Just In
- 1 hr ago இந்தியாவின் டாப் 10 ஏழை மாநிலங்கள் என்னென்ன தெரியுமா? கடைசி இடத்துல இருக்கிறத பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க...!
- 2 hrs ago உங்களுக்கான அதிர்ஷ்ட மோதிரம் எது தெரியுமா? தங்கமா, வெள்ளியா?
- 3 hrs ago ஜோதிடத்தில் திசை என்றால் என்ன? உங்களுக்கு என்ன திசை நடக்கிறது? அதனால் கிடைக்கும் பலன்கள்..!
- 3 hrs ago 11 வயது சிறுமியை அம்மாவும்-மகனும் சேர்ந்து கடத்திய வினோதம்... எதுக்காக கடத்துனாங்க தெரியுமா?
Don't Miss
- Finance நரேந்திர மோடி ஆட்சி மீண்டும் பிடித்தால்.. முதல் வேலையாக 3 அரசு நிறுவன பங்குகளை விற்பது தான்..!
- Movies விரட்டி விட்ட விஷால்.. கடுப்பான பயில்வான் ரங்கநாதன்.. மனுவே நிரப்ப தெரியாது என மரண கலாய்!
- News ‛‛திமுக கண்ணில் வந்த தோல்வி பயம்’’.. வாக்காளர்கள் பெயர்களை நீக்கியது ஏன்? எல் முருகன் விமர்சனம்
- Technology 75 நாளுக்கு ஒரே ரீசார்ஜ்.. தினசரி டேட்டா.. அன்லிமிடெட் வாய்ஸ் கால் நன்மை.. ரூ.500 விலைக்குள் எந்த திட்டம்?
- Sports வன்மத்தை கக்கிட்டாரு.. தோனியை வம்புக்கு இழுத்த கவுதம் கம்பீர்.. கொந்தளிக்கும் சிஎஸ்கே ரசிகர்கள்!
- Automobiles 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
பொங்கலுக்கு கடைப்பிடிக்கப்படும் சடங்குகள்!!!
பொங்கல் என்பது தென் இந்தியாவில் கொண்டாடப்படும் ஒரு புகழ் பெற்ற அறுவடை திருவிழாவாகும். வளர்ந்து வளரும் நவீன உலகத்தில் கலாச்சாரமும் சடங்குகளும் மாறி கொண்டிருந்தாலும் கூட இந்த திருவிழா மீது இருக்கும் ஆர்வம் அப்படியே தான் உள்ளது. இது அறுவடை திருவிழா என்பதால், புது பயிர்களை அறுவடை செய்து, சமைத்து கடவுளுக்கு முதலில் படைக்கப்படும்.
இத்திருவிழா தொடர்ந்து நாலு நாட்களுக்கு கொண்டாடப்படும். பொங்கல் திருவிழாவின் ஒவ்வொரு நாளும் ஒரு தனித்துவமான சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்களை கொண்டுள்ளது. பண்டிகையின் முதல் நாள் போகி பொங்கல் என்று அழைக்கப்படுகிறது. அதிகமாக அறுவடை செய்ய, இந்நாளில் குடும்ப உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து இந்திர பகவானை வணங்குவார்கள்.
சுவாஸ்யமான வேறு சில: பொங்கல் பண்டிகையை கொண்டாடுவது எதற்கு தெரியுமா?
பண்டிகையின் இரண்டாவது நாளை சூர்ய பொங்கல் என்று அழைப்பார்கள். அறுவடை சிறப்பாக நடந்திட உதவிடும் சூரியனை இந்நாளில் வணங்குவார்கள். பண்டிகையின் மூன்றாவது நாளை மாட்டுப் பொங்கல் என்று அழைப்பார்கள். இந்நாளில், மாடு மேய்ப்பவர்கள், தங்களின் மாடுகள் மற்றும் காளைகளுக்கு நன்றியை செலுத்துவார்கள். பண்டிகையின் நான்காம் நாளை காணும் பொங்கல் என்று அழைப்பார்கள்.
இதுப்போன்று வேறு சில: பொங்கலுக்கு கொண்டாடப்படும் பாரம்பரிய விளையாட்டுக்கள்!!!
கடைசி நாளில் தான் சொந்த பந்தங்களை பார்க்க அவர்கள் வீட்டிற்கு செல்வார்கள். இந்தியாவில் கொண்டாடப்படும் ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒவ்வொரு விதமான சடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. இத்திருவிழக்களின் வலிமையை காத்திட பழங்காலத்தில் இருந்து கடைப்பிடிக்கப்படும் சடங்குகள் இன்றளவும் கூட கடைப்பிடிக்கப்படுகிறது. பொங்கல் பண்டிகையும் இதற்கு விதிவிலக்கு அல்ல. அதனால் பொங்கல் பண்டிகையில் பின்பற்றப்படும் சடங்குகளை இப்போது பார்க்கலாமா?
சூர்ய பூஜை
பொங்கல் பண்டிகையில் வழிபடப்படும் முக்கிய கடவுள் சூரிய பகவான். அதனால் சூரிய பகவானை வழிப்படுவதை சுற்றி தான் அனைத்து சடங்குகளும் நடைபெறும். பொங்கலன்று வீட்டிற்கு வெளியே இப்பூஜை நடைபெறும்.
பொங்கல் கோலம் போடுவது
பூஜைக்காக தேர்ந்தெடுக்கப்படும் இடத்தை நன்றாக சுத்தம் செய்த பின்னர், அங்கே சூரிய கோலம் போடப்படும். வெள்ளை கோல மாவை கொண்டு ரங்கோலி வகை போல் போடப்படுவது தான் கோலம் என்பதை நாம் அனைவருமே அறிவோம். சூரிய பகவானின் முகமும் கோலத்துடன் சேர்ந்து வரையப்படும். மயில், கரும்பு, பொங்கும் பொங்கல் மற்றும் வளமையை குறிக்கும் படங்களையும் கோலமாக போடுவார்கள்.
உணவு
பொங்கல் பூஜையில் உணவுகளும் முக்கிய பங்கை வகிக்கிறது. இந்நநாளில், வீட்டிற்கு வெளியே சர்க்கரைப் பொங்கல் விசேஷமாக செய்யப்படும். மூன்று கரும்புகள் ஒன்றாக கட்டப்பட்டு செங்குத்தாக நிறுத்தப்படும். மஞ்சள் செடி கட்டப்பட்ட பானையில் சர்க்கரைப் பொங்கல் சமைக்கப்படும்.
வழிபாடு (இறை வணக்கம்)
பொதுவாக பொங்கல் கொண்டாடும் போது சூர்ய அஷ்டோடரம் அல்லது காயத்ரி மந்திரம் ஓதப்படும்.
பூஜைகளுக்கு பின்
போச்சி முடிந்தபின், புனித நீரும், பூக்களும் கோலத்தின் மீதும் சர்க்கரைப் பொங்கலின் மீதும் தெளிக்கப்படும். கடைசி வழிபாடு முடிந்த பின் அனைவருக்கும் உணவு பரிமாறப்படும்.
சூரிய பிரதிபலிப்பு
தென் இந்தியாவின் சில பகுதிகளில், தண்ணீர் நிரப்பியுள்ள ஒரு பாத்திரத்தில் விழும் சூரியனின் பிம்பத்தை பார்க்கும் சடங்கு ஒன்று உள்ளது. சில சமுதாயனத்தினர் அந்த நீரில் மஞ்சளையும் குங்குமத்தையும் கலந்து, அந்த நீரில் சூரிய பிம்பத்தை பார்ப்பார்கள். கை விரல்களின் இடைவெளி வழியாக சூரியனை பார்ப்பது மற்றொரு தனித்துவமான சடங்காக கடைப்பிடிக்கப்படுகிறது.