For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனாவால் ஏற்பட போகும் வேலை இழப்புகள்... உங்கள எத்தனை ஆண்டுகள் பின்னோக்கி இழுக்கப்போகிறது தெரியுமா?

கொரோனா வைரஸின் தாக்கத்தால், உலகம் முழுவதும் பெரும் அழிவை சந்தித்து வருகிறது. உயிரிழப்புகளும், பொருளாதார சிக்கல்களுக்கும் பல நாடுகள் ஆளாகி தவிக்கின்றன.

|

உலகையே உலுக்கி கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தன்னுடைய கோரத்தாண்டவத்தை உலகம் முழுவதும் காட்டி வருகிறது. கோடி கணக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து கொரோனா அச்சுறுத்தலின் காரணமாக முடங்கி கிடக்கிறார்கள். உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்கப்பட்டிருக்கும் எங்களை பொருளாதார ரீதியாகவும் பின்னுக்கு தள்ளியுள்ளது என்று புலம்புகிறார்கள் மக்கள். சுகாதார அபாயங்களுடன், பொருளாதார அபாயங்களும் சேர்ந்து உலகையே உலுக்கி வருகிறது.

coronavirus-pandemic-might-set-back-your-career-by-3-years-o

இதில், பெரும்பாலும் நடுத்தர வர்க்க மக்களும், ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையும் மிகவும் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளது. சமீபத்திய தரவுகளின்படி, தொற்றுநோய் தொடங்கி நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் இருந்து அமெரிக்காவில் வேலையின்மை 3.5% முதல் 15% வரை உயர்ந்துள்ளது. அதன் பின்னர் வேலையின்மை விகிதம் மேலும் அதிகரித்து வருகிறது. இந்தியாவிலும், தொழில்களில் உள்ள பலர் 5% முதல் 60% மற்றும் அதற்கு மேற்பட்ட சம்பள குறைப்புக்கு உட்படுத்தப்பட்டனர். துரதிர்ஷ்டவசமாக பலர் வேலையை இழந்துள்ளனர். இதுகுறித்து இக்கட்டுரையில் விரிவாக காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஊடகங்கள் மற்றும் ஐ.டி ஊழியர்கள்

ஊடகங்கள் மற்றும் ஐ.டி ஊழியர்கள்

கொரோனா வைரஸின் தாக்கத்தால், உலகம் முழுவதும் பெரும் அழிவை சந்தித்து வருகிறது. உயிரிழப்புகளும், பொருளாதார சிக்கல்களுக்கும் பல நாடுகள் ஆளாகி தவிக்கின்றன. உலகம் முழுவதும் உள்ள நாடுகள் பெரும் பொருளாதார நெருக்கடியை சந்திக்க வேண்டியுள்ளது. இதனால், உலக மக்கள் லட்சகணக்கானோர் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவித்து வருகின்றனர். இந்நிலையில், பல நாடுகளில் லட்சகணக்கான மக்கள் வேலையை இழந்துள்ளனர். இந்தியாவில் 12 லட்ச மக்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

MOST READ:அறிகுறியே இல்லாமல் கொரோனா தொற்று ஏற்படுவதற்கான காரணம் என்ன? உங்கள எப்படி பாதுகாத்துக்கனும்...!

இருண்ட கண்ணோட்டம்

இருண்ட கண்ணோட்டம்

ஊடக நிலைமையும் கொரோனாவால் தலைகீழாக மாறியுள்ளது. பல பத்திரிக்கைகளும், இதழ்களும் பெரும் பொருளாதார இழப்பை சந்தித்து வருகின்றன. இன்னும் ஆறு மாதங்களில் நிலைமை இன்னும் மோசமாகிவிடும் என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள். இது குறுகிய காலத்தில் எதிர்காலத்தை நோக்கி ஒரு இருண்ட கண்ணோட்டத்தை வெளிப்படுத்துகிறது.

அறிக்கை

அறிக்கை

மூன்று இந்தியர்களில் ஒருவர் தங்களின் தனிப்பட்ட வருமானத்தில் குறைவு ஏற்பட்டுள்ளதாகக் காட்டியுள்ளன புள்ளிவிவரங்கள். அதேசமயம் 48 சதவீதம் சுறுசுறுப்பான வேலை தேடுபவர்களும் 43 சதவீத முழுநேர தொழில் வல்லுநர்களும் அடுத்த இரண்டு வாரங்களில் குறைவான வேலை வாய்ப்புகளை எதிர்பார்க்கிறார்கள் என்று ஐஏஎன்எஸ் அறிக்கை தெரிவித்துள்ளது .

மோடி அறிவிப்பு

மோடி அறிவிப்பு

கடந்த மார்ச் மாதம் நாடு முழுவதும் ஊரடங்கை அறிவிக்கும் போது, பிரதமர் நரேந்திர மோடி முதலாளிகளுக்கு தங்கள் ஊழியர்களின் சம்பளத்தை குறைக்க வேண்டாம் என்றும் ஊழியர்களை பணிநீக்கம் செய்வதை தடை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். துரதிர்ஷ்டவசமாக, பிரதமரின் இந்த கோரிக்கையை யாரும் கேட்கவில்லை. முன்பெப்போதும் இல்லாத வகையில் 5% முதல் 60% மற்றும் அதற்கு மேற்பட்ட சம்பளத்தைகுறைக்கும் சம்பவங்கள் நடந்தன. இன்னும் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், பல நிறுவனங்கள் ஊழியர்களுக்கு மின்னஞ்சல்கள் அல்லது கடிதங்கள் மூலம் முறையாக தெரிவிக்காமல் இதை செய்துகொண்டிருக்கின்றன.

MOST READ: குழந்தைகள் மூலம் பெரியவர்களுக்கு கொரோனா பரவுமா? ஆய்வு என்ன சொல்லுகிறது?

வாழ்வாதாரத்தை இழக்கும் மக்கள்

வாழ்வாதாரத்தை இழக்கும் மக்கள்

இதனால் அவர்களின் மோசமான நடவடிக்கைகள் ரேடரின் கீழ் வராது. சில ஊடக நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை ஊதியமின்றி காலவரையற்ற விடுப்பில் செல்லும்படி கேட்டுக் கொண்டன. அதுபோல சில நிறுவனங்கள் ஊழியர்களை வேலையை விட்டு போக சொல்லிவிட்டனர். மேலும் ஒரு பிரபலமான ஹோட்டல் ஒன்றில் ஊழியர்களுக்கு ஒரு மாத ஊதியத்துடன் சேவையில் இருந்து தானாகவே ஓய்வு பெறுவதற்கான வாய்ப்பை வழங்கியுள்ளது. பொருளாதார நெருக்கடியால், நிறைய பேர் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து வருகின்றனர்.

3 ஆண்டுகள் பின்னுக்குத் தள்ளியுள்ளது

3 ஆண்டுகள் பின்னுக்குத் தள்ளியுள்ளது

ஒரு துறைசார்ந்த நிறுவனத்தில் பணிபுரிபவர் நிஷா (பெயர் மாற்றப்பட்டுள்ளது}. நிஷாவிற்கும் அவரது அலுவலகத்தில் பணிபுரியும் சில நண்பர்களுக்கும், மேலாளரிடமிருந்து ஒரு அழைப்பு வந்தபோது அது நீல நிறத்தில் இருந்து வந்தது. அதில், "நிறுவனம் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்கும் வரை உங்களது சம்பளத்திலிருந்து ரூ .10,500 கழிக்கப்படும்" என்று அறிவித்தார். அத்துடன், இந்த ஆண்டிற்கான போனஸ் மற்றும் சம்பள அதிகரிப்பு என எதுவும் இருக்காது என்றும் அறிவித்திருந்தார். மேலும் இது ஒரு சம்பள குறைப்பு மட்டும்தான், வேலை இழப்பு அல்ல என்கிறார். எங்களுக்கு மிக அதிர்ச்சியாக இருந்தது இந்த செய்தியை கேட்டு என்கிறார் நிஷா. மேலும் பொருளாதார ரீதியாக என்னுடைய வாழ்க்கையில் 3 ஆண்டுகள் பின்னோக்கி சென்றதை போல இருக்கிறது.

நேரம் பாராமல் உழைக்கிறோம்

நேரம் பாராமல் உழைக்கிறோம்

"ஒரு வாடகை வீட்டில் தங்கியிருக்கிறேன், அந்த வகையான தொகை, உணவு பொருட்கள் மற்றும் மருத்துவ செலவுகள் என பார்க்கும்போது, எப்படி என்னுடைய அன்றாட வாழ்க்கையை நகர்த்துவது என்றே தெரியவில்லை." என்கிறார் நிஷா. மேலும் தனது இந்த முழு ஆண்டு முதலீட்டையும் இந்த சம்பளத்தை வைத்து எப்படி திட்டமிடமுடியும்? மேலும் ஊரடங்கின் போது பணிச்சுமை அதிகரித்தது. மற்றவர்களைப் போலல்லாமல், நாங்கள் வீட்டிலிருந்து நேரம் பார்க்காமல் வேலை செய்கிறோம், " என்றார் நிமிஷா.MOST READ: எப்பவும் சாப்பிட்டுகிட்டே இருக்கீங்களா? இந்த ஆபத்தான நோய் இருக்க வாய்ப்பிருக்கு...உஷாரா இருங்க..!

MOST READ: எப்பவும் சாப்பிட்டுகிட்டே இருக்கீங்களா? இந்த ஆபத்தான நோய் இருக்க வாய்ப்பிருக்கு...உஷாரா இருங்க..!

பெரும் ஊதியக் குறைப்பு

பெரும் ஊதியக் குறைப்பு

ஒரு பெரிய ஊதியக் குறைப்பில் பாதிக்கப்பட்டவர்களில் நிஷாவும் அவளது நண்பர்கள் போன்ற ஆயிரக்கணக்கானோர் உள்ளனர். பொருளாதாரம் ஸ்தம்பிதமடைந்துள்ளன என்ற உண்மையைப் பொறுத்தவரை, மக்கள் மூன்று வருடங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட காலத்தை ஈட்டக்கூடிய ஊதியத்துடன் வேலை செய்யவேண்டும். அவர்களின் சம்பளத்தில் 60% க்கும் அதிகமானவற்றை விட்டுவிட வேண்டிய மக்களும் உள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றுநோய் முடிந்தபின் நிலைமை தலைகீழாக மாறினாலும், ஊழியர்கள் தங்கள் வேலையை அல்லது வாழ்க்கையை மாற்ற முடிவு செய்தால், அவர்களின் ஊதிய தொகுப்பை அதிகரிக்க பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

அறிவுரை வார்த்தை

அறிவுரை வார்த்தை

பொருளாதார நிலை மிகவும் நிலையற்றது என்பதால், சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது புத்திசாலித்தனமாக இருக்கும். முதலில் முக்கியமாக, தேவையற்ற செலவுகளைத் தவிர்க்க முயற்சிக்கவும், உங்களுக்குத் தேவையில்லாத எதற்கும் பணம் செலவழிக்க வேண்டாம். மேலும், ஆபத்தான முதலீடுகளைத் தவிர்ப்பதுடன், உங்கள் பணத்தை பாதுகாப்பானது என்று உங்களுக்குத் தெரிந்த இடத்தில் வைக்கவும். பங்குகள் மற்றும் பரஸ்பர நிதிகள் போன்ற இழப்பை சந்திக்கும் அபாயம் இல்லை. இது நிதி வாரியாக செயல்படும் நேரம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Coronavirus Pandemic Might Set Back Your Career by 3 Years or More

Here we are talking about the how Coronavirus pandemic might set back your career by 3 years or more with this pay cuts and job loss.
Story first published: Saturday, May 9, 2020, 19:17 [IST]
Desktop Bottom Promotion