Just In
- 1 hr ago 18 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- 2 hrs ago Garlic Peels: பூண்டின் தோலில் இவ்வளவு நன்மைகளா? என்னென்ன-ன்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..
- 2 hrs ago Hair Care: பளபளப்பான மற்றும் வலிமையான முடி வேணுமா? கற்பூரத்தை இப்படி யூஸ் பண்ணுங்க... சர சரனு வளரும்...!
- 3 hrs ago 3 முள்ளங்கியும், 1 தக்காளியும் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு செமயா இருக்கும்..
Don't Miss
- News சென்னையை அதிர வைத்த போலி நகையை அடகு வைக்கும் கும்பல்.. காரைக்குடியில் மொத்தமாக சிக்கியது எப்படி?
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
இந்த பூவிழி வாசலிலே பேபி, இப்ப என்ன பண்றாங்கன்னு தெரியுமா?
இந்த பூவிழி வாசலிலே பேபி, இப்ப என்ன பண்றாங்கன்னு தெரியுமா?
அச்சம், பாசம், அழுகை எல்லா உணர்வுகளையும் பூவிழி வாசலிலே படத்தில் அந்த குழந்தை படம் முழுக்க வெளிகாட்டி பேசியே ஒரே வார்த்தை... அல்ல எழுத்து... "லா.. லா..." மட்டும் தான். காது கேளாத, வாய் பேச முடியாத கதாபாத்திரம்.
இன்றும் பூவிழி வாசலிலே என்ற வார்த்தை கேட்டவுடன் முதலில் நினைவிற்குக் வருவது இந்த குழந்தையின் பால் வடியும் முகமும், அந்த அசத்தல் நடிப்பும் தான்.
சரி, இந்த குழந்தை யார், இவர் இப்போது என்ன செய்துக் கொண்டிருக்கிறார் என உங்களுக்கு தெரியுமா? டிவி, சினிமா உலகை தாண்டி வெகு சிலருக்கு மட்டுமே இவர் யார் என்று தெரியும்.
ஏன், உங்களுக்கும் இவரை தெரியும். ஆனால், இவர் தான் அந்த பூவிழி வாசலிலேவில் நடித்த குழந்தை என்பதை தவிர்த்து...
சுஜிதா!
தமிழ், மலையாளம் என இரு மொழிகளிலும் பல்வேறு சீரியல்கள் மற்றும் திரைப்படங்களில் நடித்துள்ள, நடித்துக் கொண்டிருக்கும் சுஜிதா தான் பூவிழி வாசலிலே படத்தில் நடித்த அந்த குழந்தை.
41 நாட்களில்!
இவர் பிறந்த 41வது நாளில் இருந்தே நடிக்க துவங்கிவிட்டார் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம்! இவர் பிறந்தது ஜூலை 12, 1983ல். அதே ஆண்டில், தான் பிறந்த 41வது நாளில் இவர் அப்பாஸ் எனும் மலையாள படத்தில் நடிகை கே.ஆர். விஜயாவின் பேத்தியாக நடித்திருந்தார்.
சொந்த ஊர்!
சுஜிதா கேரளாவின் திருவனந்தபுரத்தை பூர்வீகமாக கொண்டவர். இவருக்கு ஒரு அண்ணனும், தங்கையும் இருக்கிறார்கள். இவரது பெற்றோர் டி.எஸ் மனு மற்றும் ராதா.
இயக்குனரின் தங்கை!
இவரது அண்ணன் சூர்யா கிரண் எனும் இயக்குனர் ஆவார். சூர்யா கிரண் நடிகை கல்யாணி என்கிற காவேரியை திருமணம் செய்துக் கொண்டவர்.
இவர் காசி படத்தில் விக்ரமிற்கு ஜோடியாகவும், சமுத்திரம் படத்தில் சரத் குமாரின் தங்கையாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
திருமணம்!
சுஜிதா 2012ல் விளம்பர தயாரிப்பாளர் தனுஷ் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு ஒரு குழந்தை இருக்கிறது.
சினிமா என்றால் என்ன, கேமரா என்றால் என அறியும் முன்னரே நடிக்க துவங்கியவர் சுஜிதா.
விருதுகள்!
சுஜிதா 1987 மற்றும் 1988ம் வருடத்திற்கான சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான நந்தி விருதை வென்றிருக்கிறார்.
2011ல் ஆசியாநெட் டிவி விருதுகளில் சிறப்பு ஜூரி விருதை ஹரிச்சந்தனம் என்ற தொடருக்காக பெற்றார்.
இது போக, இந்தியன் எக்ஸ்பிரஸ், ஹீரோ ஹோண்டா விருதும் இவர் பெற்றுள்ளார்.