Just In
- 1 hr ago புடலங்காயை ஒருமுறை இந்த மாதிரி செய்யுங்க.. கிலோ கணக்குல செஞ்சாலும் காலியாயிடும்...
- 3 hrs ago உடலின் இந்த பகுதிகளில் அடிக்கடி வீக்கம் ஏற்படுதா? அப்ப உங்க கல்லீரல் மோசமான நிலையில் இருக்குன்னு அர்த்தம்...
- 3 hrs ago இந்த 4 ராசி பெண்களுக்கு அவர்களின் பெண் நண்பர்களை விட ஆண் நண்பர்களைத்தான் பிடிக்குமாம்... உங்க ராசி என்ன?
- 6 hrs ago 18 ஆண்டுகளுக்கு பின் நிகழும் ராகு சூரிய சுக்கிர சேர்க்கை: மார்ச் 31 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்..
Don't Miss
- News மாற்றுத்திறனாளிகள், 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் தபால் மூலம் வாக்கு அளிக்கலாம்.. எப்படி?
- Movies நிர்வாணமாக நிற்பதில் என்ன கஷ்டம்?.. ஆடுஜீவிதம் ஆடியோ லான்ச்சில் லேடி ஆங்க்கருக்கு மோகன்லால் பதிலடி
- Technology தட்டித்தூக்கும் விலை.. AMOLED டிஸ்பிளே.. 5ATM ரெசிஸ்டன்ஸ்.. 14 நாட்கள் பேக்கப்.. எந்த மாடல்?
- Finance தேர்தல் பத்திரம்: தனிநபர்கள் நன்கொடை செய்த ரூ.358.91 கோடி.. முதல் இடத்தில் யார் தெரியுமா..?
- Sports இவ்ளோ திறமையா? ரோஹித்தை வியக்க வைத்த இளம் வீரர்.. இதை மட்டும் செய்தால் டி20 அணியிலும் இடம் உறுதி
- Automobiles 10,000கிமீ கடந்து குமரி வந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்.. நம்பி வாங்கலாம் போலிருக்கே! இதோட விலை எவ்வளவாக இருக்கும்?
- Education கல்வித்தரத்தில் சமரசம் செய்துகொள்ளாத எம்ஓபி வைஷ்ணவ் மகளிர் கல்லூரி
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
தூய்மை பணியாளராக இருந்து சப்-கலெக்டரா மாறிய சிங்கப்பெண்ணை பற்றி உங்களுக்கு தெரியுமா?
தகுதிவாய்ந்த வேட்பாளர்களில் ஜோத்பூர் மாநகராட்சியில் துப்புரவாளராக பணியாற்றும் ஆஷா காந்த்ராவும் ஒருவர். இரண்டு குழந்தைகளின் தாயான ஆஷா விரைவில் துணை கலெக்டராக நியமிக்கப்படுவார்.
இந்த சமுகதாயத்தில் பெண் படித்து வேலைக்கு செல்வதே என்பது ஒரு மிகப்பெரிய சவாலாக உள்ளது. காலம் காலமாக ஒடுக்கப்பட்ட பெண் சமூகம் தற்போதுதான் படிப்பு, வேலை என தன் திறமைகளை வெளி உலகத்திற்கு காட்டி வருகின்றனர். இப்போது இருக்கும் இளைஞர்கள் மிகவும் துடிப்புடன் செயல்படுகிறார்கள். எத்தகைய இன்னல்களையும், கஷ்டங்களையும் கடந்து தன் கனவை லட்சியத்தை அடைய முயற்சிக்கிறார்கள். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரை சேர்ந்த ஆஷா காந்த்ரா என்ற பெண்ணை பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
தன் இரண்டு குழந்தைகளுடன் தனித்து வாழும் ஆஷா தூய்மை பணியாளராக பணி புரிந்து வந்தார். தற்போது, அவர் ராஜஸ்தான் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி, அதில் வெற்றி பெற்று சப்-கலெக்டராக நியமிக்கப்பட உள்ளார். இன்றைய இளைஞர் சமுதாயத்துக்கு முன்மாதிரியாக இருக்கும் ஆஷாவை பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.
ஆஷா காந்த்ரா
ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூர் நகராட்சியில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தவர் ஆஷா கந்த்ரா. இவர் இரண்டு குழந்தைகளுக்கு தாயாக இருக்கிறார். 8 ஆண்டுகளுக்கு முன்பே கணவரிடம் இருந்து பிரிந்து, விவாகரத்து பெற்று தனியாக வாழ்த்து வருகிறார். தனது 2 குழந்தைகளையும் காப்பாற்றும் வகையில் துப்புரவு பணியாளர் வேலை செய்து வந்தார். வறுமையிலும் தனது இரண்டு குழந்தைகளை வளர்க்கும் பொறுப்புடன் தனது ஐஏஎஸ் கனவையும் சுமந்துகொண்டு பணிகளுக்கு இடையே தனது பட்டப்படிப்பையும் தொடர்ந்து வந்தார்.
கடந்து வந்த பாதை
கணவர் இல்லாமல் ஒரு பெண் தனித்து வாழ்வது என்பது இச்சமூகத்தில் மிகவும் சவாலானது. பல்வேறு பிரச்சனைகளையும், அவமானங்களையும் சந்தித்த ஆஷா, தன் கனவை நிறைவேற்ற ஏராளமான தேர்வுகளை எழுதி வந்தவர். கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற ராஜஸ்தான் சிவில் சர்வீஸ் தேர்வை ( RAS) எழுதினார் ஆஷா. இந்த தேர்வு முடிவுகள் கொரோனா தொற்று பரவல் காரணமாக வெளியிடப்படாமல் இருந்தது. இந்நிலையில், துப்புரவு பணியையே தொடர்ந்து செய்து வந்தார்.
சப்-கலெக்டர்
2018 ஆம் ஆண்டின் ராஜஸ்தான் நிர்வாக சேவை தேர்வு அல்லது ஆர்ஏஎஸ் தேர்வின் இறுதி முடிவு நேற்று அறிவிக்கப்பட்டது. எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணலுக்கு தகுதி பெற்ற பின்னர் மொத்தம் 2,023 பேர் நியமனம் பெற பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். தகுதிவாய்ந்த வேட்பாளர்களில் ஜோத்பூர் மாநகராட்சியில் துப்புரவாளராக பணியாற்றும் ஆஷா காந்த்ராவும் ஒருவர். இரண்டு குழந்தைகளின் தாயான ஆஷா விரைவில் துணை கலெக்டராக நியமிக்கப்படுவார். இப்போது, இளம் தலைமுறையினர் அனைவருக்கும் ஆஷா முன்மாதிரியாக உள்ளார்.
மகிழ்ச்சி
முடிவு அறிவிக்கப்பட்ட பிறகு ஆஷாவின் மகிழ்ச்சிக்கு எல்லையே கிடையாது. அவர் தேர்வில் தேர்ச்சி பெற்றது மட்டுமல்லாமல், இளம் பெண்களுக்கும் ஒரு முன் மாதிரியாக தேர்ச்சி பெற்றுள்ளார். சமூக ஊடகங்களிலும் மற்றும் பல்வேறு தரப்பிலிருந்தும் ஆஷாவுக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
ஆஷாவின் பேட்டி
தனது வெற்றி குறித்து பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்த ஆஷா "சமூகத்தில் எதிர்கொண்ட பாகுபாடுதான் இறுதியில் தனது வாழ்க்கையை மாற்றுவதற்கான உத்வேகமாக அமைந்தது. நான் அடைந்த வெற்றி என்னுடைய கடின உழைப்பின் காரணமாக நடந்தது என்று நம்புகிறேன். நான் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியாக ஆக விரும்பினேன். ஆனால், வயது வரம்பு காரணமாக ஐஏஎஸ் தேர்வில் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை. எனக்கு கிடைத்த இந்த புதிய தகுதி (துணை கலெக்டர்) மூலம் சிறந்த சமுதாயத்தை உருவாக்குவதே என் நோக்கம்" என்று கூறினார்.