Just In
- 25 min ago Mango Benefits: ஆண்கள் தினமும் ஒரு மாம்பழம் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்-ன்னு தெரியுமா?
- 1 hr ago கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
- 2 hrs ago திருப்பதிக்கு செல்லும் பக்தர்களுக்கு ஹப்பி நியூஸ்.. ஐஆர்சிடிசி அறிவித்த டூர் பேக்கேஜ்.. இதோ முழு விவரம்..!
- 2 hrs ago 12 ஆண்டுகளுக்கு பின் நிகழும் குரு சுக்கிர சேர்க்கை: மே மாசம் இந்த 3 ராசிக்கு தொழில் பிரகாசிக்கப் போகுது..
Don't Miss
- News தலைகீழாக திரும்புதே.. விவசாயிகளுக்கு குஷி.. இனி "ஸ்பாட் ஆக்ஷன்".. தமிழக அரசின் புது அதிரடி வருகிறது
- Automobiles ஃபார்ச்சூனர் கார் என்றாலே நம்ம மக்களுக்கு தனி பிரியம்!! விலை அதிகமா இருந்தாலும் ஷோரூமுக்கு படை எடுக்குறாங்க!
- Movies மாட்டிக்கினாரு ஒருத்தரு.. சமந்தாவின் மாஜி கணவர் அந்த நடிகையுடன் டேட்டிங்கா?.. தீயாய் பரவும் பிக்ஸ்!
- Finance வீட்டுக் கடன்: EMI செலுத்தாட்டி, வீடு ஏலம் விடப்படுமா? RBI சொல்வது என்ன? வங்கிகளின் அதிகாரம் என்ன?
- Technology கைக்கு 2 ஆர்டர்.. அவ்ளோ கம்மி.. AMOLED டிஸ்பிளே.. ப்ளூடூத் காலிங்.. ஹெல்த் டிராக்கர்கள்.. எந்த மாடல்?
- Sports இதுதான் ரியல் ட்விஸ்ட்.. ஓய்வுக்கு பின் சிஎஸ்கே அணியின் முக்கிய பதவிக்கு வரப்போகும் தல தோனி?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
தமிழை வளர்த்தவரும், வெள்ளையனே வெளியேறு உரைத்தவரும்!
தமிழை வளர்த்தவரும், வெள்ளையனே வெளியேறு உரைத்தவரும்!
இருபதாம் நூற்றாண்டின் முதல் தமிழ் ஆராய்ச்சியாளர் எஸ். வையாபுரிப்பிள்ளை. இவர் தமிழ் நூல் பதிப்புகளில் சிறந்த ஆசிரியராக விளங்கினார்.
ஆய்வு, திறனாய்வு, கால மொழி, மொழி பெயர்ப்பு, சொற்பொழிவு, புனைவுகள், கவிதைகள், கதைகள் என பல பரிமாணங்களில் திறமை பெற்றவர்.
இவர் சென்னை பல்கலைகழகம் வெளியிட்ட பேரகராதியின் ஆக்கக் குழு தலைவராக செயலாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இனி, இந்த நாள் அந்த வருடம் - அக்டோபர் 12
பிறப்பு !
1891 - தமிழறிஞர். எஸ். வையாபுரிப்பிள்ளை, பிறந்த தினம்!
- இவர் நெல்லை மாவட்டத்தில் இருக்கும் சிக்கநரசய்யன்பேட்டை என்ற ஊரில் பிறந்தவர். இவரது தந்தை சரவணப் பெருமாள் , தாயார் பாப்பம்மாள்.
- இவர் தனது பள்ளிப்படிப்பை பாளையங்கோட்டையிலும், கல்லூரி படிப்பை திருநெல்வேலியிலும், மேற்படிப்பை சென்னையிலும் முடித்தாய்.
- இவர் படித்து முடித்த அந்த ஆண்டில் சென்னை மாகாணத்தில் தமிழில் அதிக மதிப்பெண் சேதுபதி தங்க பதக்கம் வென்ற பெருமைக்கு உரியவர்.
- தமிழில் அதிக ஆர்வம் கொண்ட வையாபுரி பிள்ளை திருவனந்தபுரம் சட்டக் கல்லூரியில் படித்து வழக்கறிஞராகவும் பணியாற்றினார்.
- தமிழ் நூல்கள் குறித்து பல ஆய்வுகள் மேற்கொண்ட பெருமை கொண்டவர் இவர்.
- இந்தியர்களுக்கு ஏற்ப பொதுவுடைமை தத்துவங்களை மாற்றி அமைத்தவர்.
- வெள்ளையனே வெளியேறு உட்பட பல இந்திய விடுதலை போராட்டங்களில் பங்குகொண்ட போராட்ட வீரர்.
- இந்திய பொதுவுடைமை
- அரசியல்வாதிகளுக்கு ஆசானாக திகழும் நபர்.
- புரட்சிகரமான சிந்தனையாளர்.
- பொதுசெயலாளராக பிரஜா சோஷலிஸ்ட் கட்சியில் பணியாற்றினார்.
- பெர்லின் பல்கலைகழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர்.
- பொதுவாழ்க்கையில் தன்னை அர்ப்பணித்து கொண்டு, கடைசி வரை திருமணமே செய்துக் கொள்ளாதவர்.
இறப்பு!
1967 - இந்திய அரசியல்வாதி ராம் மனோகர் லோகியா, இறந்த தினம்!
முதல் முறை!
தமிழ்நாட்டில் முதல் செய்தி தாளான (பத்திரிக்கை) மெட்ராஸ் கொரியர் என்ற வாரத்திற்கு ஒரு நாள் வெளியாகும் வார இதழ் ரிச்சர்ட் ஜான்சன் என்பவரால் துவக்கப்பட்ட தினம் இன்று - 1785
முதல் முறை ஒரே விண்கலத்தில் பல விண்வெளி வீரர்கள் பயணித்த நிகழ்வு நடந்த தினம் இன்று (1964) சோவியத் ஒன்றியம் வஸ்கோத் 1 விண்கலம் மூலம் இந்த நிகழ்வை நடத்தியது.
நிகழ்வுகள் !
எக்குவட்டோரியல் கினி எனும் நாடு ஸ்பெயினிடம் இருந்து விடுதலை பெற்ற தினம் இன்று - 1968.
இந்தியாவில் தேசிய உரிமை ஆணையம் அமைக்கப்பட்ட நாள் இன்று - 1993.
உலக மக்கள் தொகை ஆறுநூறு கோடிகளை எட்டிய தினம் இன்று - 1999.