Just In
- 36 min ago 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- 2 hrs ago தளர்ந்து போன சருமத்தை இறுக்கமாக்கி ஜொலிக்கிற மாதிரி மாத்த ஆசைப்படுறீங்களா? இந்த இயற்கை பொருட்களை யூஸ் பண்ணுங்க
- 3 hrs ago திருமணம் ஆக இருக்கும் இளம்பெண்கள் இந்த ஜூஸை குடியுங்கள்.. முகம் பொலிவுறும்..!
- 3 hrs ago சப்பாத்திக்கு ஒருடைம் உருளைக்கிழங்கு வெச்சு இப்படி கிரேவி செஞ்சு பாருங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
Don't Miss
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- News தென் சென்னை தொகுதியில் 2019ஐ விட 10% அதிகரித்த வாக்குப்பதிவு.. இது யாருக்கு லாபம்!
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
எந்த ரெண்டு ராசிக்காரர்கள் திருமணம் செய்துகொண்டால் வாழ்க்கை பிரச்னை இல்லாம இருக்கும்?
எந்த இரண்டு ராசிகள் திருமண பந்தத்தில்இணைந்தால் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்பது பற்றி மிக விளக்கமாக இங்கு குறிப்பிட்டுள்ளோம்.
சிலருக்கு முதல் பார்வையில் சிலருக்கு பல வருடங்களுக்குப் பிறகு காதல் ஏற்படலாம். காதலில் வீழ்வது எளிதானது, ஆனால் அதே அன்பை எப்போதும் நிலைநிறுத்துவது கடினம். சில ஜோடிகளுக்கு அற்புதமான ஆரம்பமும் ஆனால் ஒரு சோகமான முடிவும் ஏற்படலாம். சரி, காதல் கதையில் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு என்ன புரிதல் இருக்கிறது என்பதைப் பொறுத்தே அதன் வெற்றி அமைகிறது. ஆனால், அதை முன்னரே அறிந்திருப்பதோடு, காதல் தோல்வியில் இருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்வதும் பெரிய கேள்வியாகும்.
ஒரு ஜோடியின் இராசிகளைக் கொண்டு அவர்களின் உறவின் எதிர்காலத்தைக் கண்டுபிடிக்கப்படலாம் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. மிகவும் நிலையான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையைப் பெரும் யோகமுள்ள இராசி ஜோடிகளின் பட்டியல் இதோ உங்களுக்காக!
சிம்மம் மற்றும் துலாம்:
எதிர்துருவங்கள் ஒன்றுக்கொன்றை ஈர்க்கின்றன என்பது இயற்கை . லியோ மற்றும் துலாமில் இதுவே நடக்கிறது. சிம்ம ராசிக்காரர்கள் பிறப்பிலேயே தலைவர்கள். அவர்கள் தன்னம்பிக்கை மற்றும் மேலாதிக்கம் செலுத்தும் தன்மை கொண்டவர்கள். மறுபுறம் துலாம் ராசிக்காரர்களோ சமாதானத்தின் காதலர்கள் மற்றும் கூட்டுறவை விரும்புவர்கள் . எனவே, லியோஸின் மேலாதிக்கத்தை கையாளுதல் என்பது லிபிரன்ஸுக்கு ஒரு பிரச்சனையே அல்ல. லியோஸ் பாதுகாப்பு அளிப்பவர் மற்றும் Librans அமைதியாக இருக்கும் தன்மை கொண்டவர் . இவ்வாறு, இந்த இரு எதிர் எதிர் அறிகுறிகளும் ஒருவருக்கொருவர் இணையும் சக்திகளாக மாற்றம் பெறுகின்றன. அதனால் தான் இவர்கள் மிகவும் நிலையான ஜோடிகளில் ஒன்றாக இருக்க முடிகிறது.
மிதுனம் மற்றும் துலாம்:
மிதுன இராசிக்காரர்கள் வெளிப்படையாக இருப்பதால், சில நேரங்களில் விஷயங்கள் கூறப்பட்ட பின்னரே அவர்கள் நினைப்பார்கள். அத்தகைய ஒரு நேரத்தில் , மிதுன இராசிக்காரர்கள் உளறும்போது லிபரான் அவரது உணர்வுகளை புரிந்துகொள்ளும் போதுமான முதிர்ச்சி கொண்டிருப்பார்கள். சில நேரங்களில் மிதுன இராசிக்காரர்கள் வெளிப்படுத்தும் சில கூர்மையான கருத்துக்கள் மக்களைக் காயப்படுத்தலாம். லிபிரன்ஸ் தங்கள் பங்காளிகளாக இருப்பதால், அத்தகைய விஷயங்களை எளிதாக சமாளிக்கும் தன்மை கொண்டிருப்பார். மிதுன இராசிக்காரர்கள் சமூகத்துடன் கலப்பதில்லை. எனவே, ஒரு சமூகக் கூட்டத்தில் ஒன்றாக சேர்ந்து செல்லும்போது, லிபிரன்ஸ் சுற்றியுள்ள நண்பர்களை எளிதில் கவர்ந்திழுத்து அந்தக் குறையைப் போக்குவர்.
MOST READ: நீங்க மேஷ ராசியா? அப்போ திருமண உறவில் கட்டாயம் இந்த 5 பிரச்னைய சந்திச்சே ஆகணும்
மேஷம் மற்றும் கும்பம்:
உணர்வுபூர்வமான மேஷ இராசி வாழ்க்கைத் துணையை, உணர்ச்சிகளை எவ்வாறு கையாளுவது என நன்கு அறிந்த கும்ப இராசிக்காரர்கள் சிறந்த முறையில் கையாள முடியும். மேஷம் கோபத்தோடு வெளியேறும் போது, கும்பத்திற்கு அதை எப்படிக் கட்டுப்படுத்துவது என்பது தெரியும். மேஷம் நல்ல படைப்பு மற்றும் அற்புதமான யோசனைகளைக் கொண்டு வர முடியும் போது, கும்பம் அவை அனைத்தையும் செயல்படுத்தும் மேலாண்மைத் திறன் கொண்டிருக்கும். அதேபோல், கும்பத்துக்கு அழ ஒரு தோள்பட்டை தேவைப்படும்போது (மிகச் சில நேரங்களில்),மேஷம் தனது அனைத்து அன்பையும் பொழிந்து, மேஷத்தை பாதுகாப்பாகவும் நேசிக்கவும் தனக்காக ஒருவர் இருப்பதை உணரச் செய்கிறது.
கடகம் மற்றும் மேஷம்:
ஒருவருக்கொருவர் ஈர்க்கும் எதிர்ப்பின் மற்றொரு உதாரணம் இது. கடகம் தண்ணீராக இருக்கும்போது, மேஷம் நெருப்பாகும். மேஷம் துணிச்சலான, நம்பிக்கையுடனும், நெருப்பு போன்ற ஆர்வத்துடனும் இருக்கிறது. இதேபோல், கடகம் உணர்ச்சிபூர்வமாக மற்றும் பரிவுடன் இருப்பதால், தண்ணீரை ஒத்திருக்கிறது. மேஷம் கடகத்தை மேம்படுத்துவதன் மூலம் அவர்களுக்கு உதவுகிறது. இதேபோல், மேஷத்தில் தீப்பொறி பிரதானமாக மாறும் போது, கடகத்தால் அதை அமைதிப்படுத்த முடியும். இவ்வாறு இருவரும் ஒருவருக்கொருவர் குறைபாடுகளைச் சமாளிக்கிறார்கள்.
மீனம் மற்றும் கடகம்
இந்த இரண்டு ராசிகளும் தண்ணீரைப் போன்றது. இந்த ஒற்றுமையே அவர்களின் விஷயத்தில் பிரமாதமாக வேலை செய்கிறது. கடகம் சிம்பதெடிக் மற்றும் இவர்களுக்கு மீனத்துடனான உறவுகளில் ஒரு பிரச்சனை இருக்கிறது, ஏனெனில் சிறிய விஷயங்களுக்காகக் கூட புறக்கணிக்கப்படுவதாக உணர்கிறார்கள். ஆனால் அதை தவறு என்று உணர வைக்கும்படி நடந்து கொள்வர். இதைத் தவிர , அவர்கள் இருவரும் பாசம் , காதல் மற்றும் பொதுவாக மற்ற இராசிக்காரர்களை விட ஒருவருக்கொருவர் பொருந்தக்கூடிய தன்மையுடன் விளங்குவர்.
ரிஷபம் மற்றும் மகரம்
ரிஷபம் மற்றும் மகரம் பூமி என்னும் ஒரே தன்மையைப் பகிர்ந்து கொள்கின்றன . அவர்கள் இருவரும் நடைமுறைக்கேற்றவர்கள் மற்றும் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையின் வெளிப்புற நிகழ்ச்சியில் நம்பிக்கை கொள்ளாதவர்கள். இரண்டு ராசிகளும் ஒழுங்கமைக்கப்பட்ட வாழ்க்கை முறை கொண்டவை , நன்கு கட்டமைக்கப்பட்ட மற்றும் திட்டமிடப்பட்ட வழக்கமான வழியைப் பின்பற்றுவது போல வாழ்க்கையின் முன்னுரிமைகள் பற்றிய தெளிவு கொண்டவை . இரண்டு ராசிகளும் லட்சியம் கொண்டவை மற்றும் அவர்கள் நிறைவேற்ற வேண்டிய தெளிவான கனவுகளின் தொகுப்பைக் கொண்டவை . இவ்வாறு, இருவரும் கடினமாக உழைக்கிறார்கள், ஒன்றாக வாழ்க்கை முழுவதும் ஒருவருக்கொருவர் ஆதரவு தருகிறார்கள்.