For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

புதுமையான வரதட்சணை கேட்டு பெண் வீட்டாரை வியப்பில் ஆழ்த்திய மாப்பிளை, வேர்ல்டு லெவல் வைரலானார்!

புதுமையான வரதட்சணை கேட்டு பெண் வீட்டாரை வியப்பில் ஆழ்த்திய மாப்பிளை, வேர்ல்டு லெவல் வைரலானார்!

By Staff
|

சுற்றுப்புறச்சூழல் விழிப்புணர்வை அதிகப்படுத்த வேண்டும் என்று விரும்பிய ஓடிஸா பள்ளி ஆசிரியர் ஒருவர் தனது வருங்கால மாமனாரிடம் வினோதமான வரதட்சனை கேட்டு உலக அளவில் ட்ரெண்ட் லிஸ்டில் இடம் பிடித்துள்ளார்.

இவர் தனது குழந்தை பருவத்தில் இருந்து பசுமை திருமணம் தான் செய்துக் கொள்ள வேண்டும் என்ற விருப்பத்தில் இருந்துள்ளார். கடந்த ஜூன் 21ம் தேதி ஓடிஸா கேந்த்ரபரா கடற்கரை கிராமத்தை சேர்ந்த சரோஜ்கண்டா பிஸ்வால் தனது மாமனாரிடம் இருந்து வரதட்சணையாக ஆயிரத்து ஒரு மரக்கன்றுகளை பெற்றுள்ளார். சரோஜ்கண்டா ஜகன்னாத் வித்யபித் என்ற பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் ஆவார்.

Odisha Teacher Who Demanded Tree Saplings in Dowry

Image Source: thelogicalindian

ஆரம்பத்தில் மாப்பிளை வரதட்சணை வேண்டாம் என்பதை அறிந்து திடுக்கிட்டிருக்கிறார் மாமனார். ஆனால், இதெல்லாம் சமூகத்தில் ஒரு கடமை தானே என்று கூறி மாப்பிளையை ஆசுவாசப்படுத்தி இருக்கிறார்கள் உறவினர்கள். ஆனால், மாப்பிள்ளை இப்படி ஒரு வினோதமான வரதட்சணை கேட்டவுடன் உறவினர்கள் அனைவருமே வியப்பில் ஆழ்ந்தனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Odisha Teacher Who Demanded Tree Saplings in Dowry

In an attempt to spread environmental awareness, an Odisha school teacher asked for an unusual present from his would-be father-in-law. The 32-year-old demanded 1,001 tree saplings as a token of gift to the couple. He says it was his childhood dream to have a “green wedding”.
Story first published: Monday, July 2, 2018, 18:58 [IST]
Desktop Bottom Promotion