ரேஸ் குதிரை பத்தி எதாவது தெரியுமா?... இத படிங்க... பயங்கர சுவாரஸ்யமா இருக்கும்...

பந்தயக் குதிரைகள் பற்றிய ஒரு கவர்ச்சி உங்களுக்கு உண்டா? ஆம், என்றால் இந்த பதிவை முழுவதும் படித்து பந்தயக் குதிரைகள் பற்றிய உண்மைகள் மற்றும் கதைகளை அறிந்து கொள்ளுங்கள்.

பந்தயக் குதிரைகள் பற்றிய ஒரு கவர்ச்சி உங்களுக்கு உண்டா? ஆம், என்றால் இந்த பதிவை முழுவதும் படித்து பந்தயக் குதிரைகள் பற்றிய உண்மைகள் மற்றும் கதைகளை அறிந்து கொள்ளுங்கள்.

insync

மேல்தட்டு மற்றும் கோடீஸ்வரர்களுக்கு இது ஒரு சிறந்த பொழுது போக்காக இருப்பதாகவும், பல காலங்களாக இந்த விளையாட்டில் வீழ்ச்சியே ஏற்பட்டதில்லை என்றும் காலம் கடந்தும் அழியப்படாத ஒரு விளையாட்டாக இருந்து வருகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
குதிரை

குதிரை

நாடுகளை இணைத்தவுடன், முதல் வேலையாக கலைஞர்களை தடை செய்ய வேண்டும் என்று பிரான்சிஸ் பகான் நம்பினார். ஏனெனில், கலைஞர்களுக்கு தான் கலை அல்லது கதைகள் மூலம் ஒரு நிறுவனத்தை விமர்சிக்கும் தன்மை இருப்பதாக அவர் கருதினார். நாகரீகத்தின் தொடக்கம் முதல், கதைகள், தொன்மங்கள் மற்றும் சிறுகதைகள் போன்றவை பல முக்கிய குறிப்புகளை மக்களிடம் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது என்பதை நாம் அறியலாம். சமூகத்தில் பல்வேறு அரசியல் கொள்கைகள் மற்றும் கருத்துகளை மக்களிடையே பிரச்சாரம் செய்வதற்காக புராணங்கள் தோற்றுவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

குதிரை பந்தயம்

குதிரை பந்தயம்

மேற்கத்திய நாகரீகத்தில் குதிரை பந்தயம் என்பது பல பில்லியன் டாலர் தொழிலாக, கலாச்சாரத்தின் சின்னமாக சமூகத்தில் பணம் மற்றும் வர்கத்தின் அடையாளமாக இருந்து வருகிறது. சராசரியாக ஒரு பந்தயக் குதிரை $70,000/- க்கு வாங்கப்படுவதாகவும் அதன் ஒரு வருட பயிற்சிக்கு $30,000/- $50,000/- வரை செலவு செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது. மேல் தட்டு வர்க்கம் மற்றும் கோடீஸ்வரர்களுக்கு இது ஒரு சிறந்த பொழுது போக்காக இருப்பதாகவும், பல காலங்களாக இந்த விளையாட்டில் வீழ்ச்சியே ஏற்பட்டதில்லை என்றும் காலம் கடந்தும் அழியப்படாத ஒரு விளையாட்டாக இருந்து வருகிறது என்றும் கூறப்படுகிறது.

கட்டுக்கதைகள்

கட்டுக்கதைகள்

பல சமூகத்தினரை இணைக்கும் ஒரு விளையாட்டாகவும், பல்வேறு பெருந்தகைகளை கவரும் ஒரு போட்டியாகவும் இருப்பதால், இதன் மேல் ஆர்வத்தை தூண்டுவதற்காக பல்வேறு கதைகள் தேவைப்படுகிறது. பல்வேறு ஊடகங்களின் பிரதிநித்திதுவம் மூலம், தனி நபர், குதிரையின் வெற்றியை தீர்மானிப்பது குறிந்து அறிந்து கொள்ள முடியும். இந்த பந்தயத்தில் உள்ள அபாயம் மற்றும் திகிலை இன்னும் அதிகப்படுத்தும் வகையில் பல்வேறு கதைகளும் தொன்மங்களும் இந்த கலாச்சாரத்தைப் பற்றி உருவாக்கப்பட்டுள்ளன. குதிரைப்பந்தயத்தை பற்றி நடைமுறையில் இருந்து வரும் பழங்கதைகளை பற்றி ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் அவற்றில் சிலவற்றை நாம் இங்கே குறிப்பிட்டுள்ளோம்.

சாம்பல் நிற குதிரைகள்

சாம்பல் நிற குதிரைகள்

மழை நாட்களில் சாம்பல் நிற குதிரையின் மீது பெட் கட்டலாம்:

இந்த கதையை நாம் பலரும் பலமுறை கேள்விப்பட்டிருக்கலாம். மழைக்காலங்களில் மற்றும் சேறு அதிகமாக இருக்கும் பாதைகளில் சாம்பல் நிற குதிரைகள் வேகமாக ஓடும் என்று மக்கள் நம்புகின்றனர். ஆனால் குதிரையின் நிறத்திற்கும் ஈரமான பாதையில் அதன் ஓடும் திறனுக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை. உண்மையில் சாம்பல் நிற குதிரைகளுக்கு ஈரமான மண் மற்றும் அந்த சூழல் ஒரு வெறுப்பை உண்டாக்குவதாக அறியப்படுகிறது.

குதிரை ஜாக்கி

குதிரை ஜாக்கி

குதிரையின் ஜாக்கி குள்ளமாக இருக்க வேண்டும். பொதுவாக குதிரையின் ஜாக்கி சராசரியாக 5' அளவு இருப்பார். ஆனால் ஜாக்கியின் உயரத்திற்கு எந்த ஒரு வரம்பும் இல்லை. குதிரைகள் ஜாக்கியை சுமந்து செல்வதால் அவர்கள் எடையில் சில குறிப்பிட்ட அதிகாரபூர்வ வரையறைகள் உண்டு. உதாரணத்திற்கு ரோனல்ட் அர்டைன் என்வரின் உயரம் 5'9", மற்றும் இவர் ஒரு சிறந்த ஜாக்கியாக பல வெற்றிகளைப் பெற்றிருக்கிறார்.

எந்த குதிரைமீது பெட் கட்டலாம்

எந்த குதிரைமீது பெட் கட்டலாம்

அதிக முறை வெற்றியை சுவைத்த குதிரை எல்லோருக்கும் விருப்பமானதாக உள்ளது. ஆகையால் அந்த குதிரை வெற்றி பெரும் என்று அனைவரும் நம்புகின்றனர். இதனை நம்பி, பந்தயத்தில் விருப்பமான குதிரையை பொதுமக்கள் தேர்ந்தெடுக்கின்றனர். ஆனால் இதில் 33% மட்டுமே வெற்றி வாய்ப்பு உள்ளதாக அறியப்படுகிறது. அதனால் மூன்று முறை இவர்கள் பெட் கட்டும்போது ஒரு முறை மட்டுமே இவர்களால் வெற்றி பெற முடியும் என்று அறியப்படுகிறது. இதனால் விருப்பமான குதிரை மீது பெட் கட்டுவது தோல்வியில் முடிகிறது. 1900 களின் தொடக்கத்தில், மாப்ஹியா கும்பல்கள் இந்த நம்பிக்கையில் தான் பந்தையங்களை முடிவு செய்ததாக நகைச்சுவையாக நம்பப்படுகிறது.

ஜாதிக்குதிரைகள்

ஜாதிக்குதிரைகள்

கலப்படமற்ற ஜாதிக் குதிரை உயர்ந்த மதிப்புடையதாக கருதப்படுகிறது. மேலும் தூய்மையானதாக நம்பப்படுகிறது. அந்த வகைக் குதிரை தனது முதலாளிக்கும், தடத்திற்கும் நம்பகமானதாக அறியப்படுகிறது. அவற்றின் மரபுவழி அதன் மதிப்பை உறுதி செய்கிறது. மரபு வழியின் காரணமாக இத்தகைய குதிரைகள் மனநிலை கணிக்க முடியாமலும் முரண்பாடாகவும் இருக்கிறது என்றும் பலர் நம்புகின்றனர். பந்தயத்தில் இது ஒரு முக்கிய கூற்றாக பார்க்கப்படுகிறது. ஆனாலும், எல்லா கலப்படமற்ற ஜாதிக் குதிரைகளும் கடினமாக இருப்பதில்லை. சில வகைக் குதிரைகள் மிகவும் அமைதியாகவும் இருக்கலாம். நேரத்திற்கு ஏற்றபடி எல்லா சூழ்நிலைகளையும் சமாளிக்கும் தன்மை உடையதாகவும் இருக்கலாம். பல தருணங்களில், வெற்றி பெற்ற குதிரை மக்கள் அதனை நெருங்குவதற்கு அனுமதிக்கும். குதிரைகளுக்கும் சமூகத்துடன் இணைந்திருப்பதில் ஒரு வகை இன்பம் கிடைக்கிறது, மற்றும் அவற்றுடன் கனிவாக நடக்கும்போது ஒரு புரிதலும் உருவாகிறது.

பந்தய குதிரைக்கான தகுதி

பந்தய குதிரைக்கான தகுதி

கலப்படமற்ற ஜாதி குதிரைகள் பந்தயத்தில், அந்த வகை குதிரைகள் மட்டுமே பங்கு கொள்ள முடியும். மூன்று பொலிகுதிரையில் ஒன்று கலப்படமற்ற ஜாதிக் குதிரை வம்சத்தில் இருந்து வந்ததாக இருக்கலாம். ஒரு பந்தயக் குதிரையாக போட்டியிட அதன் வம்சாவளி அனுமதிக்கிறது. ஜாக்கியின் எடை 120 பவுண்ட் இருக்கும்போது இரண்டு நிமிடத்தில் 1.25 மைல்கள் ஓடுவதற்கு கலப்படமற்ற ஜாதிக் குதிரையால் மட்டுமே முடியும்.

பந்தயத்தை கட்டுப்படுத்துவது மாபியா

பந்தயத்தை கட்டுப்படுத்துவது மாபியா

திரைப்படங்களில் டெர்பி மற்றும் குதிரை பந்தயங்களில் பல பிரபலமான சித்தரிப்புகள் இந்த கட்டுக்கதைக்கு வழிவகுத்தன. கடந்த கால நிகழ்வுகளில் சிலவற்றை மறுக்க முடியாது, ஆனால் நவீன காலங்களில் இது பரவலாகவோ சுதந்திரமாகவோ செய்யப்படவில்லை. ஒவ்வொரு மாநிலமும் பந்தயக் கமிட்டியைக் கொண்டுள்ளன, அவை தங்கள் மாநிலத்தில் உள்ள பந்தயங்களை மேற்பார்வையிட்டு ஒழுங்குபடுத்துகின்றன.

கமிஷன் மற்றும் அதன் தீவிரத்தன்மை தவிர, நியாயமான விளையாட்டைப் பொறுப்பேற்க வேண்டிய பொறுப்பு காரியதரிசி குழுவிற்கு உள்ளது. போட்டியில் தவறு இழைக்கப்பட்டால் , குற்றவாளிகளைக் கவனித்துக்கொள்வதற்கான கொள்கைகளும் உள்ளன. அவர்கள் உரிமம் ரத்து செய்யப்படலாம் , மேலும் அவர்கள் போட்டியில் இருந்து தடை செய்யலாம்.

குதிரை பந்தயத்தில் இறப்பு

குதிரை பந்தயத்தில் இறப்பு

குதிரைகளின் இறப்பு பற்றிய இந்த தவறான எண்ணம் பல முனைகளில் தோன்றுகின்றன. குறிப்பாக ஊடகங்கள் ஒரு சிறு செயலையும் பெரிதாக காட்டி கிளர்ச்சியைத் தூண்டுகின்றன. விலங்கு எய்ட் இங்கிலாந்தின் கூற்றுப்படி, 12,000 குதிரைகள் ஒவ்வொரு ஆண்டும் ஐரோப்பிய தொழிற்துறையில் ஒரு சிறிய பகுதியிலேயே பிறக்கின்றன. கிட்டத்தட்ட 400 குதிரைகள் ஒரு வருடத்திற்குள் இறந்துவிடுகின்றன, அவற்றைப் பற்றிய பல முக்கிய செய்தி ஊடகங்களில் இடம் பெறுவதில்லை.

வெற்றி

வெற்றி

வரலாற்று ரீதியாக, இது அடிப்படையற்ற ஒரு கட்டுக்கதை அல்ல. இருப்பினும், இந்த போக்கு அண்மைக்காலத்தில் முக்கியமாக அல்லது அடிக்கடி நிகழ்கிறது. பெரும்பாலான பயிற்சியாளர்கள், உரிமையாளர்கள் மற்றும் ஜாக்கிக்கள் பெரும்பாலான போட்டிகளில் வெற்றி பெற முயற்சி செய்கிறார்கள். வெற்றியாளர் பெரும்பான்மையான பணத்தை எடுத்துக் கொள்வதால் பணம் அவர்களுக்கு சிறந்த ஊக்கமளிப்பதாகும். குதிரைகள் ஈட்டும் பணத்தில் 10% மட்டுமே ஜாக்கியிடம் செல்கின்றது. 5 வது இடத்திற்கு கீழ் வருபவர்களின் சம்பளம் மேலும் குறைக்கப்படுகிறது. இதனை ஜாக் தொகை என்று கூறுவார்கள். இது பொதுவாக $100 க்கு குறைவாகவே இருக்கும். இதனால் விளையாட்டின் தர்மம் மற்றும் தூண்டுதலுக்கு இன்னும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. எந்த விளையாட்டிலும் எல்லாம் சரியாக இருக்க முடியாது என்றாலும், அத்தகைய வழக்குகளில் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு கொடூரமான விளைவுகள் உண்டு.

குதிரைகள் இன்னமும் மனிதர்களின் பழமையான தோழர்களில் ஒருவராகவே உள்ளன. அவர்களது கவனிப்பாளர்களைப் புரிந்து கொள்ளும் திறமை, விநோதமானது, அதே சமயத்தில், அந்த குதிரைகளைப் பற்றியும் நாம் கொஞ்சம் புரிந்து கொள்ள வேண்டும். விலங்கு வதை பற்றிய செய்திகள் வெளியிடப்படவில்லை என்றாலும், இப்போது எழுப்பப்படும் பிரச்சனை இதுவாகும். ஆயினும், இந்த விஷயத்திற்கு சமநிலையான அணுகுமுறை, இரு பக்கங்களுக்கும் சமாதானத்தை கொண்டு வர முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Saturday, June 30, 2018, 17:10 [IST]
Desktop Bottom Promotion