Just In
- 50 min ago தினமும் 10 பவுன் தங்கத்தை தூசியாக உமிழும் அதிசய எரிமலை... இந்த எரிமலையா இல்ல தங்கச்சுரங்கமானே தெரிலயே...!
- 1 hr ago இந்த அறிகுறிகள் காலை வேளையில் தெரியுதா? அப்ப கல்லீரல் ஆபத்தில் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்..
- 2 hrs ago குரு பகவானால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
- 2 hrs ago மனித இரத்தத்தை விரும்பி சுவைக்கும் ஆபத்தான பாக்டீரியா: ஆய்வில் தெரியவந்துள்ள அதிர்ச்சியளிக்கும் செய்தி...!
Don't Miss
- News கிருஷ்ணகிரியில் விழுந்த "அடி".. சரியான பதிலடி தந்த "வேங்கைவயல்".. ஒருத்தரும் ஓட்டுப்போட வரலயாமே
- Sports தீபக் சஹர் காயத்தின் நிலை என்ன? ஷர்துல் தாக்கூருக்கு மீண்டும் வாய்ப்பா? சிஎஸ்கே பயிற்சியாளர் பதில்!
- Automobiles போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- Finance ஓரே நாளில் 4.2 கோடி சம்பாதித்த நாராயணமூர்த்தி-யின் 5 மாத பேரன்.. எப்படி..?
- Movies பலாப்பழம் ஏன் இருட்டா இருக்கு.. வாக்குச்சாவடியில் மன்சூர் அலிகான் வாக்குவாதம்!
- Technology இப்படியொரு புரொஜெக்டர் யாரும் பார்த்ததில்லை.. 32GB மெமரி.. 1080P ரெசல்யூஷன்.. எந்த மாடல்? என்ன விலை?
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஈவிரக்கமின்றி 300 உயிர்களை கொன்று குவித்த இந்தோனேசிய மக்கள் - (வீடியோ)
ஈவிரக்கமின்றி 300 உயிர்களை கொன்று குவித்த இந்தோனேசிய மக்கள் - (வீடியோ)
ஒரு உயிர் பலிக்கு ஈடு செய்ய, முன்னூறு முதலைகளை கொன்று குவித்து ஒரு ஈவிரக்கமற்ற படுகொலை செயலை செய்துள்ளனர் இந்தோனேசிய மக்கள். இந்தோனேசியாவில் ஒரு முதலை பண்ணைக்குள் நுழைந்து அங்கிருந்த 292 முதலைகளை கத்தி, சுத்தியல், இரும்பு கம்பிகள் போன்ற ஆயுதங்களை கொண்டு கொன்று குவித்துள்ளனர்.
சமூக ஊடகங்களில் பரவி வரும் அந்த கொலை குவியல் பார்ப்பவர்களை குலைநடுங்க செய்கிறது. முதலை கொடூரமான விலங்காக இருப்பினும், முதலை மீது தான் மக்கள் அனுதாபப்படுகிறார்களே தவிர, அந்த மக்கள் மீதல்ல.
தாக்குதல்!
அடிக்கடி அந்த பக்கமாக வந்து செல்லலும் மக்களை முதலைகள் தாக்கி வந்துள்ளன. சமீபத்தில் ஒரு நபர் பண்ணையில் இருந்த முதலை ஒன்று தாக்கி அவர் இறந்துவிட்டார்.
இதனால் கொடுங்கோபம் அடைந்த அப்பகுதியை சேர்ந்த இந்தோனேசிய மக்கள், கையில் கிடைத்த ஆயுதங்களை எடுத்து சென்று, பண்ணையில் இருந்த மொத்த முதலைகளையும் கொடூரமாக தாக்கி கொன்று குவித்துள்ளனர்.
சோகம்!
சமூக தளங்களில் கொன்று குவிக்கப்பட்ட அந்த முதலைகளின் உடல்களை கண்டு மக்கள் வேதனை அடைந்துள்ளனர் இது ஒரு மனித வெறிப்பிடித்த செயல். என்ன இருந்தாலும் விலங்குகளை இப்படியா கொன்று குவிப்பது? என்று பலரும் கருத்துக்கள் பதிவு செய்து வருகிறார்கள். இந்த நூற்றாண்டின் ஒரு கொடூரமான மனிதன்மையற்ற செயலாக இது காணப்படுகிறது.
எங்கே?
மேற்கு பப்புவா எனும் இந்தோனேசிய பகுதியில் தான் இந்த கொடுஞ்செயல் நிகழ்ந்துள்ளது. ஒருவரை முதலை தாக்கி கொன்றதால், அருகே இருந்த முதலை பண்ணையில் வளர்க்கப்பட்டு வந்த 292 முதலைகளையும் அப்பகுதியை சேர்ந்த மக்கள் கொடூரமாக தாக்கி கொன்றிருக்கிறார்கள்.
எப்போது?
விலங்குகளுக்கு எதிரான இந்த கொடுஞ்செயல் ஜூலை 16 அன்று இந்தோனேசியாவின் மேற்கு பப்புவா எனும் பகுதியில் நடந்துள்ளது. மக்கள் கொன்று குவித்த அந்த 292 முதலைகளையும், இந்தோனேசியா அரசாங்கம் ஒரே இடத்தில் குழி தோண்டி ஒட்டு மொத்தமாக அந்த உடல்களை எரித்துள்ளனர்.
மக்கள் கொந்தளிப்பு!
ஒரு உயிர் பலியானதை காரணமாக கொண்டு, இந்தோனேசியாவில் நூற்றுக்கணக்கானமுதலைகள் மக்கள் கொடூரமாக கொன்று குவித்துள்ள இந்த நிகழ்வை கண்டு, உலக மக்கள் கொந்தளித்துள்ளனர். உலகின் பல முன்னனி செய்தி சேனல்கள் முதற்கொண்டு, சாமானிய மனிதர்கள் உட்பட பலரும் இந்த செயலுக்கு கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர்.
அறிவிலித்தனம்!
அறிவிலித்தனமாக முதலை பண்ணை இடத்திற்கு சென்று முதலையால் தாக்கப்பட்டு இறந்த நபருக்காக ஒரு பகுதியை சேர்ந்த அனைவரும் முட்டாள்தனமான சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். இது ஒட்டுமொத்தமாக அவர்களின் அறிவிலித்தனத்தை தான் வெளிப்படுத்துகிறது. ஒரு உயிருக்காக முன்னூறு உயிர்களை பலி வாங்குவது என்பது சகித்துக் கொள்ள முடியாத குற்றம். மனிதர்களின் உயிர்களுக்கு மட்டும் தான் மதிப்புண்டா? விலங்குகள் உயிர்கள் எல்லாம் அநாவசியமாக போய்விட்டதா?
கொடூர மிருகம்!
இந்த உலகிலேயே கொடூரமான மிருகம் மனிதர்கள் தான். இதர மிருகங்கள் கூட தங்களுக்கு பசிக்கும்போது மட்டும் தான் வேட்டையாடி உயிர்களை கொல்கிறது. மனிதன் மட்டுமே, தனது ஆசைகளுக்காக, பொழுதுபோக்குக்காக, ஆடம்பரத்திற்காக, கோபத்தை தீர்த்துக் கொள்ள, கேளிக்கையாக என இதர உயிர்களை அநாவசியமாக கொன்றுக் குவிக்கிறான்.