Just In
- 35 min ago சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் மே 19 வரை இந்த ராசிக்காரர்களுக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- 1 hr ago இந்த 4 ராசிக்காரங்களோட முதல் எதிரியே அவங்க ஈகோதானாம்... ஈகோவாலேயே நிறைய விஷயங்களை இழந்துருவாங்களாம்!
- 2 hrs ago ஒருடைம் உருளைக்கிழங்கு குருமாவை இந்த ஸ்டைலில் செய்யுங்க.. அப்புறம் பாருங்க இப்படிதான் எப்பவும் செய்வீங்க..
- 5 hrs ago Today Rasi Palan 24 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பிறர் பிரச்சனைகளில் தலையிடாமல் இருந்தால் நல்லது...
Don't Miss
- Sports "இந்தியாவின் ஒரே பாட்ஷா" சச்சினின் 51வது பிறந்தநாள்.. கொண்டாடும் தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா!
- Finance தங்கம் விலை இறங்கிய வேகத்தில் ஏறியது.. ஒவ்வொரு நிமிடமும் முக்கியம்..!!
- News சூப்பரான சான்சை விட்டுடாதீங்க.. முக்கிய ராசிக்கு அடிக்க போகும் பம்பர் யோகம்.. குரு பெயர்ச்சி பலன்கள்
- Technology இதுதாங்க பட்ஜெட்.. ரூ.9999 போதும்.. 12GB ரேம்.. 1TB மெமரி.. 5000mAh பேட்டரி.. 15W சார்ஜிங்.. எந்த மாடல்?
- Movies இப்படி செய்வீங்கணு நினைக்கல..கல்யாணமே பண்ணியிருக்க மாட்டானே.. மேடையில் ஓபனா பேசிய ரெடின் கிங்ஸ்லி!
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Automobiles ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
நவராத்திரி ஒவ்வொரு நாளும் என்னென்ன அலங்காரம் செய்ய வேண்டும் என்று தெரியுமா ?
ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் நவராத்திரி அன்று ஒவ்வொரு நாளும் என்னென்ன அலங்காரம் செய்ய வேண்டும் என்று தெரியுமா?
நவராத்திரி விழா துவங்குவதற்கு இன்னும் சில தினங்களே இருக்கிறது. இந்நிலையில் நவராத்திரி குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.சக்தியின் அம்சங்களாக எண்ணி நவராத்திரியில் பூசிப்பவர்களுக்கு சகல நலங்களையும் கிடைக்கும்.
ஒன்பது நாட்கள் மூன்று மூன்றாக பிரித்து கொண்டாடப்படுகிறது.
மூன்று மூன்றாக பிரிக்க காரணம் :
நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் லட்சுமிக்கும் அடுத்த மூன்று நாட்கள் சக்திக்கும் கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதிக்கும் கொலு கொண்டாடுவார்கள். இதற்கு காரணம் என்ன தெரியுமா?
வாழ்க்கைக்கு தேவை பணம்.இதைப் பெறுவதற்கு லட்சுமியை முதலில் துதிக்கிறோம். அதனை பாதுகாக்க அதற்குரிய தைரியத்தையும், வழ்முறையையும் வேண்டி சக்தி வேண்டி துர்க்கை, காளி என காவல் தெய்வத்தை வணங்குகிறோம்.
கிடைக்கும் பணத்தை பயனுள்ள காரியங்களுக்கு பயன்படுத்து வேண்டுமே, அதற்காக அறிவு வேண்டி சரஸ்வதியை வணங்குகிறோம்.
முதல் மூன்று நாள் :
சக்தித்தாயை முதல்நாளில் சாமுண்டியாக கருதி வழிபடவேண்டும். முண்டன் என்ற அசுரனை சம்ஹாரம் செய்த சக்தி அவள். இதனால் சாமுண்டா எனவும் அழைப்பர். இவள் மிகவும் கோபக்காரி. நீதியைக் காக்கவே இவள் கோபமாக உள்ளாள்.
இரண்டாம் நாளில் அன்னையை வராஹி தேவியாக கருதி வழிபடவேண்டும். ஏவல், பில்லி சூனியம், எதிரிகள் தொல்லையிலிருந்து விடுபட இவளின் அருளைப் பெறுவது அவசியம்.
மூன்றாம் நாளில் சக்தித்தாயை இந்திராணியாக வழிபட வேண் டும். இவளை மாஹேந்தரி, சாம் ராஜ தாயினி என்றும் அழைப்பர். இவள் இந்திரனின் சக்தி ஆவாள். பெரிய பெரிய பதவிகளை அடைய விரும்புபவர்களிற்கு இவளின் அருட்பார்வை வேண்டும்.
நான்கு, ஐந்து, ஆறு :
இன்று வைஷ்ணவி தேவியாக வழிபட வேண்டும். ஐந்தாம் நாளில் அன்னையை மகேஸ்வரி தேவி யாக வழிபடவேண்டும். இவள், அளக்கமுடியாத பெரும் சரீரம் உடையவள். சர்வ மங்களம் தருபவள். கடின உழைப்பாளிகள் உழைப்பின் முழுப்பலனை பெற அன்னையின் அருள் அவசியம் வேண்டும்.
ஆறாம் நாள் அன்னையை கவுமாரி தேவியாக வழிபடவேண்டும். சகல பாவங்களையும் விலக்கிடுபவள்,வீரத்தை தருபவள்.
ஏழு,எட்டு,ஒன்பது :
ஏழாம் நாள் அன்னையை மகாலட்சுமியாக வழிபட வேண்டும். தாமரை ஆசனத்தில் அமர்ந்து சகல ஐஸ்வரியங்களையும் தருபவள் இவள். எட்டாம் நாள் அன்னையை நரசிம்ஹி ஆக வழிபடவேண்டும்.
ஒன்பதாம் நாள் அன்னையை ப்ராஹ்மி ஆக வழி பட வேண்டும். கல்விச் செல்வம் பெற அன்னையின் அருள் அவசியமாகும்.
நவராத்திரி பெண்களின் பண்டிகையா ? :
நவராத்திரி என்பது பெண் தெய்வங்களுக்குரிய பண்டிகை போலவும், பெண்கள் மட்டுமே இந்த விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும் என்பது போலவும் ஒரு எண்ணம் நிலவுகிறது.
இதனை ஆண்களும் அனுஷ்டிக்கலாம். ஏனென்றால் எல்லா சக்திகளும் ஆண் தெய்வங்களின் பெண் சக்தியாகவே கருதப்படுவதால் யார்வேண்டுமானாலும் வணங்கலாம்.