Just In
- 1 hr ago வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- 2 hrs ago உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- 5 hrs ago முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- 6 hrs ago 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
Don't Miss
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- News வாரிசு அரசியலால் ஈரோடு மதிமுக எம்பி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.. ஸ்டாலின், வைகோவை சாடிய தமிழிசை
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
அக்ஷ்யத திரித்யை அன்று நீங்கள் அவசியம் சொல்ல வேண்டிய ஸ்லோகங்கள்!!
அட்சய திரிதியை நாளானது மகாலட்சுமி தேவியை வணங்குவதற்கான சிறந்த நாளாக திகழ்கிறது. செல்வத்தின் கடவுளான ஸ்ரீ மகாலட்சுமி தேவியை, அன்று தன்னை வணங்கும் பக்தர்கள் அனைவருக்கும் செல்வவளத்தை தந்தருள்வார்.
அட்சய திரிதியை இந்துக்களின் பண்டிகைகளில் மிகவும் மங்களகரமான நாள். இந்த நாளில் தொடங்கிய அனைத்துக் சுபக்காரியங்களும் மற்றும் தொழில்களும் சிறப்பாக நடைபெறும் என்பது ஒரு நம்பிக்கை. அதுவும் இந்த நாளில் மட்டும் எந்த ஒரு நல்ல நேரமும் பார்க்கத் தேவை இருக்காது என்பர். அட்சய திரிதியை அன்று நாள் முழுவதுமே சிறந்த நாள் தான் என்றும் கூறுவர். இவை அனைத்துமே இந்திய மக்களின் ஒரு சிறந்த நம்பிக்ககையாகவே பின்பற்றப்பட்டு வருகின்றது.
இந்த நாளில் எந்த நல்ல காரியமோ அல்லது 'கர்மா' செய்தாலும் அது பத்து மடங்கு பலனைக் கொடுக்கும் என்று நம்பப்படுகிறது. இந்த கிடைக்கும் அனைத்தும் காலம் காலமாக அதிகரிக்குமே தவிர குறைய வாய்ப்பில்லை என்றும் நம்பப்படுகிறது.
தேவலோகத்தில் செல்வதிற்கு அதிபதியாக கூறப்படுபவர் "குபேரர்". அந்த குபேரரே அந்த செல்வ நிலையை அடைய மகாலட்சுமி தேவி தான் என்று கூறினால் நீங்கள் நம்புவீர்களா? ஆமாங்க, அது தான் உண்மை.
குபேரர் அவர்கள் அட்சய திரிதியை அன்று மகாலட்சுமி தேவியை நினைத்து துதித்தார். அதனால் மகாலட்சுமி தேவி அவருக்கு ஆசி வழங்கி, குறையாத செல்வம் நிலைக்க வரம் அளித்தார்.
இந்த கட்டுரையில் ஸ்ரீ மகாலட்சுமி தேவியை துதித்து வழிபடுவதற்கான மகாலட்சுமி ஸ்தோத்திரம் கொடுக்கப்பட்டுள்ளன. அட்சய திரிதியை அன்று இந்த ஸ்தோத்திரங்களை சொல்லி மகாலட்சுமி தேவியைத் துதித்து அவரின் ஆசியுடன் செல்வ வளத்தை பெறலாம்.
இந்த ஸ்தோத்திரங்களை அட்சய திரிதியை அன்று மட்டும் தான் கூற வேண்டும் என்பதல்ல. தினமும் ஒரு முறை அதை சொல்லி வந்தால் வாழ்வில் எந்த ஒரு பணக் கஷ்டமும் ஏற்படாமல் நிம்மதியாக வாழலாம்.