருத்தை பதிவு செய்திருந்தார்.
1859ல்
எட்வின் எல்.ட்ராக்கின் உதவியாளர்கள், பூமியில் துளையிட்டு ஆயில் எடுக்க முடியுமா என்பதற்கான கருத்தாய்வு நடந்துக் கொண்டிருந்த போது...
ஆயிலை பூமியில் துளையிட்டு எடுப்பதா? பூமியில் ஓட்டைப் போட்டு ஆயிலை தேட முடியுமா? இது கிறுக்குத்தனமான யோசனையாக இருக்கிறது என்ற கருத்தினை பதிவு செய்தனர்.
1902ல்
சைமன் நியூகாம்ப் கனடா - அமெரிக்க வானிலை மற்றும் கணித அறிஞர். ரைட் சகோதரர்கள் விமானத்தை கண்டுபிடிப்பதற்கு 18 மாதங்களுக்கு முன்...
காற்றினை விட எடை அதிகமான கருவிகள் பறப்பது பிராக்டிலாக முடியாது, இது முற்றிலும் சாத்தியமற்றது, என்ற கருத்தினை பதிவு செய்திருந்தார்.
1903ல்
மிச்சிகன் சேவிங்க்ஸ் வங்கி பிரசிடென்ட், ஹென்றி போர்டின் வழக்கறிஞர், போர்ட் மோட்டார் கம்பெனியில் முதலீடு செய்ய வேண்டாம் என்று கூறியவர்.
குதிரை தான் இருக்கிறதே. தானியங்கியாக வாகனம் ஓடுவதெல்லாம் நாவல்களில் மட்டுமே படிக்க முடிக்க முடியும்., என்ற கருத்தினை பதிவு செய்திருந்தார்.
1916ல்
சார்லி சாப்ளின், நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், ஸ்டுடியோ உரிமையாளர்.
சினிமா என்பது சேமித்து வைக்கப்பட்ட டநாடகம். மக்கள் விரும்புவது எல்லாம், மேடையில் இரத்தமும், சதையுமாக நிகழும் நாடகங்களை தான் என்ற கருத்தினை பதிவு செய்திருந்தார்.
1927ல்
எச்.எம் வார்னர், வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தின் இணை உரிமையாளர்.,
நடிகர்கள் பேசுவதை எல்லாம் யார் கேட்க விரும்புவார்கள்... என்று பேசும் படத்தை குறித்த ஒரு கருத்தை பதிவு செய்திருந்தார்.
1946ல்
டார்லி ஜானுக், 20த் செஞ்சுரி ஃபாக்ஸ் திரைப்பட தயாரிப்பாளர்
தொலைக்காட்சி பேட்டி எல்லாம் ரொம்ப காலம் நீடிக்காது. மக்கள் அதை வெறுமென கண்டு சோர்வடைந்து விடுவார்கள். யார் தான் அந்த மரப்பெட்டியை இரவு முழுக்க உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருப்பார்கள், என்ற கருத்தை பதிவு செய்திருந்தார்.
1977ல்
கென் ஒல்சன், பிரசிடென்ட், தலைவர், நிறுவனர், டிஜிட்டல் எக்யூப்மெண்ட் கார்பரேஷன்.
ஒரு தனிப்பட்ட நபர் வீட்டில் ஒரு கம்பியூட்டர் வைத்திருக்க வேண்டும் என்பதற்கு எந்தவொரு காரணமும் இல்லை. அவர்கள் ஏன் வீட்டில் கணினியை பயன்படுத்த போகிறார்கள், என்ற கருத்தினை பதிவு செய்திருந்தார்.
1995ல்
கிளிப் பார்ட் ஸ்டால், ஒரு செய்தி கட்டுரையில்...,
ஆன்லைன் டேட்டாபேஸ்கள் எல்லாம் ஒருபோதும் தினசரி நாளேடுகளை ரீப்ளேஸ் செய்துவிட முடியாது..., என்ற கருத்தை பதிவு செய்திருந்தார்.