Just In
- 2 min ago சப்பாத்திக்கு ஏற்ற மணமணக்கும்... ருசியான.. சைவ சிக்கன் கிரேவியை எப்படி செய்யணும் தெரியுமா?
- 1 hr ago உங்க பற்கள் வலிமையாகவும், கிருமிகள் இல்லாததாகவும் இருக்கணுமா? இதில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- 2 hrs ago மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- 3 hrs ago Kulfi: 4 பிரட்டும், 1 பால் பாக்கெட்டும் வெச்சு ஈஸியா குல்பி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
Don't Miss
- News திண்டுக்கல்-பொள்ளாச்சி பஸ் பெயர் பலகையையில் என்ன "ஓடிச்சி" பாருங்க.. தலைசுற்றிப்போன மக்கள்
- Sports IPL Classics - 2010 சீசன் அரையிறுதியில் CSK வென்றது எப்படி? பலம் வாய்ந்த டெக்கான் அணியுடம் மோதிய கதை
- Movies Actor Karthi: ஜூன் மாதத்தில் துவங்கும் சர்தார் 2 படத்தின் சூட்டிங்.. கதை என்ன தெரியுமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
இந்த கொடுமைய நீங்களே பாருங்க... ஆதார் அட்டை வாங்க காத்திருக்கும் மாடுகள்...
இந்த கொடுமைய நீங்களே பாருங்க... ஆதார் அட்டை வாங்க காத்திருக்கும் மாடுகள்... Synopsis: Aadhaar cards for cows to cost govt Rs 148 crore பசுக்களுக்கு 148 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் ஆதார் அட்டைகள் வ
நம்முடைய நாட்டில் பொதுக்கழிப்பிடத்தை பயன்படுத்த மட்டும்தான் இன்னும் ஆதார் அட்டை இணைக்கப்படவில்லை. அதைத்தவிர பால் கார்டு தொடங்கி, இறப்புச் சான்றிதழ் வரை எல்லாவற்றுக்கும் ஆதார் அட்டை இணைக்கப்பட வேண்டியது அவசியமாகிவிட்டது.
இதையே நம்மால் பொறுத்துக் கொள்ள முடியவில்லையே. அடுத்ததாக, பசு மாட்டுக்கு ஆதார் கார்டு வழங்க ஆரம்பித்துவிட்டார்களே அதற்கு என்ன செய்யப்போகிறீர்கள்?...
பசுவுக்கு ஆதார் அட்டை
மத்திய அரசு எல்லா அறிவிப்புகளையுமே நடு ராத்திரியிலோ அல்லது யாரும் எதிர்பார்க்காத போதோ வெளியிட்டே பழகிப்போய்விட்டது. அதேபோலத்தான் சமீபத்தில் ஒரு அறிவிப்பு வெளியானது.அதாவது வீட்டில் வளர்க்கப்படும் பசு மாடுகளுக்கு ஆதார் அட்டை வழங்குவதற்காக 148 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியிருப்பதாக ஒரு அறிவிப்ப வெளியானது.
பால் கொடுக்கும் விலங்குகள்
பால் கொடுக்கிற விலங்குகளான பசு மற்றும் எருமை மாடுகளுக்கும் 12 இலக்க எண் கொண்ட ஆதார் அட்டை வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய வேளாண் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பசு சஞ்ஜிவினி திட்டம்
90 மில்லியன் பால் கொடுக்கும் கால்நடைகளுக்கு இந்த ஆதார் அட்டை வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும், பசு சஞ்ஜிவினி என்ற திட்டத்தின் மூலம் கால்நடைகளுக்கு சுகாதார சார்ந்த வசதிகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை செயல்படுத்த ஆகும் செலவில் 60% மத்திய அரசும் 40% மாநில அரசும் ஏற்க வேண்டி வரும்.
பசுக்களின் ஆரோக்கியம் காக்க
மேலும் கால்நடைகளின் எண்ணிக்கை, அவற்றிற்கு பரவும் நோய்கள், பால் உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு காரணிகளுக்காக கால்நடைகளுக்கு ஆதார் அட்டை வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக மத்திய வேளாண் துறை அமைச்சக்ம் விளக்கம் அளித்துள்ளது.
டேட்டா பேஸ்
பசு மற்றும் எருமை மாடுகளுக்கு ஆதார் அட்டை வழங்குவதற்காக, தேசிய பால் உற்பத்தி வளர்ச்சி கழகம் சார்பில் இந்தியா முழுவதும் தகவல்கள் திரட்டப்பட்டு கால்நடை வளர்ச்சி மற்றும் சுகாதார தகவல் தொழிநுட்ப தரவு புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆதார் அலப்பறைகள்
இந்த ஆதார் அட்டை அலப்பறைகள் நம் நாட்டில் இன்னும் என்னென்ன விஷயங்களில் எல்லாம் அரங்கேறப் போகிறதோ நமக்குத் தெரியவில்லை. இவற்றையெல்லாம் நாம் வெறுமனே கேட்டு சிரித்துவிட்டு, கடந்து போய்விடக்கூடாது. இதற்கான தேவை என்ன?... இந்த தரவுகள் எங்கு செல்லும்.இதனால் யாருக்கு லாபம் என்பதை நன்கு உற்று ஆராய்ந்து பார்க்க வேண்டும்.