Just In
- 17 min ago
இந்த ராசிக்காரங்க முதல் பார்வையிலேயே காதலில் விழுந்துவிடுவார்களாம்…நீங்க எந்த ராசி?
- 3 hrs ago
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை தரிசிப்பதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?
- 3 hrs ago
மிஸ் யுனிவர்ஸ் 2019 பட்டம் பெற்ற தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த சோசிபினி பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்..
- 5 hrs ago
திருவண்ணாமலை அஷ்ட லிங்கங்கள் - எந்த ராசிக்காரர்கள் எந்த லிங்கத்தை கும்பிடணும் தெரியுமா?
Don't Miss
- Sports
நான் தலைவராக தொடர மாட்டேன் .. பிடிவாதம் பிடிக்கும் ஐசிசி தலைவர்.. ஷாக்கிங் காரணம்!
- Movies
சன்னி லியோனை பின்னுக்குத் தள்ளிய சோனாக்ஷி.. இந்த ஆண்டு ட்விட்டரை கலக்கிய டாப் 10 பெண்கள் இவங்கதான்!
- Automobiles
போதையில் டிரிபிள் ரைடு சென்ற இளைஞர்கள்... திடீரென மாயமாகிய அதிர்ச்சி.. வைரல் வீடியோ..!
- News
தாய்ப்பால் ஊட்டும் வாலிபால் வீராங்கணை.. வைரலாகும் போட்டோ.. சல்யூட் அடித்த அமைச்சர்
- Finance
பேங்க் ஆப் இந்தியா வாடிக்கையாளரா நீங்க.. உங்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்..!
- Education
பி.இ பட்டதாரிகளும் ஆசிரியர் ஆகலாம்! தமிழக அரசின் அறிவிப்பால் மகிழ்ச்சியடைந்த பொறியாளர்கள்!
- Technology
அட்டகாசமான ரெட்மி கே30 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
தீபாவளியப்ப இதுல ஒரு பொருள் வாங்குனாலும் உங்களுக்கு நல்ல நேரம் ஸ்டார்ட் ஆகுமாம் தெரியுமா?
ஒவ்வொரு பண்டிகையின் போதும் நாம் வாங்க வேண்டிய பொருட்கள் என்று பல இருக்கும். வீட்டு அலங்கார பொருட்கள் முதல் நமது தனிப்பட்ட தேவைகள் வரை நாம் நிறைய ஷாப்பிங் செய்கிறோம் ஆனால் நமது அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும் பொருட்களை வாங்குவது பற்றி நாம் எப்போதாவது சிந்தித்து இருக்கிறோமா?
தீபாவளியின் போது நாம் வாங்கும் சில பொருட்கள் நமது அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? உண்மைதான் பண்டிகையின் போது வாங்கும் இதுபோன்ற பொருட்கள் நமது வாழ்க்கையில் நேர்மறை ஆற்றலையும், அதிர்ஷ்டத்தையும் அதிகரிக்கும். இந்த பதிவில் எந்தெந்த பொருட்கள் உங்களின் அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும் என்று பார்க்கலாம்.

உங்கள் துறை சார்ந்த பொருட்கள்
எழுத்தாளர்களுக்கு பேனா, ஓவியர்களுக்கு தூரிகை போன்ற அவரவர் துறை சார்ந்த பொருட்களை வாங்குவதை உறுதிசெய்து கொள்ளவும். தீபாவளி பூஜையின் போது இந்த பொருட்களை உங்கள் பூஜையுடன் சேர்த்து வைத்துக்கொளுங்கள், இது உங்கள் துறையில் உங்களுக்கு பெரிய முன்னேற்றத்தைக் கொடுக்கும்.

துடைப்பம்
இது உங்களுக்கு மிகவும் விசித்திரனமானதாக தெரியலாம், ஆனால் தீபாவளியின் போது துடைப்பம் வாங்குவது மிகவும் புனிதமானதாககருதப்படுகிறது. இது ஒருவரின் வீட்டில் இருக்கும் வறுமை மற்றும் துன்பங்களை விரட்டும் என்று கூறப்படுகிறது. இது உங்கள் செழிப்புக்கான வாய்ப்புகளை பிரகாசமாக்குகிறது.

எலக்ட்ரானிக் பொருட்கள்
எலக்ட்ரானிக்ஸில் முதலீடு செய்ய நீங்கள் திட்டமிட்டால் இதுவே சிறந்த நேரம், ஏனெனில் இந்த ஆண்டின் பெரும்பாலான விற்பனைகள் இந்த நாளில்தான் நடக்கும். எனவே, நீங்கள் மின்னணு பொருட்களை வாங்க காத்திருந்தால், அதை வாங்க இதுவே சிறந்த நாள். நேர்மறை ஆற்றலைப் பெற, நீங்கள் அவற்றை வீட்டின் வடகிழக்கு திசையில் வைக்க வேண்டும்.
MOST READ: தீபாவளிக்கு உங்கள் சமையலறையை ஈஸியா சுத்தம் பண்றது எப்படினு தெரியுமா?

கணக்கு புத்தகம்
வியாபாரம் தொடர்பான வேலைகளில் இருப்பவர்கள் இந்த நாளில் கணக்கு புத்தகம் வாங்குவது நல்லது. அவர்களின் கணக்குகளை பராமரிக்கவும், புதிய கணக்குகளை தொடங்கவும் இதுதான் சிறந்த நாளாகும். சிறந்த முடிவுகளுக்கு, அவர்கள் அதை வீட்டின் மேற்கு திசையில் வைக்க வேண்டும்.

வெள்ளி பாத்திரங்கள்
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியின்போது, மக்கள் பாத்திரங்களாக வாங்குவதைக் காணலாம், இதனை மக்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். அதிர்ஷ்டம் பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த நாளில் வெள்ளி பாத்திரங்களை வாங்க வேண்டும். நேர்மறை ஆற்றலை ஈர்க்க, ஒருவர் தங்கள் வீடுகளின் கிழக்கு திசையில் அவற்றை வைத்திருக்க வேண்டும்.

தங்க நாணயம்
லக்ஷ்மி தேவியுடன் பொறிக்கப்பட்ட தங்க நாணயத்தை வாங்க வேண்டும் என்று உறுதியாக நம்பப்படுகிறது. உங்களால் தங்க நாணயத்தை வாங்க முடியாவிட்டால் குறைந்தது ஒரு லக்ஷ்மி தேவி படத்தை வாங்கி உங்கள் லாக்கரில் வைக்கவும்.

சங்கு
உங்கள் வீட்டில் சங்கு வைத்திருப்பது உங்கள் அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது. இது அனைத்து சடங்குகளுடன் வழிபடும்போது, அது உங்கள் வீடு அல்லது பணியிடத்தில் நேர்மறை ஆற்றலை உருவாக்குகிறது. தீபாவளியின் போது இதனை தங்கள் வீட்டில் வைத்திருப்பவர்கள் தங்கள் வாழ்க்கையில் எந்த பணக்கஷ்டத்தையும் சந்திக்க மாட்டார்கள் என்று கூறப்படுகிறது.
MOST READ: துலாம் ராசிக்காரங்களோட இந்த குணம்தான் எல்லாருக்கும் இவங்கள பிடிக்க காரணமாம் தெரியுமா?

தக்ஷினவர்த்தி சங்கு
இந்த சங்கு மிகவும் அரிதான ஒன்றாகும், இது லக்ஷ்மி தேவியுடன் நெருங்கிய தொடர்புடையது. விஷ்ணு மற்றும் லக்ஷ்மி இருவரும் தங்கள் கையில் இதனை எப்போதும் வைத்திருப்பார்கள். உங்கள் வாழ்க்கையில் செல்வம் அதிகரிக்க இதனை உங்கள் வீட்டில் வைத்துக்கொள்வதை உறுதிசெய்து கொள்ளுங்கள். இந்த சங்கில் பால் ஊற்றி அதனை உங்கள் வீட்டின் அனைத்து மூலைகளிலும் தெளிக்கவும். இது உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எதிர்கொள்ளும் அனைத்து பிரச்சினைகளில் இருந்தும் பாதுகாக்கும்.