Just In
- 2 hrs ago Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- 8 hrs ago 18 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- 9 hrs ago Garlic Peels: பூண்டின் தோலில் இவ்வளவு நன்மைகளா? என்னென்ன-ன்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..
- 9 hrs ago Hair Care: பளபளப்பான மற்றும் வலிமையான முடி வேணுமா? கற்பூரத்தை இப்படி யூஸ் பண்ணுங்க... சர சரனு வளரும்...!
Don't Miss
- Movies இதுதான் ரியல் 20 இயர்ஸ் சேலஞ்ச்.. விஜய்யுடன் தரணி.. வேறலெவல் கில்லி ரீ ரிலீஸ் கொண்டாட்டம்!
- News ரேஷன் அரிசி கடத்தும் ஆளுங்கட்சி புள்ளி "பாம்பு" கார்த்திக்.. விவகாரத்தை கையில் எடுத்த அண்ணாமலை!
- Sports IPL Points Table -மும்பையின் பிளே ஆப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த டெல்லி! சிஎஸ்கேக்கு சவால் விட்ட பண்ட்
- Automobiles இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!
- Technology Youtube சோலி முடிஞ்சு.. இறங்கி அடிச்ச எலான் மஸ்க்.. AI அம்சம்.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய ஆப்..
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
பல் ஈறுகளில் பச்சை குத்திக் கொள்ளும் வினோத சடங்கு முறை!
பச்சை குத்திக் கொள்வது என்பது தற்போது வழக்கமாக இருக்கிறது. ஆப்பிரிக்காவைச் சேர்ந்த பெண்கள், தங்களை அழகாக காட்டிக் கொள்ள ஈறுகளில் பச்சை குத்திக் கொள்கிறார்கள்.
பற்களை பாதுகாப்பது, அவற்றை பராமரிப்பது என்பது மிகவும் அவசியமானது. இதனை கண்டுகொள்ளாமல் விடுவதால் தொற்று ஏற்ப்பட்டு பல விதமான நோய்கள் உண்டாகிறது. இதனை தவிர்க்கும் பொருட்டு பற்களை எல்லாரும் பராமரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக வருந்தோறும் இன்றைய தினம் தேசிய பற் பாதுகாப்பு தினமாக கொண்டாடப்படுகிறது.
பச்சைக் குத்திக் கொள்வது இன்றைக்கு ஒரு பேஷனாகி விட்டது. சிலர் உடல் முழுவதும் பச்சைக் குத்திக் கொள்வார்கள். ஆனால் இதுவரை நீங்கள் கேள்விப்படாத வகையில் பற்களின் ஈறுகளில் பச்சைக் குத்திக்கொள்கிறார்கள் ஆப்பிரிக்க மக்கள்.
ஆப்ரிக்கா :
ஆப்ரிக்காவில் உள்ள மேற்கு பகுதியில் சென்கல் என்ற பகுதியில் உள்ள பெண்கள் அதிகமாக ஈறுகளில் பச்சை குத்திக் கொள்கிறார்கள். குறிப்பிட்ட எந்த டிசைனும் இல்லாத ஒரே மாதிரிபச்சை குத்திக் கொள்கிறார்கள். ஈறுகளில் பச்சை குத்திக் கொள்வது, கருப்பு நிறத்தில் இருக்கிறது.
இப்படி பச்சைக் குத்திக் கொள்வது தான் அழகு என்றும் நினைக்கிறார்கள்.
நடைமுறை :
நெடுங்காலமாக நடைப்பெற்று வரும் இந்த வழக்கத்தை அங்கிருக்கும் பெண்கள் கடைபிடிக்கிறார்கள். வயதான பெண்மணி ஒருவர், தன் மடியில் படுக்க வைத்து இப்படி பச்சை குத்துகிறார். ஒரு வகையான திரவ எண்ணெய் இதற்கு பயன்படுத்தப்படுகிறது.
மிகச்சிறிய ஊசியை கொண்டு ஈறுகளில் குத்துகிறாள். சிலர் வலி தாங்காமல் அலற அவர்களை சமாதானப்படுத்திக் கொண்டே தொடர்ந்து குத்துகிறார்கள். அதற்கு மேல் கருப்பு நிற வண்ணத்தை பூசுகிறார்கள்.
7 லேயர்கள் :
ஒவ்வொருவரின் விருப்பத்திற்கு ஏற்றப்படி பல லேயர்கள் வைக்கப்படுகிறது. குறைந்தது எல்லாரும் 7 லேயர்கள் வரை பூசிக் கொள்வார்களாம். ஆனால் மூன்று லேயர்களை தாண்டும் போதே வலி அதிகமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
பற்கள் பாதுகாப்பு :
இந்த நடைமுறை பற்களையும் பாதுகாக்கும் என்று சொல்கிறார்கள். ஈறு வலி, ஈறுகளில் ரத்தக்கசிவு ஆகியவை ஏற்படாது என்கிறார்கள். வலி அதிகமாக இருப்பதால் பெரும்பாலானோர் தவிர்த்து வருகிறார்கள். ஆனாலும் தங்களை அழகாக காட்டிக் கொள்ள ஈறுகளில் பச்சை குத்திக் கொள்வது தொடர்கிறது.