Just In
- 26 min ago நீங்க போடுற டீ அமிர்தம் மாதிரி இருக்கணுமா? அப்ப டீ போடுறப்ப இந்த தவறுகளை தெரியாம கூட பண்ணிராதீங்க...!
- 41 min ago குழந்தையின்மைக்கு இந்த பிரச்சனைகள் எல்லாம் காரணமாக இருக்கலாம்.. கவனியுங்கள்..!
- 1 hr ago புதன் மீன ராசிக்கு நேராக செல்வதால் இந்த 5 ராசிக்காரர்களின் வாழக்கையில் அதிர்ஷ்டம் கொட்டப்போகுதாம்...!
- 2 hrs ago உங்கள் தலைமுடி வலுவாக வளரனுமா? அப்போ இதை சாப்பிடுங்கள்..!
Don't Miss
- News IQவை டெஸ்ட் செய்யலாமா? இந்த படத்தில் குகை மனிதருக்குள் மறைந்திருக்கும் இன்னொரு மனித முகம்!
- Sports இனி 14 கோடி சிஎஸ்கே வீரருக்கு டாடா பைபை.. பழைய ஆல் - ரவுண்டர் பக்கம் திரும்பிய பிளெம்மிங்
- Movies Trisha: 20 ஆண்டுகள் கழித்து மீண்டும் அதே கொண்டாட்டம்.. வீடியோ வெளியிட்ட திரிஷா!
- Finance TikTok: கங்கணம் கட்டுக்கொண்டு சுத்தும் அமெரிக்கா.. 70 லட்சம் நிறுவனங்களுக்கு ஆப்பு..!!
- Automobiles ஓலா டவுசரை கழட்ட திட்டம் போடும் பஜாஜ்! இவ்வளவு கம்மி விலைக்கு சேத்தக் இவி வரப்போகுதா?
- Technology கடையை இழுத்து மூடும் OnePlus.. இனி தமிழ்நாட்டில் ஒன்பிளஸ் போன் வாங்க முடியாதா? உண்மை என்ன?
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
பாலியல் தாக்குதல்: தங்கள் முதல் அனுபவம் குறித்து பெண்கள் கூறும் அதிர்ச்சி தகவல்கள்!
பாலியல் தாக்குதல்: தங்கள் முதல் அனுபவம் குறித்து பெண்கள் கூறும் அதிர்ச்சி தகவல்கள்!
சமீபத்தில் என்றாவது நீங்கள் பத்திரிக்கையில், ஆன்லைன் செய்திகளில், முகநூலில் கற்பழிப்பு, பாலியல் துன்புறுத்தல்,பாலியல் தாக்குதல் போன்ற செய்திகள் இல்லாமல் ஒரு நாள் கடந்து வந்ததாக நினைவிருக்கிறதா? வாய்ப்பே இல்லை. எங்கே பார்த்தாலும் சிறுமி, பள்ளி மாணவி, கூட்டு பலாத்காரம், சொந்த உறவினரே பாலியில் கொடுமை என்ற செய்திகள் குவிந்து கிடக்கின்றன.
ஆண் என்று சொல்லிக் கொள்வதற்கே வெட்கப்படும் அளவிற்கு அத்தனை கொடுமைகள், அத்தனை வழக்குகள்... ஊடகங்களை வந்தடைந்த செய்திகள் இத்தனை என்றால்.. தங்களுக்குள்ளேயே மூடி மறைத்து வைத்துக் கொள்ளப்பட்ட சம்பவங்கள் எத்தனையோ...?
தங்கள் வாழ்வில் நடந்த முதல் பாலியல் தாக்குதல் குறித்து பெண்கள் சிலர் பகிர்ந்து கொண்ட சம்பவங்கள்... இதை படித்த பிறகு... நம் வீட்டு பெண்களை, குழந்தைகளை யாரோ மூன்றாம் நபர் மட்டும் தான் பாலியல் தாக்குதலுக்கு உட்படுத்துகிறார் என்ற எண்ணம் சுக்குநூறாகிவிடும்....
கவிஞர்!
அப்போது எனக்கு 7,8 வயதிருக்கும். அப்போது என் வீட்டருகே ஒரு கவிஞர் வசித்து வந்தார். அவருக்கு வயது 40 இருக்கும். எப்போதெல்லாம் நான் வாசலில் விளையாடிக் கொண்டிருக்கிறேனோ.. அப்போதெல்லாம் என்னை அவர் வீட்டுக்குள் அழைத்து இனிப்பு வழங்குவார்.
அப்போது என்னை அவரது மடியில் தூக்கி அமர்த்தி வைத்துக் கொண்டு தொடை மற்றும் தொடை நடுவிலான பகுதிகளில் தீண்டுவார். அந்த வயதில் அது தவறென எனக்கு தெரியவில்லை. சில காலம் புரிந்து தான் அவர் என்னிடம் தவறாக நடந்துக் கொண்டு வந்திருக்கிறார் என்பதை அறிந்தேன்.
நடுரோட்டில்...
நான் அப்போது ஒன்பதாம் வகுப்பு பயின்று வந்தேன். எனக்கு 14 வயது. ஒருமுறை பள்ளி முடிந்து வீட்டுக்கு நடந்து வந்துக் கொண்டிருந்தேன். அப்போது நடுவே ஒரு தெருவில் இடையில் வந்த ஆண் ஒருவன் தனது ஆணுறுப்பை என் முன் எடுத்துக் காட்டினான். அதிர்ச்யுற்ற நான் வேகவேகமாக வீட்டுக்கு சென்றுவிட்டேன்.
கூட்ட நெரிசலில்
அது எனது பதின்வயது பருவம். சரோஜினி நகர் என்ற பகுதியில் நான் நடந்து சென்றுக் கொண்டிருந்தேன். அந்த பகுதி மிகவும் கூட்ட நெரிசலாக இருந்தது. நடக்க கூட இடமில்லாத அளவிற்கு கூட்டமாக இருந்தது. அப்போது என் எதிரே வந்த ஆண் ஒருவன் என் மார்பு பகுதியை கிள்ளி சென்றான். அத்தனை பெரிய கூட்டத்தில் என்னால் அவனை பிடிக்கவும் முடியவில்லை, காணவும் முடியவில்லை.
ஷாப்பிங்கின் போது...
அன்று என் உறவுக்காரர் ஒருவரது திருமணத்திற்கு செல்ல ஆடை வாங்குவதற்காக அம்மாவுடன் ஷாப்பிங் சென்றிருந்தேன். அம்மா மேல ஆடை ரகங்களை காண சென்றிருந்தார். நான் கீழே துணிகளை பார்த்துக் கொண்டிருந்தேன்.
நான் கீழ் தளத்திலேயே தண்ணீர் வைக்கப்பட்டிருக்கும் இடத்தில் இருந்தேன். அப்போது என் அருகே அங்கே அவனது நீர் குடிக்க வந்த ஆண் ஒருவர், டம்ளரை எடுப்பது போல என் பேண்ட் ஜிப்பை அவிழ்க்க முயன்றார்.
சுய இன்பம்...
நாங்கள் அதுவரை தனி இருந்த காலனியை காலி செய்துக் கொண்டு புதிய காலனிக்கு குடி பெயர்ந்தோம். என் வயது 12 இருக்கும் என்று கருதுகிறேன். அப்போது எங்கள் ஃபிளாட் அருகே இருக்கும் ஒரு நடுவயது ஆணை கண்டேன். அந்த அங்கிள் என்னை ஒருமுறை தூரத்தில் இருந்து பார்த்து கொண்ட அவரது பேண்டுக்குள் கைவிட்டு ஏதோ செய்துக் கொண்டிருந்தார். நான் அதை கவனிக்காமல் சென்றுவிட்டேன்.
மற்றொரு நாள், நான் பால்கனி ஏரியாவில் இருக்கும் போது, என்னை பார்த்தப்படியே அவர் அணிந்திருந்த ஷார்ட்ஸை சற்று கீழே இறக்கி, அவரது ஆணுறுப்பு தெரியும்படி செய்து சுய இன்பம் காண துவங்கினார். சற்றும் எதிர்பாராத தருணத்தில் இது நடந்தது, என் வாழ்வில் மிக அசௌகையரியமான நிகழ்வாக அமைந்தது.
அப்பாவின் நண்பர்
அவர் என் அப்பாவின் தோழர். எங்கள் வீட்டுக்கு இரவு விருந்துக்கு வந்திருந்தார். அவர் எனக்கு மிகவும் பரிச்சயம் ஆனவர். அனைவரும் ஆங்காங்கே பேசி கொண்டிருக்க. இவர் என்னிடம் வந்து பேச துவங்கினார். திடீரென என்னை தவறான முறையில் தீண்டினார். அதை நான் அவரிடம் இருந்து சற்றும் எதிர்பார்க்கவில்லை.
லிப்டில்
அப்போது நான் பள்ளயில் படித்து வந்தேன். நாங்கள் தங்கி இருப்பது ஒரு அடுக்குமாடி குடியிருப்பில். எப்போதுமே லிப்ட் தான் பயன்படுத்துவோம். ஒருநாள் பள்ளி முடிந்து வீடு திரும்பும் போது லிப்டில் ஏறினேன். அப்போது நடுவே லிப்டில் ஒரு நபர் ஏறினார்.
எங்களை தவிர வேறு யாரும் லிப்டில் இல்லை என்ற போதிலும் அவர் என் அருகே நெருக்கமாக நின்றுக் கொண்டிருந்தார். திடீரென அவர் என் அந்தரங்க பகுதியை கைகளால் தீண்டிவிட்டு லிப்டில் இருந்து ஓடிவிட்டார். இந்த சம்பவத்திற்கு பிறகு சில நாட்கள் நான் வீட்டில் இருந்து வெளியே எங்கும் போகவில்லை. உலகிலேயே மிகவும் கொடுமையான விஷயமாக நான் கருதியது அந்த சமபவத்தை தான்.